பாடல்கள்


       
 பாடல்கள் 

முதலாம் பகுதி -  இஸ்லாமியப் பாடல்கள்
இரண்டாம் பகுதி - பொதுவான பாடல்கள்
மூன்றாம் பகுதி - அரசியல் பாடல்கள் (ஹிஸ்புல்லாஹ்)


  மதியன்பன்






ஒரு விழா மேடையில் படிப்பதற்காக கல்வியின் சிறப்புப் பற்றி ஒரு பாடல் எழுதிக் கேட்டார்கள்
அடியேன் எழுதி வழங்கிய பாடல் இது

ஓட்டகத்தைக் கட்டிக்கோ.. எனும் மெட்டில்


- மதியன்பன்

கல்வி தனைக் கற்றுக்கோ
கஸ்ட மில்லை ஒத்துக்கோ
காலமெல்லாம் இன்பந்தானே
பள்ளி செல்லும் மாணவா
பண்பு தனைப் பேணிவா
பாரு போற்றும் உன்னைத்தானே
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை எதிர்காலத் தேர்வு சொல்லுமடா மிச்சத்தை..

- கல்வி தனைக் கற்றுக்கோ..

கல்விதன் முன்னே செல்வங்கள் நில்லாது
கற்றோரை உலகம் ஒரு போதும் தள்ளாது
வெள்ளத்தால் கல்வி அள்ளுண்டு போகாது
வெந்தணல் பட்டும் கல்விதான் வேகாது
பொருள் கண்டதுண்டு இருள் கண்டதில்லை
கல்வி நம் சொந்தமானால் கவலைகள் தேவையில்லை..

- கல்வி தனைக் கற்றுக்கோ..

வளமான வாழ்வுக்கு கல்விதான் ஒளியாகும்
வயதான காலத்தில் அது எங்கள் விழியாகும்
இளவயதுக் கல்விதான் ஒளிசிந்தும் முத்தாகும் 
ஏற்று நீ கற்றிட்டால் அது உந்தன் சொத்தாகும்
பொருள் கண்டதுண்டு இருள் கண்டதில்லை
கல்வி நம் சொந்தமானால் கவலைகள் தேவையில்லை..

- கல்வி தனைக் கற்றுக்கோ

பாடல் வரிகள் - மதியன்பன்


21.07.2016


மெட்டு - தோழா.. தோழா.. கனவுத் தோழா.. 

மதியன்பன்


நோன்பு நோன்பு... ரமழான் நோன்பு..
நோன்பு நோன்பு ரமழான் மாதம் நோற்றுக்கணும்..
இறையை வணங்கி நன்மைகள் பலதை சேர்த்துக்கணும்..
தஸ்பீஹும் செய்துக்கணும்..- தறாவீஹூம் தொழுதுக்கணும்
தினமும் குர்ஆன் ஓதிக்கிட்டா நன்மை சேருமே..
அது மறுமை வரைக்கும் தொடர்ந்து வரும் சுவனம் சேர்க்குமே..

                                        
                                                            (நோன்பு நோன்பு..)

சிறுவர்க்கு நோன்பு கிடையாது.
நோயாளி நோற்றிடக் கூடாது.
பெண்களுக் கிதிலும் விதிவிலக்கு.
பேதமை கொண்டோர் இதிலடக்கு.
நோன்பு என்னும் கேடயத்தால்- குற்றச் செயலை நீ நிறுத்து.
நோன்பு நோன்புதான். நோற்க வேண்டும்தான்..
ஏழைகளின் பசியின் கொடுமை - செல்வர்களும் புரிந்திட வேணும்.
துன்பங்களில் பங்கினை எடுத்து - துயரங்களைப் போக்கிட வேணும்
நோன்பு மாதம் வந்துளதே உறங்கலாகுமா?
நாம் விடியும் வரைக்கும் விழித்திருந்து நன்மை செய்யனும்..

                                        (நோன்பு நோன்பு...)

வைகறை முன்பே விழித்திடனும்.
வல்லவன் இறையைத் துதித்திடனும்.
விடியும் முன்பே சஹர் செய்து
விருப்புடன் நோன்பை நோற்றிடனும்.
பகலினில் புசித்தல் இல்லையடா- பசியினை அடக்கிட வேண்டுமடா...
நோன்பு நோன்புதான் . நோற்க வேண்டும்தான்.
பாவக் கறைகளைப் போக்க வேண்டும்தான்.
இரந்து வரும் ஏழையர் கூட்டம்- இருப்பவர்கள் ஈந்திட வேண்டும்.
இறைவனது அருளைப் பெற்று - சுவனமதை அடைந்திட வேண்டும்.
ஆணும் பெண்ணும் பேதமில்லாமல் வணங்கிடணும்.
இறை அருளைப் பெற்று சுவனத்து வாழ்வை அடைந்திடணும்...

                                    (நோன்பு நோன்பு...)
                                     







மெட்டு- காற்றுக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு.... 

மதியன்பன்


காரிருள் போக்க வந்த காத்தமுன் நபிகள் நாதர்
பூவுலகின் பிறப்பைச் சொல்லப் போறேனே..
அந்த பூமான் நபி சிறப்பைச் சொல்லப் போறேனே..
அறியாமை ஆட்சி செய்த அறபுமா நகரத் துள்ளே
இறையோனின் ஜோதியாக வந்தார்கள் - நபிகள்
இருளைப் போக்கி ஒளியை அங்கு தந்தார்கள்;
          (காரிருள்)

மதுவும், மாதும் குடியும் கூத்துமாய்
மக்கள் அன்று மயக்கிக் கிடந்தனர்
மாநபி வந்து அவற்றை எல்லாம் ஒழித்தார்கள்
இறையை விழித்தார்கள்.
பெண் சிசு பிறந்ததும் பெருங் குழி இட்டவர்
பெருமை கொண்டு புதைத்து மறைத்தனர்
அருமை நபிகள் வந்து அதனை தடுத்தார்கள்
அறிவை கொடுத்தார்கள்.
ஓருவரை ஒருவர்; வெட்டிக் குத்தியும்
மண்டை ஓட்டில் மதுவை அருந்தியும்
கொண்டதே கொள்கை என்றே அவர்கள் வாழ்ந்தர்;கள்
குப்ரில் வீழ்ந்தார்கள்..
         (காரிருள்)

நபிகள் நாதர்; வாழ்ந்த வாழ்க்கையில்
நாமும் வாழ்ந்து சொர்க்கம் அடையனும் 
மறுமைக் காண விளை நிலம் உலகம் அறிவாயே
நன்மை புரிவாயே..
தொழுகை நோன்பு சக்காத் ஹஜ்ஜுடன்
தூய அமல்கள் தினமும் செய்யனும்
அயலவர்; நலனில் அக்கறை கொண்டு வாழ்வாயே..
சொர்க்கம் ஆழ்வாயே
டிவி யும் டெக்கும் கிரிக்கட் என்றுதான்
தீன் வழி மறந்து வாழ்கை போகுதே
பாவக் குளத்தில் நீந்தும் மனிதா திருந்தாயோ
உள்ளம் வருந்தாயோ..
   (காரிருள்)




மெட்டு -  வெண்ணிலவே வெண்ணிலவே  வானத்தை 

மதியன்பன்

அண்ணல் நபி..  அண்ணல் நபி.. வாழ்க்கையை சொல்லிடவா..
அந்த நபி வாழ்ந்த வழி என்றுமே வாழ்ந்திடவா..
மறைதான் அவர் வாழ்க்கையது  
மாற்றம் என்று ஒன்று மில்லை.
நிறைதான் அவர் கொள்கையெல்லாம் 
நேர்மை தன்னில் மாற்றமில்லை.
                                           (அண்ணல்)

நபிகள் இங்கு வந்தார். இந்த பூமி செழிக்க.
நன்மை பல செய்தார். இங்கு தீPமை ஒழிக்க.
சிலைகள் தனை அழித்தார் - வல்ல இறையை விழிக்க.
சிறுமை தனை ஒழித்தார். அங்கு பெருமை செழிக்க
அண்ணலின் வருகையால் - அராபிய நாட்டுக்குள்
ஆடிய பேய்கள் அடக்கம்
பண்ணிய கூத்துக்கள் - படிப்படியாகத்தான்
பாசத்தின் முன்னாலே முடக்கம்
குபுரினில் வாழ்ந்த  - குலத்தினைக் காக்க
கோமானின் வருகை ஒரு நல்ல தலை முறை
இதை சொல்லும் இறை மறை.
                                             (அண்ணல்)

பொறுமை தனைப் பூண.. அந்த மக்களை அழைத்தார்.
புனிதம் நம் வாழ்வில் வர பொழுதுமே உழைத்தார்.
வறுமை தனை விரட்ட பல வழிகள் சமைத்தார்.
வசந்தம் நம் வாழ்வில் வர படிகள் அமைத்தார்.
சத்திய மாயிந்த உத்தம நபியைப் போல்
இத்தரை வாழ்ந்தவர் இல்லை.
நித்தமு மேயிந்த உத்தமர் வாழ்க்கை போல்
வாழ்ந்திடில் தொல்லைகள் இல்லை
இறைவனின் மறையை.. இரசூலின் உரையை
எடுத்திடில் வாழ்வில் - அது இன்பம் சேர்க்குமடா..
எங்க துன்பம் போக்குமடா..

                                 (அண்ணல்)   




 மெட்டு -  மெல்லினமே......மெல்லினமே..... 

 மதியன்பன்


 நன்மைகளை நன்மைகளை 
 செய்யும் உள்ளங்கள்  சொர்க்கம் வாழும்
 இந்த உலகம் ஒன்றே மிக உயர்ந்த தென்று
 இதை நேசிக்கும் உள்ளங்கள் வீழும்
 நாம் வாழ்ந்திடும் காலம் கொஞ்சம்
 நல்ல அமல்கள் செய்யணும் மிஞ்சும்
 இந்த உலகில் வாழ்ந்தோ ரெல்லாம்
 இங்கு மண்ணொடு மண்ணாய் போனார்... ஓ...

                        (நன்மைகளை)


 பாவம் கூடிப் போச்சி - இங்கு பக்தியும் குறைந்து போச்சி.
 பாழாய் போன உலகில் - இந்த மனசும் நிறைந்து போச்சி
 ஆடிப்பாடி மகிழ - இங்கு அறிவியல் வளர்ந்து போச்சி
 பாசம் நேசம் என்னும் - நல்ல பண்புகள் தளர்ந்து போச்சி
 மண்ணையே... இம்மண்ணையே...
 இந்த மனசு தேடுதடா...
 பொன்னையும் - பொருளையும்
 இந்த மனசு நாடுதடா...
 அன்புத் தோழா வருக! நல் அமலைத் தினமும் செய்க!
 நன்மை செய்து அந்த - நாயன் அருளைப் பெறுக....ஓ...

                        (நன்மைகளை)
  
 உண்மை நேர்மை என்னும் - நல்ல உணர்வுகள் நிறைய வேண்டும்
 நன்மை செய்து வாழும் - நல்ல பண்புகள் வளர வேண்டும்
 திருமறை குர்ஆன் ஓதி - நல்ல திக்ருகள் செய்ய வேண்டும்
 வறுமை வாட்டும் போதும் - நாங்க பொறுமை காட்ட வேண்டும்
 வாழ்க்கையில் நன்மைகள்
 தினமும் செய்கிறவன்
 சொர்க்கத்தில் வாழுவான்
 இந்த கவலைகள் அங்கில்லை
 சொர்க்கம் அழிவதும் இல்லை - அங்கு போனவர் திரும்புவதில்லை
 நன்மை தீமை இல்லை - நல்ல மனிதர்க்கு அதுவே எல்லை! ஓ..

  (நன்மைகளை)





மெட்டு - என்னை  பாடவைத்த  பேசும் பூவே..

மதியன்பன்


வல்ல நாயன் தூதர் வாழ்வைப் பாட
வார்த்தைகளைத் தேடுகிறேன்.
அந்த நாயன் தூதர் நாமம் ஓதி
நன்மைகளைச் சூடுகிறேன்.
மாநபி; வாழ்க்கை மாமறை.
மண்ணுக்கு சொல்லும் தீன் முறை
என்றும் நமக்கு வழிமுறை.
          (வல்ல நாயன்...)

மக்கத்து மக்கள் மிருகம் போல் வாழ்ந்தார்.
மாநபி அங்கே ஒளியாய் வந்தார்.
ஹக்கான தீனை எடுத்தங்கு ஓதி
காரிருள் போக்கும் விளக்காய் நின்றார்.
பூலோகம் எங்கும் பூமழை. பூத்தது அங்கே தீன் மழை.
நபி நாதரின் நல்ல போதனை
அங்கு தீர்ந்தது வேதனையே..
           (வல்ல நாயன்...)

அல் அமீன் என்னும் பட்டத்தை பெற்றார்
அடுத்தவர்க்; குதவி நன்மை செய்தார். 
இல்லாத ஏழை இரந்திட்ட வேளை 
உள்ளதைக் கொடுத்து உள்ளம் தொட்டார்.
மல்லிகை போன்ற பூமனம்  மாநபிக்கில்லை ஓர் சினம்
நபி வாழ்க்கையே நல்ல போதனை. 
அங்கு தீர்ந்தது வேதனையே..
           (வல்ல நாயன்...)

உண்மையும் நேர்மையும் ஒன்றாக கொண்டார்.
உள்ளதை கொண்டு பொருந்திக் கொண்டார்.
சொல்லோடு செயலில் தூய்மையே கொண்டார்.
சொர்க்கத்து வாழ்வைக் காட்டிச் சென்றார்.
மாநபி சென்றார் தீன் வழி.  மக்களுக்கதுவே பேரொளி.
நபி வாழ்க்கையே நல்ல போதனை. 
அங்கு தீர்ந்தது வேதனையே.
           (வல்ல நாயன்..)







மெட்டு - அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற .....

