08 January 2019

இப்தார்

- மதியன்பன் -

இன்று (09/07/2016) காத்தான்குடியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் விசேட கவியரங்கில் "இப்தார் " எனும் தலைப்பில் அடியேன் பாடிய கவிதை. முழுமையாக ...


(முடியும் வரை கேட்ட பலர் பாராட்ட இன்னும் சிலர் முகம் சுழித்துக் கொண்டார்கள்)


இறையருளைச்
சுமந்து வந்த இப்தார்
எமை விட்டுப் பிரிந்து போனது
அதனால்
உள்ளம் எரிந்து போனது

03 March 2018

எரியும் தேசத்தில் அவர்களும். நானும்...

வலம்புரி கவிதாவட்டம் இன்று (01 / 03 /2018) கொழும்பில் நடாத்திய அதன் 46 ஆவது பெளர்ணமி கவியரங்கில் அடியேன் வாசித்த கவிதை

எரியும் தேசத்தில் அவர்களும். நானும்...


(மதியன்பன்)



விரிந்த உலகம் என்பதால்
நான்,
இறக்கைகளை விரித்துப் பறக்கிறேன்

இயற்கையின் அழகு, வனப்பு
எல்லாமே
இயல்பு நிலை இழந்து கிடக்கிறது

எட்டிப் பார்க்கிறேன்
ஓரிடம்
பற்றி எரிவது தெரிகிறது
என்
இறக்கைகளை கொஞ்சம் பணிக்கிறேன்

பொழுதுகள் போகும் ஆனால் போகா துங்கள் உருவம்.

கடந்த 06.09.201 அன்று 

எமைவிட்டுப் 

பிரிந்து  இறையடி 

சேர்ந்த ஜூனைத் ஆசிரியர் 

பற்றி அடியேனின் அனுதாப 

வரிகள்

- மதியன்பன்


அன்பினால் எம்மை ஆளும்

ஆசானே..! ஜூனைத் நீங்கள்

இன்னமும் எங்கள் நெஞ்சில்

இனிதாக உள்ளீர்இ ஆனால்

கண்களால் கண்டு கொள்ள

காலமோ வைக்க வில்லை

உண்மையில் கதறு கின்றோம்

உங்களை இழந்து நாங்கள்.

25 July 2016

கலாவுக்கொரு கவி வாழ்த்து


தடாகம் கலை இலக்கிய 
வட்டத்தின் ஏற்பாட்டில் இன்று 
(24.07.2016) கொழும்பில் 
இடம்பெற்ற மலேசிய சாந்த 
கலா அவர்களின் 'கரைசேராத 
படகு' என்ற கவிதை நூல் 
வெளியீட்டு விழாவில்அடியேன் பாடிய வாழ்த்துக் கவிதை


மதியன்பன்


கொழும்பு வீதியில்
குரும்பை ஒன்று குடித்தது போல்
குற்றால அருவியில்
குளித்து விட்டு வந்தது போல்
குழுமை
என் இதயத்துள் குடியிருக்கிறது.

இலங்கை தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மலேசியாவுக்குச்; சென்ற இலங்கை எழுத்தாளர்களுக்கு 26.05.2016 அன்று மலேசியா தமிழ் சங்கம் வழங்கிய பிரியாவிடை மற்றும் இரவு விருந்துபசார நிகழ்வின்போது எழுதி வாசிக்கப்பட்ட கவிதை

மதியன்பன் - இலங்கை


தலைவி ஹிதாயாவின் 
தலைமையில்
தடாகத் தாமரைகள்
இப்போது
மலேசிய மண்ணில் மலர்ந்திருக்கிறது


இது
இரவின் இனிய வேளை
இலக்கியத்தால்
எல்லோரும் இணைந்த வேளை
மலேசியாவின்
தமிழ் சங்கம் விருந்து தந்த வேளை

26 March 2016

வலிக்கிறது...! வாங்களேன் உம்மா


காத்தான்குடியில் பத்து வயது சிறுமி அவரது வளர்ப்புத்தாயால் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தின் நினைவாக எழுதிய கவிதை

வலிக்கிறது...! வாங்களேன் உம்மா

(மதியன்பன்)

வலிக்கிறது உம்மா...
கனவிலே வந்தாவது
என்னை
கட்டித் தழுவுங்கள் ஒருமுறை...!