மதியன்பன்


நபிகளின் தலைவர் நபிகளின் தலைவர்
முஹம்மது நபியல்லவா...
உலகினில் தோன்றி இருளினை அகற்றி
ஒளி தந்த மதியல்லவா...
கொஞ்சம் கொஞ்சமாக.. தோழர் தன்னைச் சேர்த்து
சத்தியத்தின் பாதை காட்டினார்.
வஞ்சம் சூது கொண்டு.. வாழ்ந்த  மக்கள் முன்னே
புத்தி சொல்லி  தீனை ஊட்டினார்.
தொன்று தொட்டு இன்று மட்டும் வந்தவர்க்கு சொந்தமாகினார்.

                               (நபிகளின்....)
கடல் போலத்தான் துன்பம்
வந்த போதிலும் கலங்கிட வில்லை.
உடல் எங்கிலும் காயம் 
பட்ட போதிலும் தயங்கிட வில்லை.
அச்சம் என்னும் சொல்லை
அறவே அறிந்திட வில்லை.
உண்மை சொல்பவர் யாரோ..
அவர் உலகினில் வெற்றி காண்பார் என்றார்.

                               (நபிகளின்..)

துயர் வெள்ளத்தில் பெண்கள்
நிலை கண்டவர் மாற்றியே வைத்தார்
அமா வாசைபோல் வாழ்ந்த
அந்த மக்களில் மதியைச் சேர்த்தார்.
இச்சை என்ற சொல்லே
அவர் அகராதினியில் இல்லை.
தீன் வழி வாழ்பவர் யாரோ..
அவர் சொர்க்கம் செல்வார் என்று சொன்னார்.

                                (நபிகளின்)

  








மெட்டு -  என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி ...

மதியன்பன்


எம் அண்ணல் நபிக்கொரு பாவாக்கி..
இந்த மேடையில் தந்தேன் பூவாக்கி..
சத்தியத்தை சமைத்து எடுத்து
பங்கு வைத்த நபியே....
தீமைகளை புதைத்து அழித்து 
தென்றல் தந்த நபியே...
அந்த மாநபி தந்த போதனை பூத்திருக்கே...

                                (எம் அண்ணல்..).

எத்தனை லெட்சம் சொத்துக்கள் வந்தும்
ஏழைக்கும் நாளுமே அள்ளிக் கொடுத்தார்.
எத்தனை காயம் மேனியில் பட்டும்
வீரத்தை தீரத்தை தானும் தொடுத்தார்.
அச்சமின்றிப் போர் செய்த பூந்தோட்டமாம்
அவர் மொழி நாள்தோறும் தேன் பாய்ச்சுமாம்.
எட்டுத் திசை பாராட்டும் மாவீரராம்.
ஏழை நிலா போல் வாழ்ந்த ஓர் சீரராம்.
எம் முத்து நபி மணி மொழி வழி இனி. வாழ்ந்திடுவோம்.


                                (எம் அண்ணல்..)
பித்தரைப் போல இத்தரை வாழ்ந்த 
மனிதரை புனிதராய் மாற்றி அமைத்தார்.
பத்தினி என்றும், உத்தமி என்றும்
பாவையர் வாழ்வதை போற்றி உரைத்தார்.
கள்ளருந்தி வாழ்ந்தோர்க்;கு வழி காட்டினார்.
கண்ணயர்ந்து வீழ்ந்தோர்க்கு விழிப்பூட்டினார்.
கெட்டவர்க்கு முரசு கொட்டும் போர் மேகமாம்.
நல்லவர்க்கு நீர் வார்க்கும் கார் மேகமாம்.
பெரு சொத்து மறையுண்டு, முத்து மொழியுண்டு வாழ்ந்திடுவோம்.


                                (எம் அண்ணல்...).








மெட்டு-  வசீகரா என் நெஞ்சினிக்க.. உன் பொன் மடியில்..

மதியன்பன்


சினேகிதா.. நம் சிந்தனைகள் எம் நபி வழியில் 
இருந்திட வேண்டும்! இதே வழி
நம் கால் நடக்க - நம் உள்ளங்களில்
ஏக்கங்கள் தீரும்!
நாம் போசிப்பதும் - சுவாசிப்பதும்
இறை தயவால் தானே..! 
ஆடுகிறோம்.. பாடுகிறோம்..
கறை மனதால் நாமே தான்..
                   (சினேகிதா..)


இறை அருள் வரும் அதில் நனை வோமே.. 
நபி வாழக்;கையோடு சினேகம்!
சில வருடம் தான் நம் வாழ்கை!
தினம் தினம் அமல் செய்து செர்ர்;க்கம் வெல்வோம்..!
இது தெரிந்தும் கூட - நண்பா
மனம் தவறைத்தான் எதிர் பார்;க்கும். 
எங்கேயும், எப்போதும் 
நாம் பேசும் போது மெய்வேண்டும்.
சில சமயம் விளையாட்டாய் 
நாம் பேசக்குள்ளே பொய்தோன்றும்!
                        (சினேகிதா..)

ஒரு தினம் வரும் அதில் எழுவோமே.. 
இறை தீர்ப்பினோடு மறுமை
உயர் அமல்தானே கரை சேர்க்கும்.
அவரவர் நன்மை செய்து சொர்க்கம் செல்வார்;!
இதைப் பார்த்தும் கூட நண்பா!
பலர் நரகைத்தான் எதிர்; கொள்வார்;!
உடலாலும் - உளத்தாலும் 
நாம் நன்மை செய்தால் விடிவிருக்கும்.
சாத்தானின் வலை வீழ்ந்து 
நாம் பாவம் செய்தால் நரகிருக்கும்.
                         (சினேகிதா..)









மெட்டு -  வெண்ணிலவே  வெண்ணிலவே விண்ணைத் ..

மதியன்பன்


கண்மணியே கண்மணியே கருணை தரும் சுடரொளியே..
உமை வாழ்த்திப் பாடுகின்றோம்.
இந்தப் பூலோகத்தில் உங்கள் நாமம் சொல்லி
எங்கள் கவலைகள் களைகின்றோம்...
    (கண்மணியே)

திரு மறை தந்தீர். தீன் வழி தந்தீர்!
இது ரெண்டோடும் வாழ்வோருக்கு சுவனமென்றீர்!
தினம் தொழு மென்றீர் - கறை வீழுமென்றீர்!
இதை நாடாத பேருக்கு நரக மென்றீர்!
நபியே... நபியே...
இருள் போக்கும் சுடரேந்தி புவியின் கண்ணே வந்தீர்!
அருள் சேர்க்கும் வழி தன்னை எங்கள் முன்னே தந்தீர்!
நாம் தீனின் வழியில் வாழ்கை தொடர
இறை யோனின் அருள் தந்தீர்!
    (கண்மணியே)

உலகத்தின் சொத்தெல்லாம் அழிந்து போகும் என்றீர்!
அழியாத சொத்தென்றால் நன்மை ஒன்றே என்றீர்;!
இதை எண்ணி எண்ணி இறைவனை வணங்கணும்!
திருமறையும் - நபியுரையும் ஒளியைக்காட்டும் என்றீர்;!
குறைகளையும், நிறைகளையும் எண்ணிப் பார்க்கச் சொன்னீர் 
நாம் சுவனம் காண வேண்டும்!
தீன் வழி வாழ விடி வென்றீர்!

   (கண்மணியே)

இரக்கின்ற ஏழைக்கு ஈந்திட வேண்டும் என்றீர்!
சுரக்கின்ற இறையருளை அள்ளிக் கொள்ளனும் என்றீர்!
இதை எண்ணி எண்ணி இறைவனை வணங்கனும்!
சின்னவரை இரக்கமுடன் அணைத்திட வேண்டும் என்றீர்!
பெரியவரை மிதிக்காமல் மதித்து வாழ்ந்திடச் சொன்னீர்!
நாம் சுவனம் காண வேண்டும்!
தீன் வழி வாழ விடி வென்றீர்!
                                      (கண்மணியே)






மெட்டு - மேற்கே விதைத்த சூரியனே உம்மை

மதியன்பன்


மண்ணை மதிக்கும் மானிடரே...
உம்மை. மறுமையை மதிக்க ஆணையிட்டோம் 
வாழ்வில் ஏதும் குழப்பம் என்றால்..
இந்த குர்ஆன் - ஹதீதை பார்க்கச் சொன்னோம்.
பணம் சேருதே, பல வளம் சேருதே
நம்மை பாதாளக் குழி தள்ளுதே.
இஸ்டம் போல நம்மை வாழச் சொல்லி-
சில சாத்தான்கள் பின் தள்ளுதே...

உள்ளவற்றை உள்ளவற்றை ஏழையர்க்குக்; கொடுத்து
இன்னல் தீர இன்னல் தீர சந்தோஷப்படுத்து.
வாழக்;கை யொரு பயண வழி பாரு. நீண்ட தூரம் அல்ல..
சில பொழுது போனால் - மரணம் வரும் சொல்ல.
நன்மை செய்ய நன்மை செய்ய வாங்க.
சுவனம் உண்டு வெல்ல.
தீமை செய்து வாழ்ந்தால் நரகம் நமதெல்லை.

உலகம் அழிந்து போன பின்னாலே
மறுமை என்னும் வழ்வொன்று வருமே
அவயங்கள் வேறு வேறாய் பேசுமாம்
நடந்தவை ஒன்று ஒன்றாய் சொல்லுமாம்.
நில்லுங்கள் தீர்ப்பு என்னும் ஒலி ஒன்று கேட்குமாம்

     (மண்ணை)
நல்ல நல்ல வேலைகளைச் செய்வோம்
நன்மைகளைக் கொய்வோம்.
துன்பம் துயர் வந்தால் - பொறுமையினைக் கொள்வோம்
அன்னை தந்தை பெரியவரைக் கூட்டு. அன்புதனைக் காட்டு
சின்னவரை அணைத்து பாசமதை ஊட்டு.

மா நபி வாழ்ந்த மாமறை வழியே...
மானிடர் வாழ அது பெரும்; ஒளியே...
உலகத்தின் ஆசை தன்னை அடக்குவோம்.
உண்ணத வாழ்க்கை ஒன்றை தொடர்க்குவோம்.
சொர்க்கத்தின் வாசல் ஒன்று நமக்காக திறக்கட்டும்

(மண்ணை)






மெட்டு- சொந்தக் காரன் யார் சொந்தக் காரன்..

மதியன்பன்


இறைவன் தூதர் நம் நபிகள் நாதர்.
வாருங்கள்! தோழர்களே, வாருங்கள்! - வள்ளல்
நபி மீது சலவாத்துக் கூறுங்கள்!

திருமறை யென்னும் பொது மறை தந்தவர் நபிகள் நாதர்!
தீன்வழி நடந்திட பாதையமைத்தவர் நபிகள் நாதர்!
மறுமையின் வீடே நிரந்தர மென்றவர் நபிகள் நாதர்!
மண்ணுலகிங்கு விளை நிலமென்றவர் நபிகள் நாதர்!
         (வாருங்கள்)

பெற்றவர் கடமை பேணிடச் சொன்னவர் நபிகள் நாதர்!
பெரியவர் பேச்சை மதித்திடச் சொன்னவர் நபிகள் நாதர்!
மற்றவர்க் குதவி செய்திடச் சொன்னவர் நபிகள் நாதர்!
மாசிலா வாழ்வு வாழ்ந்திடச் சொன்னவர் நபிகள் நாதர்!
          (வாருங்கள்)
    
சொன்னதை வாழ்வில் செய்து முடித்தவர் நபிகள் நாதர்!
சொர்க்கத்து வழியை காட்டிச் சென்றவர் நபிகள் நாதர்!
சின்னவர் மீதும் அன்பினைக் கொண்டவர் நபிகள் நாதர்!
சீரிய பணியை முடித்துச் சென்றவர் நபிகள் நாதர்!
         (வாருங்கள்)

வல்லவன் மறையை வாங்கித் தந்தவர்; நபிகள் நாதர்!
வாழ்ந்;;திடும் வழியை அமைத்துத் தந்தவர் நபிகள் நாதர்!
சொல்லிலும் செயலிலும் தூய்மை கொண்டவர் நபிகள் நாதர்!
சொர்க்கத்து வழியைக் காட்டிச் சென்றவர் நபிகள் நாதர்!;

         (வாருங்கள்)

ஸல்லல் லாஹு அலா முஹம்மது என்று சொல்வோம்!
ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்வோம்!
ஸல்லல் லாஹு அலா முஹம்மது என்று சொல்வோம்!
ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்வோம்!









மெட்டு - ரோசாப்பூ.. சின்ன ரோசாப்பூ.. 

மதியன்பன்


திருத்தூதர் எங்கள் இறை தூதர்
தீன் மார்க்கம் தந்த நபி நாதர் 
வாழ்ந்த வாழ்க்கை பாடமாகும் !
நாம் பயணம் செய்யும் ஓடமாகும்! 
                                     (திருத்தூதர்)

வாழ்வெல்லாம் வணக்கம் செய்து 
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் சொன்னார். 
ஏழ்மையாய் வாழ்ந்து நின்று
ஏக இறையோனின் அன்பைப் பெற்றார்!
இறை வேதம் தானே அவர் வாழ்க்கை,
இங்கு எல்லாமே தீனோடுதான்
நேர்மை யோடு வாழ்ந்து வந்தார்!
எம்மை நேர்மை யாக வாழச் சொன்னார்
                                     (திருத்தூதர்)
அயல் வீட்டான் பசித்து வாழ
நாங்கள் புசித்துண்ணல் ஆகா தென்றார்!
துயரத்தில் வாழ் வோருக்கு 
எம்மை துடுப்பாக இருக்கச் சொன்னார்!
ஐ வேளை தொடர்ந்து தொழுவோர்கள்
அங்கு சொர்க்கத்தில் என்னோடுதான்
இருப்பார் என்று சைகை சொன்னார்!
எம்மை வணக்கம் செய்ய பணித்தார் அன்னார்!

                                     (திருத்தூதர்)

மார்க்கத்தை கற்றுக் கொள்ளல்  
நம் அனைவர்கும் கடமை என்றார்!
மூர்க்கத்தை விட்டுச் செல்லல் 
நம் முளத்திற்கு நலமே என்றார்
பிறர் நலமே என்றும் அவர் வாழ்க்கை
நல்ல பண்புகள் அவரோடுதான்
குர்ஆன் வழியில் வாழ்ந்து வந்தார்!
நம்மை கூட்டாய் வந்து வாழச்சொன்னார்.
                                      (திருத்தூதர்)








மெட்டு - பல்லாங் குழியின் வட்டம் பார்த்தேன்.. 

மதியன்பன்


நானிலத்திருளைப் போக்கிட வந்தார் எங்கள் நாயகம்!
நாற்பது வயதில் நபியாய் ஆனார் எங்கள் நாயகம்!
ஐம்பத்தி மூன்றாம் வயதில் அன்னார்
மதினாவுக்கு ஹிஐ;ரத்துப் போனார்..
அறுபத்தி மூன்றாம் வயதில் அன்னார்
அகிலம் விட்டு இறையடி சென்றார்..
தீனோர் நெஞ்சில் ஓளியாய் நின்றார் எங்கள் நாயகம்...
                                            (நானிலத்..)

திரு நபியின்; அன்னையர் ஆமினாவாம்!
அவர் தந்தை பெயரது அப்துல்லாவாம்!
அவர் பாட்டன், பூட்டன் சொந்தம் என்று
குடும்ப உறவு நீண்டிருக்கும் - கோத்திரங்கள் பார்த்திடு..
திரு நபி மேனி தங்க நிறம் போல,
அவர் சிரித்திட மலர் விரியும்!
நபியின் உள்ளம் மல்லிகை போலாம் - கருமை கிடையாது..
வள்ளல் நபி மணியின் நல்ல வாழ்க்கையிலே
பல படிப்பினை நமக்கு உண்டு 
குணத்தில் குன்றாம் குறைசிக் குலமாம்
கோமான் நபி நாதர்!
                                         (நானிலத்)

நபி குறைசிக் குலத்தினில் பிறந்தவராம்
அவர் குணத்தில் குன்றாய் வளர்ந்தவராம்
அவர் சொல்லும் செயலும் ஒன்றென சேரும்
நாவில் உண்மை உறைந்திருக்கும் - பூவின் மென்மை பார்த்திடு
நபி நடந்த வழி - நாம் நடந்திடனும்
நம்மை துன்பங்கள் தொடராது
நபியின் வேதம் திரு குர்ஆனாம் - நமக்கு வழி காட்டும்
கள்ளம் கபடம் இல்லை -  கடும் போக்குமில்லை
நல்ல பண்புகள் நிறைய உண்டு 
அறிவின் ஊற்றாம் ஓளியின் கீற்றாம்
அருமை நபி நாதர்..
                                       (நானிலத்)








மெட்டு - அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்...

மதியன்பன்


இந்த உலகுக்கு ரெண்டு பாதைகள்
அவை திருமறை - நபியுரையே...
அந்த மறுமைக்கு ரெண்டு சோலைகள் 
அவை சுவனம் நரகதுவே...!
திரு மறையும், ஹதீதும் ரெண்டும் இல்லை யென்றால்
இந்த மண்ணின் வாழ்வு தொல்லையே...
அந்த வாழ்வில் சுவனம் காண வேண்டு மென்றால்
திரு நபியின் வாழ்வு உள்ளதே...
இந்த உலகம் மறுமைக் கான விளை நிலமே...
மறைதானே.... வாழ்வுக்கு வழி காட்டும்
நபி யுரைதானே... வாழ்வுக்கு ஒளி யூட்டும்
           (இந்த உல..)

உலகின் தொல்லைகள் முற்றாக நீங்கும்   
தினமும் மறை ஓதி வாழ்க
கலகமில்லாத வாழ்வென்று ஓங்கும்
கருனை நபி வாழ்வில் செல்க
மறை வார்த்தைகள் என்றும் பொய்த்;ததில்லை
நல்ல மனிதர்க்கு தோல்விகள் வைத்ததில்லை-
திரு மறை போல் உலகில் மருந்து இல்லை!
மறை தானே ...... வாழ்வுக்கு வழிகாட்டும்..
நபியுரைதானே.... வாழ்வுக்கு ஒளியூட்டும்..
            (இந்த உல..)

வல்ல இறை யோனை வணங்கி வாழார்கள்
தீய நரகுக்குச் செல்வார்!
நல்ல குணத் தோடு நன்மை செய்தோர்கள்
நேய சுவனத்தை வெல்வார்.!
நாம் இஸ்லாத்தின் வழியில் வாழ்வமைப்போம்!
அதில் நிலையாக வாழ வழி சமைப்போம்!
திரு நபியின் வழியில் வாழ கவலை இல்லை
மறைதானே..... வாழ்வுக்கு வழி காட்டும
நபியுரைதானே....வாழ்வுக்கு ஒளியூட்டும்.
                                         (இந்த உல..)









மெட்டு - பூவும் காற்றும் சேரும் போது வாசம் வருகிறது...

மதியன்பன்


தூதர் நாமம் ஓதும் போது இறையருள் சுரக்கி;றது
சோகம் துன்பம் துயரம் எல்லாம் பனியாய்ப்; பறக்கி;றது
எங்கள் நபி நாதர் - ஏகன் இறை தூதர்.
கொண்டு வந்த மாக்கம் - சொர்கத்திலே  சேர்க்கும்
எங்கள் இதயம் பூக்கும்.  ஓ..
    (தூதர்)

தீய நடத்தை கொண்டோர் எல்லாம் திருந்தி வாழ்ந்திடனும்
தூய மார்க்கம் இஸ்லாம் தன்னில் இவர்கள் ஆழ்ந்திடனும்
வருத்தங்கள் குறைந்திடுமே
நல்ல வசதிகள் நிறைந்துடுமே
நபி மணி வாழ்க்கையிலே
கால் நடந்திட சுகம் வருமே.  ஓ..
     (தூதர்)

காலை மாலை திக்ருகள் செய்வோம் உள்ளம் அமைதி பெறும்
ஏழை எளியோர் துயரினை துடைப்போம் இறைவன் கருனை வரும்
மாமறை அழைக்கிறது
நல்ல மினமிங்கு தழைக்கிறது
தீன் வழி நடப்பவரை
அந்த சொர்க்கம் அழைக்கிறது. ஓ..
      (தூதர்)

பாழும் உலகை தேடி தேடி உள்ளம் அலைகிறது
பாவக் குளத்தில் நீந்தி நீந்தி தவறுகள் செய்கிறது
திருந்திடத் துடிக்கிறதா
மனம் வருந்திடத் துடிக்கிறதா..
மன்னிப்பு கேட்பவர்க்கே
அந்த இறைவன் அருள் கிடைக்கும்.... ஓ...
       (தூதர்)












மெட்டு - ஆப்பிள் பெண்ணே! நீ யாரோ...

மதியன்பன்


ஆண்டவன் தூதே நபி நாதர்.   அகிலத்தின் விளக்கே இறை தூதர்
மண்ணில் தேன்றி மாற்றம் செய்த வீரர்!
பாலையின் ஊற்றே நபி நாதர்.  பாசத்தின் கீற்றே நபி நாதர்
ஒளியாய் வந்து வழியைக் காட்டிய வீரர்!
                  
(ஆண்டவன்)

பொல்லாத தீங்கு எல்லாம்  புவியிலே நிறைந்ததடா..
வல்லோன் இறை சொன்ன வழியில்  வாழ்ந்திட மறுத்ததடா...
அங்கே ஒர்; மாற்றம் வேண்டி  நபி மனம் துடித்ததடா...
நல்லோரைச் சேர்ந்துக் கொண்டு  நபி பணி தொடர்ந்ததடா...

கொடுமையைக் கண்டு - மக்களை அழைத்து
இறையினை விழித்தார் தோல்வியில்லை!
அண்ணல் நபியை பின்பற்றி வாழ்ந்திட
ஐயோ அவர்களும் மறுக்கவில்லை
எண்ணியே வணங்கிய சிலைகளையெல்லாம்
அவரே உடைத்தார் எதிர்க்கவில்லை!
ஏந்தல் நபியின் போதனை கேட்டோர் 
இணைந்திட வந்தார் தயங்க வில்லை

உலகே நபியின் வரவாலே  உயர்வைக் காணத் தொடங்கியது
முறையே இல்லாச் செயலெல்லாம் முற்றாய் அங்கே அடங்கியது!
இறைதூதர் முன்னாலே எதிரி வந்தார்கள்
குறைகள் சொன்னதில்லை!
                  (அங்கே ஓர்)
காலையில் எழுந்து - கண்களை விழித்து
கடவுளை வணங்கிடில் கஸ்டமில்லை
அயலவர் நலனில் அக்கரை கொண்டு
அனாதைக்கு உதவிடில் கவலை இல்லை
அனுதினம் அழுது - ஐவேளை தொழுது
அல்லாஹ்வை வேண்டிடில் வறுமையில்லை
அன்பால் பண்பால் - அடுத்தவர் தன்பால் 
நன்மைகள் செய்திடில் வெறுமையில்லை

உலகம் விழிக்கும் முன்னாலே   உருகி இறைவனை வேண்டிடுவோம்
பாவக்கறைகளை போக்கிவிட்டு; பணிவுடன் அமல்களை செய்திடுவோம்
நம் கண்கள் முன்னாலே செல்வங்கள் வந்தாலும்
தீயவை தொடமாட்டோம்..     (அங்கே ஓர்)                      



மெட்டு - என்னைத் தாலாட்ட வருவாளா..

மதியன்பன்


இந்த கனவுலகம் கலையாதா....!
இங்கு காரிளும் விலகாதா.....!
நல்ல மனமிங்கு வளராதா.....!
நாங்க வாழும் வழி தெரியாதா....!
அழிந்து போகும் உலகில் ஆசை கொள்ளலாமா!
ஆசை கொண்டு வாழ்ந்தால் சொர்க்கம் போகலாமா..!
கொஞ்சம் பொறு நபி வழி தெரிகிறதே!

        (இந்த கனவுலகம்)

மா நபி வாழ்ந்த வழி வாழலாம்
மாமறை ஓதி வளம் காணலாம்.
ஏனோ நாங்கள் மாறினோம்
இறைவன் சொல்லை இங்கு மீறினோம்
இதயம் போன போக்கில் வாழ்கிறோம்
என்றும் பாவக் குளம் மூழ்கிறோம் 
தீன் பாதை வழி நின்று வாழ்வாயே!
தேன் சொர்க்கம் நீ அங்கு மீழ்வாயே!
பாவங்கள் கோபங்கள் கூடாதே ! 
பாருலகில் ஆட்டங்கள் போடாதே !
மறுமைக்கு அமல் செய்வாயோ!
       (இந்த கனவுலகம்)


உலகம் விளை நிலம் ஆகுமே!
உயிர் எம்மை விட்டுப் போகுமே!
பிறர் நலம் பேணி வாழுவோம்!
பேதம் இன்றி உளம் ஆளுவோம்!
மரணம் சொல்ல வில்லை நேரத்தை!
மண்ணும் சுமப்பதில்லை பாரத்தை!
மரணத்தை வெல்லத்தான் முடியாது!.
மண்ணுக்குள் அமலின்றி விடியாது.
உலகத்தை வென்றோர்கள் கிiயாது.
உள்ளங்கள் அமலாலே உடையாது.
சொர்க்கத்தை நாம் வேண்டுவோம்...
                             (இந்த கனவுலகம்)






மெட்டு - சற்றுமுன் கிடைத்த தகவல்படி

மதியன்பன்


அன்புத் திரு உருவம் எங்கள் நபி...
அகிலம் இருள் போக்கும் திங்கள் ஒளி.
நபியே.. எம் நபியே....நபியே.. எம் நபியே....நபியே..
இறையின் மறைவேதம் தந்த நபி.
பிறையின் ஒளிக் கீற்றாய் நின்ற நபி
நபியே.. எம் நபியே....நபியே.. எம் நபியே....நபியே...
கறை காணாமல் நெறி மீறாமல்
இறை பணிக்கே வாழ்ந்து வந்தார்.
                                          (அன்புத் திரு)

வார்த்தைகளால் தேன் வார்த்தைகளால்
பலர் இதயத்துள் இடம் பிடித்தார்
பாவி மக்கள் உள்ளங்களில்
தீன் அமுதினை ஊற்றி வைத்தார்.
இத்தரையில் பலர் நித்திரையில்
அவர் தூக்கத்தை கலைத்து வைத்தார்.
வாழப்போகும் வாழ்க்கைக்கு
நல்ல வழியினைக் காட்டி வைத்தார்.
பலர்பால் தீன் ஊட்டினார்  இறைபால் வழி காட்டினார்.
மல்லிகைப்பூப்போல் நல்மனம் மறுவிலா மதிபோல் வெண்முகம்.
அவர் வாழ்க்கையிலே பல சோதனைகள்
அவை தாண்டியே வெற்றி கண்டார்.
                                          (அன்புத் திரு)

மாநபிகள் வல்ல இறைவனைத்தான் 
கண்டு பரிசொன்று வாங்கி வந்தார்.
வாழும் மக்கள் வெற்றி பெற 
அந்தப் பரிசெனும் தொழுகை தந்தார்.
தாயவளின் கால் பாதத்தின் கீழ்
நல்ல மகனுக்கு சுவனம் என்றார்.
தூய மார்க்கம் இஸ்லாம் தான் 
இந்த உலகுக்கு விளக்கு என்றார்.
பிறரின் நலம் பேணினார்.  பெருமை கொள்ள நாணினார்.
சொல்லும் செயலும் ஓர் வழி  அன்பும் அறமும் தான் ஒளி
நபி சொன்னதெல்லாம் நல்ல போதனைகள்
நாம் ஏறு;றுமே வாழ்ந்திடனும்.
                                          (அன்புத் திரு)





மெட்டு - இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு

மதியன்பன்


நபி வழி வாழ்ந்து வரும் நல்ல மனிதர்க்கு நரகமில்லை
நபி வழி வாழார்க்கு அந்த மறுமையில் சுவனமில்லை
நாங்க வாழ்கை முழுவதும்  நன்மை செய்ய வேண்டுமே
ஆனால் நமது வாழ்க்கையோ  தீமை நிறைந்து உள்ளதே
இந்த உலகமே சிறைக் கூடம்தான்
இதை தேடி தேடி பாழும் மனசு அலைகிறதே...