சொல்ல முடியாத இடத்தில்
எனக்கு
சூடு வைத்து சுகப்படுத்துகிறார்கள்
என்றாலும்
வலிக்கிறது உம்மா...!

14 November 2015

கடற்கரை மணலில் அவளும், நானும்..!

மதியன்பன


இன்னும் அவள்என் இதயத்துள்
இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்.


கையைப் பிடித்து
காசு கொடுத்து
கன்னத்தை வருடி விட்டு
கதை பேசிய காலமது..!

கடலோரக்
காற்றுக்குத் தெரியும்
என்
உடல் பசிதீர்த்த
அந்த உறவின் வரலாறு...!

மழை வருவதும் தவளைகள் கத்துவதுமாய்..

(மார்க்க அறிஞர் PJ வருகையும், எதிர்ப்பலைகளும்)
(மதியன்பன்)
மேகம் கறுத்த போதே
சில தவளைகள்
மெல்லத் தலை நீடடின...
ஒப்பாரி வைப்பதற்கு
ஆமைகளையும், பாம்புகளையும்
அவை
அருகிலே வைத்துக் கொண்டன...

02 October 2015

அலையோடு சங்கமித்த ஐலான் குர்தி

(மதியன்பன்)

எலும்புகள்
இறுகி உடைவதையும்
உதிரம்
உறைந்து போவதையும்
என்னால் உணர முடிகிறது.

தீயில் விழுந்த புழுவாய்
நானிப்போது 
திணறிக் கொண்டிருக்கிறேன்.

மீன் பிடித்தல்

மதியன்பன்
இப்போது
தோணா என்ற பெயரையே
தோண்டிப் புதைத்து விட்டார்கள்
அப்போதெல்லாம்
அதில்தான் நாங்கள் மீன் பிடிப்போம்.
மாலையானால்
தூண்டில் இரை சகிதம்
இடுப்புத் தண்ணிக்குள்
இறங்கி நிற்பதில் அலாதிப் பிரியம்.

புங்குடுதீவுப் பூவே..வித்தியா..!

(மதியன்பன்)


புங்குடுதீவுப் பூவே..!
உன்னை
பங்கீடு வைத்துப் பசியாறியிருக்கிறார்கள்
இந்தப் பரதேசி நாய்கள்

ஒரு
பள்ளிப் புத்தகம் நீ..
உன்னைப் பாதுகாக்க வேண்டியவர்களே
மாறிமாறி
பக்கம் பக்கமாக கிழித்திருக்கிறார்கள்

28 November 2014

வெல்லப் போவது யாரு...?

 மதியன்பன்

அதிகார ஆட்டமும்

ஆட்பலமும் பணத்திமிரும்
வென்று கொடுக்கும் என்று
இவர்கள்
வீணாக நம்புகிறார்கள்..
கூட்டங்கள் போட்டு
கூடிக்கூடிப் பேசுகிறார்கள்
அனல் தெறிக்கும் உரைகளை
ஆற்றி முடிக்கிறார்கள்..

24 November 2014

காக்கைக்கூடும் - கருங்குயில்களும்

 மதியன்பன்

குயில்கள்

கூட்டை விட்டு வெளியேறியதால்
குழப்பத்தில் கிடக்கிறது காக்கைகள்
எஞ்சிருக்கும் குயில்கள்
ஏமாறாதிருக்க
புதிய இருக்கைகளையும்
போட்டுக் கொடுக்கிறது அவைகள்.

15 November 2014

ராத்திரியின் ரகசியங்கள்.

மதியன்பன்

நடுச்சாமம்
நச்சரிப்பில் கிடக்கிறாள் மனைவி
வானம்
அழுது முடித்திருந்தது
ஆனாலும்
ஈரம் காய்நிருக்கவில்லை.

தொட்டுத் தேடுகிறேன்
இருட்டென்பதால்
அகப்படவில்லை அந்த விளக்கு...

27 September 2014

சிதைக்கப்பட்ட செந்தாமரை ஷீமா..!

மதியன்பன்

ஆத்தோரம் மடுத்தோண்டி

அதில்
ஐரி மீன்களை ஓடவிட்டு
பிடித்து விளையாடிய
பிஞ்சு மகள் சீமா..!


துள்ளி விளையாடும் உன்னை

கயவன்
கிள்ளி எறிந்த செய்தி
காது வழியாகச் சென்று
கண்கள் வழியாக வெளியே வந்தது.