(நபி வழி)


நபி இல்லை என்றாலோ  புவி இங்கு கிடையாது
புவி இங்கு இல்லாது  நாம் வாழ முடியாது
இறை மறை போதுமே   அட நமக்கிங்கு போதனை
நபி வழி இல்லையேல்   அட நமக்கிங்கு வேதனை
நபி மணி வாழ்க்கை வாழ்ந்துவிட்டால்  
கவலைகள் தீர்ந்துவிடும்
மஹ்சரின் கேள்வி கணக்கெல்லாம்    
இலேஸாய் அமைந்துவிடும்
அட மறையின் வழியில் வாழ்ந்து ஜெயம் பெறுவோம்

 (நபி வழி)


ஐவேளை தொழுதாலோ அழுக் கொன்றும் இருக்காது
அயலோரை நேசித்தால் விரிசல்கள் விளையாது
நன்மைகள் செய்வதோ அட நபிகளின் நற்குணம்
நாங்கள் செய்வதோ அட தினமும் துற் குணம்.
உலக வாழ்க்கை புரிந்த விட்டால் 
உள்ளம் தெளிந்து விடும் 
மறுமை வாழ்க்கை வாழ்வதற்கு 
மனது துணிந்து விடும்.
அட மறையின் வழியில் வாழ்ந்து ஜெயம் பெறுவோம்

 (நபிவழி)








மெட்டு - ஒவ்வொரு பூக்களுமே  சொல்கிறது... 

மதியன்பன்

ஒவ்வொரு ஜீவனுமே வாழ்ந்திடனும்
வாழ்வென்றால் நபி நாதர் வாழ்முறையே..
ஒவ்வொரு ஜீவனுமே அடைந்திடனும்
அடைவென்றால் சுவனம்தான் நிரந்தரமே..
இறைமறை போதனை வேண்டும் நம் வாழ்வில்
இத்தரை நிச்சயம் அழியும் ஓர் நாளில்
மனிதா...ஓ.. மனிதா   நீ புரிந்து விடு.
மறையை நபி உரையை நீ தெரிந்து எடு.
                                   (ஒவ்வொரு..)

உலகம் இங்கு சிறை கூடம்  உள்ளே போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை யென்று அலுத்துக் கொள்ளக் கூடாது.
பிறக்கும் மனிதர் எல்லோரும் இறந்து போவார் பாருங்கள்.
காலப் போக்கில் இந்த உலகம் அழிந்து போகும் பாருங்கள்.
உயிர் வாழும் காலந்தானே...நம்மீது கடனாகும்.
நாம் போடும் விதைகள்தானே மறுமைக்கு பயிராகும்
யாருக்கில்லை வேதனைகள்  தாண்டவேண்டும் சோதனைகள்
ஒரு தினம் வரும்தான் அதில் ஜெயம் அடைந்தால் 
வரும் சுவனம் நிஜமாகும்.
மனிதா...ஓ மனிதா நீ புரிந்து விடு
மறையை நபி உரையை நீ தெரிந்து எடு.
                                    (ஒவ்வொரு..) 

இந்த உலகம் அர்ப்பந்தான்  அதிலும் வாழ்க்கை சொர்ப்பந்தான் 
என்று அண்ணல் சொன்னவற்றை  ஒதுக்கித் தள்ளக் கூடாது 
பெற்ற பிள்ளை உதவாது  பிரிந்த உறவும் சேராது
மறுமை என்று ஒன்று வந்தால் செய்த நன்மை மட்டுந்தான் 
பலர் வாழும் வாழ்க்கைதானே பாவத்தின் வழியாகும்.
பாவத்தின வழியில் சென்றால் நரகந்தான் முடிவாகும்.
வாழவேண்டும் நபிவாழ்க்கை. மாற்றவேண்டும் நம் போக்கை.
திரு நபி ஒளிதான்  அதன் வழி நடந்தால்
வரும் சுவனம் நிஜமாகும். 
மனிதா...ஓ மனிதா நீ புரிந்து விடு
மறையை நபி உரையை நீ தெரிந்து எடு.
                                    (ஒவ்வொரு..) 









மெட்டு - பூசு மஞ்சல் பூசு மஞ்சல் பூசிடத்தான்

மதியன்பன்


ஓது குர்ஆன் ஓது குர்ஆன் ஓதிடத் தான் இன்பம்
ஜோ தி நபிகள் வாழ்ந்தது எல்லாம் திருமறை முழுவடிவம்
உள்ளங்கள் ஒளி காணனும் - எண்ணங்கள் தெளிவாகனும்
கஸ்டங்கள் பறந்தோடனும் - கவலைகள் இறந்தாகணும்
ஓதுவோம் குர்ஆனை ஓதுவோம்;
வாழுவோம் சொர்க்கத்தில் வாழுவோம்.
                                     ஓதுகுர்ஆன்

அருள் வேதம் ஒளியூட்டும் - நம் வாழ்வில் வழிகாட்டும்
வழி காட்டும் வேதம் ஓதி வளம் காணுவோம்
ஓதுவோம் குர்ஆனை ஓதுவோம்
நோய் தீர்க்கும் மருந்தாகும்;  - நுளைந்தோர்க்கு விருந்தாகும்
விருந்தோடு மருந்துண்டு சுகம் காணுவோம்
காணுவோம் பெரும் சுகம் காணுவோம்.
வல்லோனின் திருமறையை வாழ்வெல்லாம் ஓதிடுவோம்
பொல்லாத தீங்குகளை இல்லாமல் ஓட்டிடுவோம்
இந்தத் திருமறையே இங்கு பொதுமறையாம்
எங்க வாழ்வின் போக்கை இங்கு சுகம் வந்து மறைத்தது
ஓதுவோம் குர்ஆனை ஓதுவோம்
வாழுவோம் சொர்க்கத்தில் வாழுவோம்.
                                     (ஓதுகுர்ஆன்)

படைத்தோனின் உரையாகும் - பசித்தோர்க்கு இரையாகும்
இரையோடு உரை கேட்டு இதம் காணுவோம்
காணுவோம் - பேரின்பம் காணுவோம்
ஆழ் கடலின் முத்தாகும் - அது எங்கள் சொத்தாகும்
முத்தான சொத் தெடுத்து ஜெயம் காணுவோம்
காணுவோம் பெரும் ஜெயம் காணுவோம்.
விஞ்ஞானப் பொது மறையை - அஞ்சாமல்; ஓதிடுவோம்
மெஞ்ஞானத் தெளிவுகளை - மேலாகப் பெற்றிடுவோம்
இந்தத் திருமறையே இங்கு பொதுமறையாம்
எங்க வாழ்வின் போக்கை இங்கு சுகம் வந்து மறைத்தது
ஓதுவோம் குர்ஆனை ஓதுவோம்
வாழுவோம் சொர்க்கத்தில் வாழுவோம்.
                                     (ஓதுகுர்ஆன்)


பாடல் வரிகள் : மதியன்பன்
பாடியவர் : செல்வன் ஷாதுலி
28.05.2010



மெட்டு - மேரே சப்பனபு ராணிகபு ஐகிது
மதியன்பன்

இளம் பிறையொன்று வானில் கண்ணை சிமிட்டுதே
இதை கண்டு மனம் இன்பத்திலே திளைக்குதே....
காடு மலை சோலையெல்லாம் ஜொலிக்குதே..
வரவால்....புது உறவால்.....
இளம்....

முஹர்ரம் மாதத்தின் ....முதற்பிறை வானிலே.....
ஹிஜ்ரி; ஆண்டினை..... நினைவுக்குத் தருதே...
நபி மக்காவிட்டு மதினா போனதே......
இளம்....

கர்பலா களத்தில்.....இமாம் ஹூஸைன் கொலையும்
மதினா சாசனம்...... இன்னும் பல நிகழ்வும்...
தௌர் குகையினில் நம் நபி இருந்ததும்
இளம்....

முஸ்லிம்கள் நமக்கு.....  இது முதல் மாதம்
புதியதோர் வாழ்க்கை....தொடங்கிட வேண்டும்
பல சவால்கள் நம்முன் இருக்குதே...........
இளம்....











மெட்டு - என்மன வானில் சிறகு விரிக்கும்..

தொண்ணூறாம் ஆண்டு பள்ளியில் நடந்த
படு கொலைச் சம்பவமே!
இந்தச் சம்பவம் கோட்டால் உங்கள் இதயமும்
ஒரு கனம் நின்று விடும்!
பட பட பட வென துப்பாக்கி வேட்டுக்கள்
ஒலித்து ஓய்ந்தனவே...!
இந்த வேட்டுக்குள் மாட்டிய நம்மவர் அங்கே
துடித்து இறந்தனரே...
இரவுத் தொழுகை -  இஷாவினை முடித்திட
பள்ளியில் கூடி நின்றோர்
தலையினைத் தாழ்தி சுஜுதினைச் செய்திட
வேட்டுக்கள் தீர்;த்தனரே..
பல குண்டு வீழந்;தே...! உடலும் சரிந்ததே
இதயம் தாங்குமோ நீ கூறு...
          (தொண்ணூறாம்)

பள்ளியில் ரெத்த வெள்ளம்  பதறின பலரின் உள்ளம்
வெளியினில் இதை யாரும் அறியாரே...
வீழ்ந்தவர் கலிமாச் சொன்னார். எழுந்தவர் உதவிகள் என்றார்
எதிரிகள் இதை அறிய மறைந்தாரே..
ஊரவர் ஓடியே வந்தார். உடனடி உதவிகள் தந்தார்.
எதர்க்கும் அவர் அஞ்சிட வில்லை அங்கே...
காயப்பட்டோர் அள்ளப் பட்டார்.
கண்ணைத் தானே மூடிக் கொண்டார்;
கல் நெஞ்சும் கரைந்து போகும் ஊரெங்கும் ஓலம்..!

          (தொண்ணூறாம்)

சின்னவர் பெரியவர் என்று  சிதறிய உடல்கள் அங்கு
நூற்றையும் அவை தாண்டிப் போயாச்சி
உறவினர் வந்து அஙN;க  ஒதுங்கிய உடல்கள் கண்டு
பதறிய காட்சி இன்னும் படமாச்சி.
பள்ளிகள் இரண்டுக்குள்ளே   படுகொலை முடிந்து போச்சி
சொர்க்கம் அவர் வாழ்ந்திடும் இல்லம் அங்கே
காயப்பட்டோர் இன்னும் உள்ளார்
கருனையுள்ளோர் உதவியுள்ளார்
இளநெஞ்சும் புரிந்திட வேண்டும் வரலாற்றுச்சோகம்.

(தொண்ணூறாம்)


மெட்டு - பொம்புளைங்க  வார்த்தையினை  நம்பி விடாதே.....

வம்பளப்போர் வார்த்தையினை நம்பிவிடாதே! நம்பிவிடாதே...
நம்பியிங்N;க வதந்தியினை பரப்பி விடாதே! பரப்பிவிடாதே...
அடிடாண்டு சொல்லி விடுவார் ஆளையும் காட்டி
அப்பாவி செத்து மடிவான் இடையில மாட்டி
பொய்யர்கள் எல்லாம் தீயவர் ஜாதி!
புரிந்திட வேண்டும் மானிட ஜாதி!
(வம்பளப்போர்....)
அயல் ஊரில் குழம்பம் எண்டு சொல்லி வைப்பாங்க...
அதை அப்படியே நம்பி பலர் குழம்பிடத்தானா...
வருவோரை கல் லெறிந்து துரத்திடு வாங்க...
அவர் வாகனத்தை நிறுத்தி வைத்து தீயிடத் தானா..
வீதியெல்லாம் கல்லைப் போட்டு மறிச்சிடுவாங்க...
நீநி கேட்டா கையக்கால முறிச்சிடுவாங்க...
நம்பி விடாதே... பொய்யை நம்பிவிடாதே...
நம்பி விடாதே பொய்யை நம்பிவிடாதே...
(வம்பளப்போர்....)
வதந்தியால குழப்பம் பல வந்தது உண்டு.
இந்த வதந்தியால நன்மை எங்கும் விழைந்தது உண்டா....?
வதந்தியால இனங்கள் பகை பட்டது உண்டு.
இந்த வதந்தியால மனங்கள் ஒன்று சேர்ந்தது உண்டா....?
வதந்தி சொல்ல பல பேரு காத்திருக் காண்டா..
எங்காய்ச்சும் எதிர்த்தவனை உதைத்தது உண்டா...?
நம்பி விடாதே பொய்யை நம்பிவிடாதே...
நம்பி விடாதே பொய்யை நம்பிவிடாதே...
(வம்பளப்போர்....)
வளர்ந்த உறவு தளர்ந்த போச்சி வதந்தியினாலே...
பலர் வாழ்க்கை சுகமும் இழந்து போச்சி வதந்தியினாலே...
எல்லையிலே பதட்டம் இந்த வதந்தியினாலே...
பலர் உடலும் உறவும் இழந்து போச்சி வதந்தியினாலே...
வதந்தி பரவ காரணமே பொய்யுரை தான்டா
வாழ்க்கையிலே சுகம் கிடைக்கும் மெய்யுரைதாண்டா
நம்பி விடாதே பொய்யை நம்பி விடாதே...
நம்பி விடாதே பொய்யை நம்பி விடாதே...
 (வம்பளப்போர்;....)




மெட்டு - ஆப்பிள் பெண்ணே  நீ யாரோ...

காஸ்மீர் பெண்ணே நீ யாரோ...
கலகம் கண்ணீர்; உன் ஊரோ...
காலம் காலம் உந்தன் ஊரில் போரா...
குண்டுகள் வீழும் உன் ஊரோ..  கொட்டும்  விழிகள் செந்நீரோ..
குழப்பம்  தன்னை அடக்கிட வருபவர் யாரோ..
அங்கே ஓர் தீர்வு வேண்டி..   அமெரிக்கா வருகுதடி
பகையினை மூட்டி விட்டு    பார்த்துமே ரசிக்குதடி
பல்லாண்டு கால யுத்தம்..   பல உயிர் அழிந்த தடி
பொல்லாத யுத்தம் இந்த   புவியினை அழித்த தடி

இந்திய அரசோ! தீர்வொன்று இன்றி-
இழுத்து அடிப்பதில் நியாய மில்லை-
பாகிஸ்தான் அரசை - பயத்தினை காட்டி
பணிந்திட வைத்திட முடியவில்லை
எல்லைகள் இரண்டில் ராணுவம் குவித்து
உள்ளதை இழந்திட தேவையில்லை!
தொட்டிலை ஆட்டி பிள்ளையும் கிள்ளி-
தொடர்கதை எழுதிடத் தேவையில்லை

அமெரிக்க ஆயுத வரவாலே..    அழகிய காஸ்மீர் அழிந்தாச்சி
பெறுமதியான உயிரெல்லாம்   போரால் இங்கே இழந்தாச்சி
இரு அரசு முன்னாலே பொறுப்புகள் உண்டு
புரிந்து செயல் படனும்
                                           (அங்கே ஓர்
அரசுகள் இரண்டும் அணு குண்டை வைத்து
அழித்திட நினைப்பதில்  வெற்றியில்லை
ஒருவருக் கொருவர் பரஸ்பரத் தோடு
பேசித் தீர்ப்பதில் தோல்வியில்லை
தொடங்கிய யுத்தம்  தொடர் கதை யானால்
எஞ்சிய உயிர்களும் நிலைப்பதில்லை
அஞ்சியே வாழ்ந்திடும் அவலங்கள் இனி மேல்
அகிலத்தில் எங்கும் தேவையில்லை

போருக்கு தீர்வைக் காணாமல்   புலம்பிடும் வேலைகள் இனி வேண்டாம்
நேருக்கு நேரே பேசித் தான்;     நிரந்தர தீர்வைக்  கண்டிடனும்
இரு அரசு முன்னாலே பொறுப்புகள் உண்டு
புரிந்து செயல்படனும்                            (அங்கே ஒர்)





மெட்டு - கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம் வைத்தான் 

காயித் மில்லத் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் - அவர்
காலமான செய்தி கேட்டு கவலையில் ஆழ்ந்தோம்.
பாவி மனம் பதறியது துடித்து அழுதது - இந்த
பாருலகே கண்ணீரில் மிதந்தது துடித்தது .
             (காயித் மில்லத்)

காத்த நகர்  மக்களுக்கு மதியென வந்தார் - நம்
கல்புகளில் நீங்காத  ஒளியினைத் தந்தார்.
பூத்த புகழ் கொண்டு இந்த புவியினில் வாழ்ந்தார் - இவர்
புவி மறைந்து போனதினால் புண்பட்டு போனோம்.
             (காயித் மில்லத்)

முஸ்லிம் சமூகம் கல்வியிலே பின் நின்ற வேளை
முழு மூச்சாக முயன்றுழைத்து முன்னேறே வைத்தார்.
இஸ்லாத்தின் உடையினிலே பள்ளிக்குச் செல்ல - இளம்
பெண்களுக்கு அனுமதியை அவர் பெற்றுக் கெடுத்தார்.
              (காயித் மில்லத்)

ஈழமணித் திருநாட்டு வானொலி தன்னில்
இன்றொலிக்கும் முஸ்லிம் சேவை அவர் பெற்றுத்தந்தார்.
தாழமுக்கம், சூறாவளி அடித்திட்ட வேளை - அவர்
தயங்காது ஓடிவந்து பணிபல செய்தார்.
              (காயித் மில்லத்)

கபுறடியில் அன்னாரை வைத்துமே நாங்கள்
காசு கொட்டி நிறுத்தெடுத்தோம் தராசிலே வைத்து
நிறுத்த காசை அன்னார்கள் கல்விக்கு தந்தார்
நிமிர்ந்து நிற்கும் மில்லத் கூடம் அதற்கிங்கு சாட்சி.
                        (காயித் மில்லத்)

இறக்கும் வரை சமூகம் சமூகம் என்றதனாலே - அவர்
இருக்கும் போதே மில்லத் எனும் பட்டத்தை பெற்றார்.
உறக்கமின்றி விழித்திருந்து சேவைகள் செய்தார் - அவர்
உணர்வை யெல்லாம் சமூகத்திற்கு அர்ப்பணம் செய்தார்.
                  (காயித் மில்லத்)

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளைப் பொறுப்பான்
வளம் நிறைந்த சொர்க்கத்தினை அவருக்குக் கொடுப்பான்.
இரு கரமும் ஏந்தி நாங்கள் இறையை வேண்டினோhம்
இறைவா எம் பிராத்தனையை ஏற்றருள் புரிவாய்.....
                                        (காயித் மில்லத்)

 


மெட்டு-  திருப்பதி ஏழுமலை வெங்கடேசா..                                                                                                                                                                                                                   

திருமணம் செய்யப்போகும் எந்தன் தோழா..
இங்கு, சீதனம் கேட்கிறியே ரெம்ப நாளா..
இலட்சமிங்கு வேணாம்... ஓ..
இலட்சியங்கள் வேணும்... ஓ..
ஆணாக நீ வாழனும்.. தோழா...
   (திருமணம்)

பெண்ணைப் பெற்றால் பெரும் பாடு
இங்கு பேரம் பேசுது வெறும் மாடு
கண்ணென வருவாள் பெண் ஒருத்தி
நீ, இமையெனக் காக்கணும் நெஞ்சில் இருத்தி
எந்தன் அன்புத் தோழா... ஓஹோ.. ஹோ.. ஹோ
எழுந்திங்கு வாடா... ஓஹோ.. ஹோ.. ஹோ..
வாடா...வாடா... பெண்களை வாட்டும்
சீதனப் பேயை விரட்டிட வாடா
சத்தியத்தின் பாதை அமை;போம் தோழா...
   (திருமணம்)

புன்னகை கொண்டது பெண் இனமாம்
இங்கு, பொன்னகை கேட்குது புண் மனமாம்!
பெண்கள் உலகத்தின் ஆதனமாம்!
நீ, பிறகேன் கேட்கிறாய் சீதனமாம்!
வீடு காணி வேணாம்... ஓஹோ.. ஹோ.. ஹோ..
வேறுசொத்தும் வேணாம்...ஓஹோ.. ஹோ.. ஹோ..
தோழா தோழா! துணிந்திங்கு வாடா
சிறையினை உடைத்து சரித்திரம் தாடா!
பணி செய்யும் காலம் இதுதான் தோழா...
   (திருமணம்)





மெட்டு - மச்சினியே மச்சி மச்சினியே...  

அம்மணியே எங்க அம்மணியே..
ஆட்சியிலே ஆட்டம் தெரிகிறதே..
கூடிக் கூட்டித்தான் பேசிக்கனும்
கூடிப் பேசித்தான் யோசிக்கனும்
அமைதி நமக்கு அருகில் இருக்கும் வாங்களேன்..
  (அம்மணியே)

யானை பிடித்தாயே இணங்காமல் போகிறதே..
மணியோ சரியா இடம் பார்த்து ஒலிக்கிறதே..
ஒன்றாய் சேர்ந்தால் இங்கு போரொல்லாம் புன்னகையே..

  (அம்மணியே)

பாராளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டித்தான்
பல காட்சி ஒன்றாக சேர்கிறதே!
கூட்டாச்சி இல்லாமல் தனியாச்சி நிலைக்காதே
ஜே.வி.பி கைகோர்த்து வருகின்றதே..
தனக்கொரு விடிவு கிட்டும் வரை-
இறங்கிட வேண்டும் எதிரி அறை.
நம் நாட்டின் போர்மேகம் விலகி
அமைதி காற்று வீச வேண்டும்.
  (அம்மணியே)

சிறுபான்மை இனமெல்லாம் சீரழிந்துபோகிறதே
சிறப்பான தீர்வென்று தரவேண்டுமே
வருகின்ற தீர்வுக்குள் வடகிழக்கு இனத்தாரி;ன்
வாழ்வுக்கு விடிவென்று வரவேண்டுமே
தமிழரின் பிரச்சனை தீரும் வரை
தாயகம் டே;குது புலிகள் படை
இனமோதல் ஒரு சாபம் இதை
நிறுத்த அரசு உதவ வேண்டும்
  (அம்மணியே)




மெட்டு - சொக்கலேட்டு உதட்டில் மெக்கினேட்டு இருக்கு.. 

வேட்டு சத்தம் போச்சி - பாட்டு சத்தம் ஆச்சி
நாட்டுக்குள்ளே அமைதி வெள்ளம் உருவாச்சி
யுத்தம் இல்லை - இங்கு ரெத்தம் இல்லை
நம்ம வாழ்க்கை யெல்லாம் - ஒரு கண்டம் இல்லை
நாங்க ஒன்னு சேர்ந்து சொல்ல வேண்டும் றுந யசந கசநைனௌ
றுந யசந கசநைனௌ ...  றுந யசந கசநைனௌ ...
(வேட்டுச் சத்தம்)

பொல்லாத யுத்தம் எல்லாம் -  பூண்டோடு அழிந்து போச்சி -
கல்லான மனசும் கூட -   கழுவாமல் கரைந்து போச்சி -
தாய் நாட்டின் மீது பற்று -  நம்மவர்க்கு திரும்பி யாச்சி -
வெடிக்கின்ற குண்டு இங்கே -  விளைகின்ற விதைக ளாச்சி -
நிரந்தர சமாதானம் நாட்டுக்குள்ளே வேணும் தோழா!
நாமொன்றாய் சேர வேணும் வாடா..
சமாதானம் ஆன பின்னே - நம்மை நாமே ஆள வேண்டும்
எதிர் காலம் எங்க கையில் தோழா..
நம்ம நாட்டுக்குள்ளே.. இனி யுத்தம் வேணாம்
ஒரு போர் வெடித்தால்.. பல உயிர் துடிக்கும்
அட! ஊர் எங்கும் கேட்கட்டும்  நாடெங்கும் பேசட்டும்
வாய் விட்டு நாம் செல்லுவோம்...
றுந யசந கசநைனௌ ...  றுந யசந கசநைனௌ ...
                            (வேட்டுச் சத்தம்)

தீயாகிப்போன உள்ளம் -  பூவாக மாறிப் போச்சி -
தாயோடு பிள்ளை வந்து -  தலை யுச்சி மோர லாச்சி -
அடைபட்ட வீதி யெல்லாம் -  ஆங்காங்கு திறக்க லாச்சி -
மடை திறந்த வெள்ளம் போல -  மக்கள் வெளி யேறி யாச்சி -
நடந்தவை யெல்லாம் இங்கே - கெட்ட கனவாச்சி தோழா...
நல்ல செயல் நடக்க வேண்டும் வாடா...!
பிட்டு தேங்கா பூவைப் போல - ஒட்டி மனம் உறவாடும்
கெட்டு மேளம் கேட்க வேண்டும் தோழா...!
சிறு நாட்டுக்குள்ளே... இனி பிளவு வேண்டாம்!
பல இனங்கள் சேர்ந்த.. புது உறவு வேண்டும்!
அட - வேஷங்கள் தளரட்டும்   நேஷங்கள் வளரட்டும்
மனம் விட்டு நாம் சொல்லுவோம்
றுந யசந கசநைனௌ ...  றுந யசந கசநைனௌ ...
        (வேட்டுச் சத்தம்)





மெட்டு - புதுமலர் தொட்டுச் செல்லும் காற்றை நிறுத்து  

இருகரம் கூப்பி வந்து வாக்கைத் திரட்டு!
எதிர்ப்பவர் காலைத் தொட்டு வாக்கைத் திரட்டு!
வெட்கம் ரோசம் மானம் விட்டு வாக்கைத் திரட்டு!
வெற்றி கிடைக்குமே...!
உனக்கும் வெற்றி கிடைக்குமே...!
(இருகரம்)

பொது மேடை போட்டு வந்து பொய்களை கூறு!
புதுப் புது ஆட்கள் வைத்து எதிரியை கீறு!
இனப் பகை தூண்டிவிட்டு வேடிக்கை பாரு!
வெற்றி கிடைக்குமே...!
உனக்கும் வெற்றி கிடைக்குமே...!
திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா
(இருகரம்)

நாயைப் பார்த்தாலும் உன்முகம் காட்டு!
நரியைப் பாரத்தாலும் இன்முகம் காட்டு!
பேயைப்பார்த்தாலும் இருகரம் நீட்டு! ஓ...

செய்ய முடியாதா திட்டங்கள் சொல்லு!
செத்த மனுஷங்க வாக்குகள் அள்ளு!
பத்துப் பதினஞ்சு லெட்சங்கள் தள்ளு!
வெற்றி கிடைக்குமே
உனக்கும் வெற்றி கிடைக்குமே
(இருகரம்)

இந்த தேர்தலில் வெற்றி பெற யுக்திகள் வேணும்!
நல்ல வோட்டும் கள்ள வேட்டும் ஒன்று சேர வேணும்!
விரல் மையை அழிக்கின்ற திரவங்கள் வேனும்!
வேறு வேறு சாவடியில் வாக்கு போட வேணும்!
கண்ணுக்குள்ள எண்ணவிடு .. கள்ளத்தனம் பண்ணிவிடு.
எண்ணுக்குள்ள கீறிவிடு நேர்மையினை மீறிவிடு.
வெற்றி கிடைக்குமே...!
உனக்கும் வெற்றி கிடைக்குமே...! (இருகரம்)





மெட்டு - செம்பருத்திப் பூவே செம்பரு த்திப் பூவே..

சொந்த மண்ணை இழந்து சோகத்தில வாழும்
செந்தழிழா உனக்கு விடிவில்லையா?
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகின்ற தேளை
வந்த வழி விரட்டிட துணிவில்லையா...
ஹெலி சுற்றி சுற்றி வருதே தெரியல்லையா
புலி, யுத்தம் செய்து தருதே புரியல்லையா
நாம், வாழத்தான் நினைக்கின்றோம்...
இங்கு வாழாமல் துடிக்கின்றோம்     (சொந்த மண்ணை)

ஓயாத அலையென போர் வெடிக்கும்
போருக்குள் அகப்பட்டு உயிர் துடிக்கும்
நாமென்ன செய்யப் போறோம்
நம்பி நம்பி வெந்து போனோம்
உள்ளமெல்லாம் எரிகிரதே!
காலையில் எழுந்ததும் சுற்றி வளைப்பு
மாலையில் வருகுது புலி அழைப்பு
ஸ்ரீலங்கா அரசே! துணிந்து விட்டாலே
போருக்கு முடிவு வரும்
போரா தீர்வா தெரியவில்லை -
புலிகளின் நிலையோ புரியவில்லை!
நாம், வாழத்தான் நினைக்கிறோம்...
இங்கு வாழாமல் துடிக்கறோம்...
     (சொந்த மண்ணை)

பள்ளிக்குச் சென்ற பிள்ளை திரும்ப வில்லை
பாவிகள் கையில்பட்டு கசங்கும் முல்லை
தாயின் மனம் வெந்து போச்சு
தந்தை மனம் நொந்து போச்சு
குடும்பம்மெல்லாம் அழுகிறது
கண்ணீரு ஆறெனப் பெருக்கெடுக்கும்
கஷ்டமோ குடும்பத்தை பொறுப்பெடுக்கும்
தாய்க்குலமிங்கே தவிக்குது தினமே சோதனை தொடர்கிறதே
வாழ்வா சாவா தெரியவில்லை -
வாழ்வதன் அர்த்தம் புரியவில்லை
நாம் வாழத்தான் நினைக்கின்றோம்..
இங்கு வாழாமல் துடிக்கிறோம்...
 (சொந்த மண்ணை)




மெட்டு - காற்றுக்கு பூக்கள் சொந்தம்...

ஈழத்தில்; ஓடுது ரத்தம்
எப்போதும் நிற்கும் யுத்தம்
யுத்தத்திற்கு சொந்தக்காரர் சொல்வாரா...
நம், உறவுகளை இங்கே வாழ விடுவாரா...
ஒ...ஹோ...ஒ...ஹோ...ஒ...ஹோ...
ஜே ஆரும் ஆண்டு போனார்
பிரேமாவும் மாண்டு போனார்
சந்திரிக்கா என்ன செய்யப் போகிறார்
நம், சந்ததியோ யுத்தத்தாலே வேகின்றார்.
     (ஈழத்தில்)

ஹெலிகள் வந்து குண்டு போதே..
கேட்போர் இன்றி சனங்கள் வாடுதே..
புலியே அரசே போரை நிறுத்த மாட்டீரோ -
கருணை காட்டீரோ..
வடக்கும் கிழக்கும் அழிஞ்சு போச்சுதே
வாழ்கை இங்கே முடிஞ்சு போச்சுததே
மலையகத்துள்ளும் போரின் தாக்கம் தெரிகிறதே-
நோக்கம் புரிகிறதே...
தமிழினம் இங்கே அடிமையாச்சுதே
தாயகம் கேட்டால் கொடுமையாச்சுதே
தமிழா உனக்கு விடிவு எப்போ சொல்வாயா..
உரிமை வெல்வயா..
     (ஈழத்தில்;)

வெளியில சென்றால் திரும்ப முடியல்ல
வீட்டில இருந்தால் நமக்கு விடியல்ல
சுற்றி வளைப்பில் அழைத்து போனோர் என்னானார்
;பிறகு மண்ணானர்;
தந்தையைப் பிரிந்து பிள்ளை துடிக்குது
தாயை இழந்து கண்ணீர் வடிக்குது
உறவினரெல்லாம் முகாம்களுக்குள்ளே வாடுகிறார்
;உறவைத் தேடுகிறார்
நாளைய பொழுதில் ஈழம் புலரனும்
நன்மைகள் இங்கே நிறைய மலரனும்
மூவினம் அங்கே ஓரினம் போல வாழ்ந்திடனும்
இறைவன் துணை தரனும்...
     (ஈழத்தில்;)




மெட்டு - இன்னிசை பாடி வரும் இளங் காற்றுக்கு..

முஸ்லிம் காங்கிரஸின் முதல் காவிய நாயகனே!
அடிமை விலங்கொடித்து புது அரசியல் தந்தவனே!
எங்கள் இதயம் பூக்குதே! உங்கள் வருகை பார்க்கவே!
காத்தான் குடியின் வாசலோ! இன்று வாசம் வீசுதே..
கீழ் வானிலே விடி வெள்ளிதான் -
உங்க சேவை பார்க்க பார்க்க மனசு மகிழ்கிறதே...!
(முஸ்லிம்)

நிறம் மாறும் மனிதர்க்கு வழி காட்ட முடியாது!
வழிகாட்டும் ஒளி விளக்கே! உமை வாழ்த்த மொழியேது?
தளபதி அஷ்ரபே! உங்க தலைமையில் நாங்களே!
இளமதி ஹிஸ்புல்லாஹ் அவர் அழைப்பினில் நீங்களே!
தேசிய ஜக்கிய முன்னணியின் தேசியத் தளபதியே...!
இன மொழி பாரா தொண்டு செய்யும் சேவையின் முழு மதியே..
உமை வாழ்த்தும் மனதில் பாடல் கூட ஒரு சுகமே...
(முஸ்லிம்)

பிளவுண்ட சமூகத்தை ஒன்றாக்கி வைத்தீரே..
பிறர் வாழ தன் வாழ்வை மெழுகாகக் கரைத்தீரே..!
பேரின வாதமோ... எமை அடக்கி ஆண்டதால்
போரிடும் கட்சியாய் இங்கு காங்கிரஸ் ஆனதே..
முஸ்லிம் காங்கிரஸ் எனும் விதையை நட்டிய ஊரிதுவே!
காங்கிரஸ் என்னும் மரம் வளர ஆணி வேர் நீரே...
உமை வாழ்த்தும் மனதில் பாடல் கூட ஒரு சுகமே...!
(முஸ்லிம்)

உடலிங்கு இல்லாமல் உயிர் வாழ முடியாது -
உடலுக்கு உயிர் போல கட்சிக்கு உயிர் நீங்கள்
அரசியல் ஞானியே... உங்க அனுபவம் ஆழுமே!
அரசியல் கட்சிகள்  உங்க கால்களில் வீழுமே!
ஆட்சியில் நீங்கள் விலகி விட்டால் அரசோ கவிழ்து விடும்!
ஆட்சியில் சில பேர் சிக்கி விட்டார் ஒருநாள் புரிந்து விடும்!
உமை வாழ்தும் மனதில் பாடல் கூட ஒரு சுகமே...!
(முஸ்லிம்)




மெட்டு - ஆயிற் பாடி மாளிகையில்  தாய் மடியில்...

ஆல மரத்தின் ஆணிவேரு அமைச்சர் அஷ்ரப் இறப்புச் செய்தி
அறிந்தவுடன் துடி துடித்துப் போனோமே.. பலர்
ஓல மிட்டு அழுவதையும் ஒப்பாரி வைப்பதையும்
இன்னு மின்னும் கண்டு மனம் அழுகிறதே..
புனர் வாழ்வு - புணரமைப்பு கப்பல் துறை அமைச்சராகி
புதிய தொரு சரித்திரத்தை தந்தீரே..! உங்க
பணிகளிலே வெற்றி கண்டோம்! பாதையிலே யுக்தி கண்டோம்
புனித ஜிஹாத் வரிசையிலே சென்றீரே...!

சட்டத்துறையில் வல்லவனாய்..சமூகத்திலே நல்லவனாய்..
சமாதானத் தூதுவனாய் வாழ்ந்தீரே...! - புதிய
திட்டங்களைத் தீட்டி வைத்தீர்- தீயவற்றை ஓட்டிவைத்தீர்!
பூட்டி வைத்த விலங் கொடித்துத் தந்தீரே...!

பாராளு மன்றத்திலே பங்காளிக் கட்சியமைத்து
சீராக நாட்டுப் பணி செய்தீரே! - இங்கு
தோணியென வந்தீரே! - ஏணியென நின்றீரே
துடிப்பிழந்த ஓடமெனப் போனோமே..
இலங்கை இனப் பிரச்சனைக்கு இணக்கமான தீர்வு ஒன்றை
விளக்கமுடன் அரங்கினிலே சொன்னீரே ! - உங்க
உள்ளத்திலே கள்ள மில்லை - கயமையில்லை கபடமில்லை
வெள்ளை மனம் கொன்டவரே சென்றீரே!

பல்லினத்து மாந்தர்களும் பதறியழும் காட்சி கண்டோம்
பாதியிலே உலகை விட்டுப் போனீரே! - எங்க
இரு விழியும் அழுகிறதே! இதயம் ரெத்தம் வடிக்கிறதே
உருக்குலைத்து போனோமே நாம் அறிவீரோ...
உலக நாடு சுற்றிச் சுற்றி உதவிகளைப் பெற்ற வந்து
இலங்கை நாட்டு மக்களுக்காய் இறைத்தீரே..
வளங் கொளிக்கும் ஹாபரையும் வசதியுள்ள கெம்பசையும்
கிழக்கு மக்கள் நலங்கருதி தந்தீரே..

பிளவு பட்ட சமூகத்தினை பிட்டு தேங்காய் பூவெனவே
உறவாட வைத்தவரே மறைந்தீரே.. நீங்க
அமைத்துத் தந்த காங்கிரசும் ஐக்கிய முன்னணியும்
சமைத் தெடுக்கும் புதிய தொரு சரித்திரமே...

வல்லவனே அல்லாஹ்வே அமைச்சர் அஷ்ரப் அவர்களது
குற்றம் குறை பாவங்களைக் களைவாயே.. அவர்
கபுறு ஒளி காண்பதற்கும் சுவனம் சென்று வாழ்வதற்கும்
வல்ல அல்லாஹ்வே உன்னருளைச் சொரிவாயே...





மெட்டு - காதல் வெண்ணிலா  கையில் சேருமா..

ஆப்கான் மண்ணிலே அமைதி தோன்றுமே..
வெல்லும் சத்தியமே!
இங்கு வெல்லும் சத்தியமே
இணையாக அரபு இருக்கும்
துணையாக போரைத் தொடுக்கும்
பல் நாட்டு படை ஏங்கும்
முல்லாவின் கரம் ஓங்கும்.
      (ஆப்கான்)

தாலிபான் படையுடன் போராடும்
தகுதி அமெரிக்கப் படைக்கில்லையே..
ஈராக் படையுடன் போராடி
இழந்த உடமைகள் கிடைக்கல்லையே
அமெரிக்க அரசே முயலாதே!
ஆப்கானை தாக்கிட இயலாதே!
வெல்லும் சத்தியமே!
இங்கு வெல்லும் சத்தியமே!
      (ஆப்கான்)

பாரினை அடக்கிடும் அமெரிக்காவை
பணிய வைத்திடும் நாள் வருதே!
போரினில் புதுமையைக் கையாண்டு
புனிதப் போர் ஆப்கான் செய்கிறதே!
அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும்
அமெரிக்கப் படைகளும் தோற்றிடுமே
வெல்லும் சத்தியமே!
இங்கு வெல்லும் சத்தியமே!
      (ஆப்கான்)





மெட்டு - ஒவ்வொரு பாடலிலும்....ஒவ்வொரு..

ஒவ்வொரு சென்றியிலும் ஒவ்வொரு குறையிருக்கும்
குறையினை தெரிந்திடுவாய் பெண்ணே!
பெண்ணே தழிழ்ப் பெண்ணே!
வேலியில் முள்ளிருக்கும் வேதனை உள்ளிருக்கும்
சோதனை தொடர்கிறதே பெண்ணே!
பெண்ணே தமிழ்ப் பெண்ணே ஓஹோஹோ....

எப்போதும் நடந்திடும்; கால்கள்; இப்போது நடந்திட மறுக்கும்
துப்பொன்று வந்தால் போதும் - துப்பாக்கி எம்மைத் துரத்தும்
அப்பாவி மக்கள் என்றால் அதிகம் கவனம் வரும்

                                        (ஒவ்வோரு..)
மாங்குளம், மருதானை வண்ணியெங்கும்
கற்பழிப்பு, யுவதிகள் கற்பழிப்பு.
ஏங்குது தாய்க்குலம் சென்றிகளில்
வல்லுறவு பாலியல் வல்லுறவு.
அதிகாலை வேளையே.. நடமாடும் ஆளையே..
காரணமின்றி கைதுகள் தொடர்கிறது
தேடுகின்ற ஆளையே ராணுவம் காணாது.
வீடுபோகும் வாழ்க்கையே நிஜமாய் ஆகாது.  ஓ..ஓ..
உண்மைகள் உறங்கிடும் போது உயிரோட்டம் நின்றே போகும்
சோகங்கள் வந்தால் கூட சுமைகள் கொண்டு வரும்.

                                        (ஒவ்வோரு..)

ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுவேறாய்
அணிவகுப்பு. சென்றியில் அணிவகுப்பு.
இளயவர் முதியவர் இறங்கி வர
படையழைப்பு. ஆயுதப் படையழைப்பு.
சோதனைச் சாவடி வேதனை தானடி.
உடமைகள் எல்லாம் படையிடம் விழிக்கிறது.
நாதியற்று மானுடம் நடைபிணம் ஆகிறது.
நீதி நேர்மை கூன்டிலே கைதியாய் போகிறது... ஓஹோஹோ..
சென்றிகள் முளைத்திடும் போது - சேர்ந்து நாம் உதவிடவேண்டும்
இல்லாது போனால் சிறையில் - கம்பிகள் எண்ணவரும்

     (ஒவ்வொரு...)





மெட்டு - ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்..

நேட்டோ பல சேர்ந்து ஆப்கானைத் தாக்கும்
தாக்கும் போதெல்லாம் பல தளங்கள் தளர்த்து விடும்
தொடர் குண்டுகள் வீழுகையி;ல்
பல உயிர்கள் அழிந்துவிடும்
இங்கு தாலிபான்கள் எழுகையிலே
பல விமானங்கள் விழுந்து விடும்
ராணுவங்கள் பின் வாங்கும்
ராடர் கருவி உள்; வாங்கும்!
போருக் கப்பல் திரும்பி விடும்
புனிதப் போரு ஜெயித்துவிடும்
         (நேட்டோ)


வெற்றி என்றாலே பின் லேடன் ஞாபகமே!
ரஷ்யா படை வந்து இங்கு தோற்றும் ஞாபகமே!
யுத்தம் என்றதும் உலகத்து அழிவு ஞாபகம்
செத்து போகுதே மனிதன் அறிவு ஞாபகம்!
         (நேட்டோ)


போரைப் புரியாமல் படை சேர்த்தும் அம்பலமே!
பாரை தன் கைக்குள் இங்கு வைத்தும் அம்பலமே!
பெண்டகன் உள்ளே தீட்டிய திட்டம் எல்லாம் அம்பலமே
உணவுப் பொட்டலம் சொல்லும் கதைகள் அம்பலம்
உதவிக்கரங்களை நீட்டும் சதியும் அம்பலம்
         (நேட்டோ)




மெட்டு - ரோஜாக் காற்று சுடிதார் போட்டு.. 

வா டா தோழா! கைகள் கோர்த்து
வடக்கு வீதிக்குச் சென்றா
அட தெற்கு மக்களும் வந்தா
நெஞ்சம் கவலை தீர்திடும் நின்றா.
குழியில் இருந்தோரடா..
வெளியில் வந்தாரடா..
இணக்கம் அரசோடுதான்.
இணைந்தார் இவர்தானடா...
       (வாடா தோழா)

அரசு! முன்னரசு போர் முறையில் சென்றதடி
ஆனால், புது அரசோ புலி மடியில் விழுந்தடி
விழுந்ததும் சண்டைகளோ, குழப்பங்களோ இல்லையடி
அதற்கும் மேலேயொரு உடன்படிக்கை கொண்டதடி!
இவர் பேச்சு வார்தை நடத்தப் போறார் பாரு
தாய்லாந்து நாட்டின் மேசையிலே
சென்று அவர் பேசி வர நேசக் காற்று வீசும்.
ஆடு புலி ஆடும் வேளையிது..
நாட்டுக்குள்ளே நதி பாயுமே..!
நல்ல மனம் விளையாடுமே...!
       (வாடா தோழா)

தமிழர்! முஸ்லிமிடை தனியுறவு தழைக்குதடா...
தழைக்கும் தனியுறவால் குடியேற்றம் நடக்குதடா!  ஓ.
வந்ததும் முறைப்புகளோ, முனங்கல்களோ இல்லையடா !
ஓமையா ஹோh..
இவர் காலமெல்லாம் வாழப்போறார் பாரு!
கண்ணை இமை காக்கும் பாணியிலே -
நின்று அவர் பேசையிலே தென்றல் வந்து சேரும்.
தேனை வண்டு மொய்க்கும் நேரமது!
உள்ளமெல்லாம் உறவாடுமே!
சேர்ந்த இனம் விளையாடுமே...   (வாடா தோழா)





மெட்டு - உன்னை உன்னை உருக்குரானே.. 

போரை போரை நிறுத்தியாச்சே..
புலியும் அரசும் ஒன்றாய் சேர்ந்து இணங்கியாச்சே..
ரெத்தம் ஓடும் எங்கள் நாட்டை
சுத்தமாய் வடி கட்டி தீர் வென்றைக் காண்போம்..
நோர்வே வந்து திரும்பியாச்சே..
தீர்வைச் செல்லும் நாளைக்காண ஆவலாச்சே..

  (போரை போரை)

ஆ..அரசு வந்து தீர்வை சொல்லும் நேரம்..
எங்கள் வாழ்வில் இன்பம் வந்து சேரும்.
சென்றி இன்றி பயணம் போவோம்
சேர்ந்து வந்து உணவைக் கொள்வோம்..
கன்னிப் பெண்ணின் கற்பைக் காற்போம்..
கவலை இன்றி சொத்துச் சோப்;போம்
போரெல்லாம் நாம் தொலைப்போமே..ஓ..
ஊரெல்லாம் விதை விதைப்போமே..
  (போரை போரை)

நாட்டுக்குள்ளே போர் முடிந்து போகும்
ஆர்வத்தோடு மக்கள் குடி ஏறும்
சொந்த மண்ணை காணும் போது...
சோகம் எல்லாம் தீயில் வேகும்...
ஈரினம் ஒன்று சோர்ந்தாலே..ஓ..
நேசக் காற்று வீசும்.. வீசும்..
பாசம் வந்து பேசும் பேசும்
ஒற்றுமைப் பாட்டொலிப் போமே..ஓ..
ஆயுளை அதில் முடிப்போமோ
ஈழப் போரு முடிந்து போகும்
வாழப்போகும் மனசுக்குள்ளே வசந்தம் வீசும்

  (போரை போரை)





மெட்டு - மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டது..

இலங்கையின் சுதந்திர தினம் வந்தது
இதன் பொருள்தான் என்ன..?
விடுதலை என்று பலர் விடை சொல்கின்றார்
விளைந்த பயன்தான் என்ன..?
இந்த தினம் இங்கு வந்து போனால் போதும்
என்னென்ன ஆகும், என்னென்ன ஆகும்
லீவொன்று சேரும், தூணில் கொடி ஒன்று ஏறும்...

                                    (இலங்கையில்)

ஆண்டு ஐம்பதைக் கடந்து விட்டோம்....
இதுவரை விடிவில்லை இங்கே ஒரு முடிவில்லை என்பேன்
தினம் அழியுது உயிரே...
என்ன சுதந்திரமோ யுத்தம் நம் வலக்கண்ணில்
ரெத்தம் நம் இடக்கண்ணில் நிஜமாய்.......
சுதந்திரமாய் வருகின்ற காற்று
சுவாசிக்கத்தான் முடியல்ல இங்கே -
வட கிழக்கில் செல்லாய் விழுகுது எல்லாம் அழியுது
நம் சுதந்திரம் வாழ்க..
நம் சுதந்திரம் வாழ்க...
        (இலங்கையில்)


நாட்டு நிலமை புரியவில்லை......
நமக்கொரு பொழுதில்லை இங்கே, ஒரு விழுதில்லை என்பேன்
தினம் ஏங்குது மனமே
என்ன வாழ்கையிது...
படையணி வலப்பக்கம் புலியணி இடப்பக்கம் வருதே
நிம்மதிக்காய் உறங்கிய மனிதன்
நிரந்தரமாய் உறங்கியே போனான்
இளமனதில் ரெத்தம் கொதிக்குது யுத்தம் அழைக்குது
நம் சுதந்திரம் வாழ்க..
நம் சுதந்திரம் வாழ்க

 (இலங்கையில்)






மெட்டு - வெண்ணிலவே  வெண்ணிலாவே விண்ணைத்தண்டி..

பூவுலகே பூவுலகே புன்னகைக்க வைத்தவளே
புனலென்னும் நீர்தானே!
இந்த பூலோகத்தில் நல்ல எழுச்சி தந்து
எம்மை மகிழ்ச்சியில் வாழ வைத்தாய்.....
 (பூவுலகே)

நீர் நிலையென்ன - நில வளமென்ன
இவையெல்லாமே உன்னோட உயிரோட்டம்
கார் மேகந்தான் - கடல் நதியும்தான்
இவை எல்லாமே உனக்குள்ள நீரோட்ம்
தோழா......கோளாய்.....
வயலோடு வரம்புக்கு நீரு நிரம்ப வேண்டும்!
பயிரோடு மரமெல்லாம் பசுமை காணவேண்டும்!
நாம் தாயின் மடியில் பிள்ளைகள் போல
நீர் பருகச் சுகம் உண்டு..
 (பூவுலகே)

உலகத்தின் முக்காலாய் நீரு உள்ளது பாரு
நீருள்ள இட மெல்லாம் பசுமை தெரியுது பாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியற்கின்றேன்
நீரெல்லாம் ஆவியென மாறிப்போகுது தன்னால் -
அவையெல்லாம் நீராக திரும்பி வருகுது பின்னால் -
நாம் நீரைக் காக்க வேண்டும்
நாம் உயிர் வாழ நீர் வேண்டும்
 (பூவுலகே)

ஆறில்லா ஊருக்கு அழகு பாழாம் தோழா...
நீருக்கு நிகராக ஏதும் இல்லை கேளாய்
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியற்கின்றேன்
பல்லினமும் பல உயிரும் வாழுது இந்த நீரால்
நீரின்றி வாழாது எதுவும் இங்கே பாராய்
நாம் நீரைப்; பேண வேண்டும்
நாம் உயிர் வாழ நீர் வேண்டும்.  (பூவுலகே)




மெட்டு - பல்லாங் குழியின்  வட்டம் பார்த்தேன்..

இலங்கை நாட்டின் அரசியல் பார்த்தேன் இரட்டை நாடகம்
எடுத்தவர் ஆளும் கைப்பிள்ளை போல ஆடுது ஊடகம்
புலிகளின் அணியில் போர்முகம் பார்த்தேன்
ராணுவ தரப்பினில் ரகசியம் பார்த்தேன்
ஏழையர் உள்ளம் எரிவதைப் பார்த்தேன்
நாளைய மலர்கள் நசிவதைப் பார்த்தேன்
கனவினில் ஒருநாள் சுதந்திரம் பார்த்தேன் அதுவும் நாடகம்
சரிகம சரிகம சரி..
      (இலங்கை நாட்டின்)

இந்த நாட்டில் ஓடுதே இரத்தாறு
இதை மாற்ற வேண்டுமே வரலாறு
அட புலியும் அரசும் ஒன்றெனச் சேர்ந்தால்
போருக்கிங்கு முடிவு வரும் - சேர்ந்து பேசக் கூப்பிடு..!
எங்க உணர்வுகளை யாரும் மதிப்பதில்லை
இதை விளக்கிட முடியாது!
இழந்த உரிமையை மீண்டும் பெறனும் எமக்கு வழியேது?
ஒன்று சேரனுமே சிறுபான்மையெல்லாம்
இங்கு பிரிவது கூடாது!
ஒன்று சேர்ந்திடில் வெற்றி நமக்கே - வென்று காட்டனுமே..!

      (இலங்கை நாட்டின்)

எங்க தலையைத் தடவுதே பெரும்பான்மை
இதை உணர மறுக்கிதே சிறுபான்மை
அட, மூன்றாம் தரப்பில் நம்பிக்கை வைத்தால்
பேச்சு நடத்த இடமிருக்கும்! - மனசு வைத்துக் கூப்பிடு..!
சொந்த நாட்டினிலே வாழும் அகதி நிலை
இனித் தொடர்ந்திடக் கூடாது.
கடந்த காலங்கள் கனவாய் போகனும் அரசு உடன்படனும்!
இந்தப் போர் முறையால் பல உயிரழிதே
இதைப் பொறுத்திட முடியாது!
புலியும் அரசும் போரை நிறுத்தி - பேச்சு நடத்தனுமே..

      (இலங்கை நாட்டின்)





மெட்டு - இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு..

போரினை புரிந்து வரும் இரு தரப்புக்கும் முடிவு இல்லை
முடிவினைத் தேடி வரும் தமிழ் இனைத்துக்கும் விடிவு இல்லை
ஒரு யுத்தம் வருகையில் மனிதம் செத்துப்போகுதே..
ஆனால், அடிமை வாழக்;கையோ
எம்மை அகதியாக்குதே
இந்த வாழ்கையே ஒரு நரகத்தான்
இதைப் பார்க்க பார்க்க
ஓடும் ரத்தம் உறைகிறதே
        (போரினை)

புலியில்லை என்றாலோ போர் இங்கு கிடையாது
போர் ஒன்று இல்லாது தீர்வொன்று கிடைக்காது
அரசியல் நாடகம் அட தொட்டில் ஆட்டுது
அரசதன் ஊடகம் அட தீயை மூட்டுது
அரசியல் தீர்வு வந்து விட்டால்
பிரச்சனை தீர்ந்துவிடும்
ஆயுத மோதல் வளர்ந்து விட்டால்
சனங்கள் அழிந்து விடும்
அட, அமைதி என்னும் காற்று வீச வரும் சுகமே...

        (போரினை)

படை வந்து நின்றாலே நடமாட்டம் இருக்காது
படை போன பின்னாலோ உயிரோட்டம் இருக்காது
ராணுவ சோதனை அட தினம் தினம் வேதனை
மானுடம் சாகுதே அட நமக்கிது போதனை
படைகளை நம்பி வாய் திறந்தால்
புலிகள் வந்து விடும்
புலிகள் கேள்விக்கு பதில் சொன்னால்
படைகள் கொன்று விடும்
அட, யாரை நம்பி வாழவேண்டும் என்று தெரியல்லையே..

        (போரினை)




மெட்டு - மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து  

ஆட்சியைப் பிடித்து ஆட்யைப் பிடித்து
ஆயுதம் தாங்கிய புலியை அழைத்து- வீதியில் விட்டு விட்டார்..
இப்படி இங்கொரு ஒப்பந்தம் செய்திட
இந்தியா, நோர்வையும் வந்ததை எண்ணித்தான் மக்களும் ஆசையுற்றார்!
இலங்கை நாட்டுக்குள் நுழைந்த யுத்தம்
மெல்ல விலகிச் செல்லும் போது
வேட்டுக்குள் கேட்கும் சத்தம் ஓய்கிறதே! ஓஹோ..
புலியின் அழைப்பை ஏற்று அரசு- புதிய தீர்வைச் சொல்லும்போது
நாட்டுக்குள் அமைதி வெள்ளம் பாய்கிறதே..
                                  (ஆட்சியை)

புலியும் அரசும் போரை நிறுத்தி
ஆயுதம் சேர்த்து ஆட் பலம் சேர்த்து ஆயத்தம் செய்கிறதே
அழிந்த நாட்டைக் கட்டி எழுப்பி
ஆமைதி வாழ்வை மீண்டும் கொடுத்து ஆதிக்கம் செய்கிறதே..
யுத்தம் என்பது ஆட்சிக்கா ? மீட்சிக்கா..
என்பதில் எமக்கு சந்தேகம் தீர்ந்தது
யுத்தம்;;;;;; என்பது நிச்சயம் மீட்சிக்கடா..! ஓஹோ..
புலிகள் என்பது ஈழம் கேட்குது
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
புலிகள் கேட்பது அரசியல் உரிமையடா!
                                   (ஆட்சியை)

வடக்கும் கிழக்கும் வழமை நிலைக்கு
திரும்பி யாச்சி என்னும் செய்தி தேனாய் பாய்கிறதே!
தமிழர் முஸ்லிம் உறவு மீண்டும்
தழைத்துப் போச்சி என்னும் பேச்சு ஒலித்து ஓய்கிறதே..
தீர்வு சொல்வது இந்தியா..? நோர்வையா..?
என்பதில் உள்ள சிக்கலும் தீர்ந்தது.
ஓப்பந்தம் இப்போ கைச்சாத்து ஆனதுவே..! ஓஹோ..
அம்மாவும், ஐயாவும் பேச்சு நடத்தி;
நல்லொரு முடிவை அரசு சொல்லிடும்
என்பதை எண்ணியே தமிழினம் வாழுதடா..
  (ஆட்சியை)

                                   

மெட்டு - குமுதம் போல்  வந்த குமரியே..

இமயம் போல் ரெட்டை கோபுரம்
இரு நிமிடத்தில் இடிந்த தென்னவோ
பலர், இரத்தத்திலே இறந்த தல்லவோ
                                      (இமயம்)

பின் லேடன் பேர் கேட்டால் உலகெல்லாம் நடுங்கும்
ஜோர்ஜ் புஷ்ஷின் உயிர் கூட கீஸாவுள் அடங்கும்
உலகத்தின் வேரோட்டமே
பின்லேடனின் போராட்டமே
பிறர் நலனுக்காய் போராடும் பின்லேடன் அணிகள் உண்டு
பல நாட்டில் உண்டு..
        (இமயம்)

அமெரிக்கா விமானங்கள் ஆப்கானைச் சூழும்
ஆப்கானோ எதிர் கொண்டால் அமெரிக்கா வீழும்
பலமான இதயம் உண்டு
இதில் இறந்தாலே சொர்க்கம் உண்டு
எனும் உணர்வோடு போராடும் பின் லேடன் அணிகள் உண்டு
நெஞ்சில் உறுதியுண்டு..
        (இமயம்)

நியுயோர்க்கு வாசிங்டன் நிர்மூல மாச்சு
நினைத்தாலோ புஷ்ஷுக்கு போர் வேக மூச்சு
உள்ளுரப்  பயம் வாட்டுது
பலர் உதவிக்கு கரம் நீட்டுது
நான் என்னும் அகங்காரம் இத்தோடு முடிந்தாகனும்
இல்லi அடிவாங்கனும்

       (இமயம்)



மெட்டு - அச்சச்சோ புன்னகை  ஆள் தின்னும்..  

ஐயய்யோ கத்துதே.. ஆங்காங்கே குத்துதே..
நுளம்பாலே எழும்பாம வலையாலே போர்த்திக் கொண்டோம்
அம்மம்மா நோகுதே.. அடி மனசு வேகுதே..
உண்ணாம உறங்காம உயிரோடு பேசிக்கொண்டோம்
சிறு கொம்பெனும் இரு அம்பினால்
எமை குத்தியே கொல்கிறதே...
           (ஐயய்யோ)

இரவினில் தூங்கிடச் சென்றால்
அட நுளம்புகள் குத்துதடி
இந்த நுளம்பினை அடிக்க நான் சென்று
அட என்னையே அடித்தேனடி.
காய்ச்சல் டெங்கு காய்ச்சல்
என்னும் வருத்தம் வருகுதடி
போச்சே உடல் காய்ச்சி;
நான் புழுவாய் துடிக்கிறண்டி
அம்மம்மா அட தலை தொட்டு நம் கால் வரை கடிக்கிறதே
ராகங்கள் பல பாடித்தான் நம்ம தூக்கத்தை கலைக்கிறதே
இவை சீண்டினால் நமை தீண்டினால் இந்த ஜீவன் துடிக்கி;றதே.

     (ஐயய்யோ)

நுளம்புக்குள் இத்தனை விஷமா
பல வருத்தங்கள் வருகிறதே
விஷத்தினை கக்கும் நுளம்பால்
பல உயிர்கள் அழிகிறதே
இரவே பல இரவே
இங்கு பகலாய் போனதடி
ஏக்கம் உடல் வீக்கம்
நம்ம தூக்கம் தொலைந்ததடி
ரத்தத்தை சில முத்தத்தால் பல நுளம்புகள் இழுக்கிறதே
குத்தித்தான் பலர் கத்தித்தான் இந்த வாழ்க்கை அலுக்கிறதே
ஒரு போர்வையால் நாங்க போர்த்தினால் ஒரு ஜெட்டாய் முட்டுகிறதே

    (அய்யய்யோ)






மெட்டு -  ஒரு பொய்யாவது  சொல் கண்ணே......

பெரு மழைதான் பொழியுது இங்கே..
பல குழங்கள் வழியுது இங்கே.
இந்த நிலையிலும் மின் வெட்டு.
மக்களின் மனங்களில் ஏக்கம்.
அட மாறிப் போச்சுதே தூக்கம்
நாம் பார்க்கிறோம் கொசு வெள்ளம்.
தினம் ஏங்குதே சிசு உள்ளம்.

நுளம்புக்கும் கொசுவுக்கும் வலைகள் தேவைதான்.
நுளம்பு வலைகள் தேவைதான்.
மறந்தால் தூக்கம தொல்லைதான்.
கிழவிக்கும் குழவிக்கும் விசிறிகள் தேவைதான்
மின் விசிறிகள் தேவைதான்.
இன்றி தூக்கம் தொல்லைதான்.
                                       பெரு மழைதான்

குப்பையைக் கூட்டி..ஆ..  தீயினைப் பலபேர் வைப்பாரே...
இரவில் விழித்திருந்து நுளம்புகள் அடிப்பாரே..
விளக்கு விளக்கு வைத்து   வீட்டில் வெளிச்சம் ஏற்றி
பிள்ளையின் படிப்பைக்கண்டு  கைசேதப் படுவாரே...ஓ...
கோடை காலம் வந்தால் மின்சாரம் இல்லை யென்று
சொல்லிச் சொல்லி எம்மை ஏமாற்றிச் சென்றாரே...
ஆனால் தோழா...  கருவிகள் பழுது என்றும் சொல்வாரே...
கேளாய் தோழா...  உண்மை என்னவென்று அறிவாயோ...

                                       பெரு மழைதான்

மின்சாரம் இன்றி...ஆ.....   இயல்பு வாழ்க்கை இருக்காதே...
பள்ளி மாணவர்கள் படித்திட முடியாதே..
வீட்டில் வெளிச்சம் இல்லை   வேறொன்றும்  இயங்கவில்லை
பொருட்களின் விலையோ கூடிக் கூடி  தினம் உயர்வது சரிதானா... ஓ..
ஆட்சி மாற்றம் வந்தால்  மின் வெட்டு இல்லையென்று
சொல்லிச் சொல்லி எம்மை ஏமாற்றிச் சென்றாரே...
ஆனால் தோழா...   தவறை மட்டும் உணர்ந்து  கொண்டாரே......
கேளாய் தோழா...    வானை நம்பி யிருக்கக் கூடாதே....

                                       பெரு மழைதான்




மெட்டு - நெஞ்சு துடிக்குது ஜெமினி. ஜெமினி..

2014 உலக கிண்ண உதைபந்தாட்டப் போட்டி தற்போது பிரேசிலில் நடை பெற்று வருகிறது
அதையொட்டி எழுதிய பாடல்

-மதியன்பன்-

மெட்டு - நெஞ்சு துடிக்குது ஜெமினி. ஜெமினி..

பந்து வருகுது பவனி.. பவனி..
பார்த்து மகிழுது அவனி.. அவனி..
சின்னத் திரையில கவனி.. கவனி..
கவனி.. கவனி..கவனி.. கவனி..
உலகக் கோப்பை பவனி.. பவனி..
உவகை கொள்ளுது அவனி.. அவனி..
சின்னத் திரையில கவனி.. கவனி..
கவனி.. கவனி..கவனி.. கவனி..

வெற்றி பெற வாய்ப்பிருக்கு விறுவிறுப்பாய் ஆடி விடு!
போட்டியிடும் எதிரணிக்கு பாடமொன்றை புகட்டி விடு!
கோள் போடு. கோள் போடு. கோள் போடு. கோள் போடு.

(பந்து வருகுது)

உலகம் உறுண்டை என்பதா.. உணர்த்தும் இந்த பந்திதா...!
உதைக்கும் போது உறுளுதே உணந்து கொள்ளடா...!
நீ உதைக்கும் பந்துதான் உன்னை ஓட வைக்குதே...!
புத்தம் புதிய தத்துவம் புரிந்து கொள்ளடா...!
போட்டியென்று வந்து புட்டா நட்புபார்க்க தேவையில்லை!
வெற்றி பெற வேண்டு மென்றா விலகி ஓடத் தேவையில்லை...
வந்தாச்சு- வந்தாச்சு- பந்து உனக்கு வந்தாச்சி...
தந்தாச்சு- தந்தாச்சு- சான்ஸ் ஒன்றும் தந்தாச்சு...
துரத்திவரும்  எதிரிகளை- துல்லியமாய் கண்டுபிடி...
எதிரிவரும் முன்னாலே இருக்கும் பந்தை அடித்துவிடு!
கோள் போடு- கோள் போடு- கோள் போடு- கோள் போடு

(பந்து வருகுது)

உலகக் கோப்பை வெல்லனும் - உனது பெயரைச் சொல்;லனும்
திறமையான அணியென்று - தீர்ப்பு சொல்லனும்
ஆடுகின்ற அணிகளை ஆட்டம் காண வைக்கனும்...
ஓடுகின்ற பந்தையே - உதைத்து தள்ளனும்
மஞ்சக் காட்டை பார்த்து புட்டா- மதி மயங்கத் தேவையில்லை
சிவப்பு கார்ட்டை காட்டிப் புட்டா- உள்ளே நிற்க வேலையில்லை
என்னாச்சி- என்னாச்சி- பிரேசில் ஜெயிச்சு வந்தாச்சி
அண்ணாச்சி- அண்ணாச்சி- குரோசியாயா அவுட்டாச்சி...!
சின்ன சின்ன அணிகளிடம் கவனமாக இருந்து கொள்ளு!
பெரிய பெரிய அணிகளெல்லாம் தோற்றுப் போகும் கவனம் கொள்ளு!
கோள் போடு- கோள் போடு- கோள் போடு- கோள் போடு-

(பந்து வருகுது)




மெட்டு - காதல் வந்தது கன்னியின் உள்ளம்... 

பொங்கல் வந்தது இந்துக்கள் இல்லம்
பொங்கிட துன்பங்கள் வருவதில்லை
சூரியன் மாடு.. உழவர்க் கென்று
செய்யும் பொங்கலோ சலிப்பதில்லை
பஞ்சம் பசி பஞ்சம்
எல்லாமே பறந்தோடும்
துன்பம் வரும் துயரம்
இவையெல்லாம் விரண்டோடும்
தன்னந் னானன... தன்னந் னானன...
     (பொங்கல்)

பாடாளி மக்கள் படும் துயரைப்போக்க
பாருக்கு வருதாம் பொங்கல் திரு நாளே
கூட்டாக சேர்ந்து கொண்டாடி மகிழ
கோடான கோடி இன்பம் பெறுவாயே
துன்பம் எல்லாம் பனியாகுமே
துயரம் என்னும் பிணி போகுமே
நாமதை சந்திக்கும் நாள் வந்ததே
தன்னந் னானன... தன்னந் னானன...
     (பொங்கல்)

பசி பஞ்சம் நீங்கும் - பாசங்கள் ஓங்கும்
விசுவாசக் காற்று வீசும் உலகொல்லாம்
போர் மேகம் விலகும் - புது நிலவு  உலவும்
வாடாத உறவு வளரும் மன மெல்லாம்
பொங்கல் வந்தால் துயர் சாகுமே
திங்கள் ஒளியாய் இருள் போகுமே
இறைவனை வணங்கிடும் நாள் வந்ததே..!
தன்னந் னானன... தன்னந் னானன...
     (பொங்கல்)





மெட்டு -  ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்.. 

பொது தேர்தல் ஒன்னு வந்து போச்சி
நாங்க வோட்டு போட்டு ஜெயிச்சாச்சி
பலர் போட்ட வோட்டுல ஆட்சி மாற்றம் வந்திருக்குது ..பாப்பூ...பாப்பூ..
நம்ம நாட்ட ஆளவந்த யானை
இனி பொங்கி வழியுமே எங்க பானை
இதை பார்க்கப் பார்க்கத்தான் எங்க மனம் காத்திருக்குதே...
பாப்பூ... பாப்பூ...பாப்பூ...பாப்பூ...
                                        (பொதுத்தேர்தல்)

வாழ்க்கைச் செலவும் குறையும்   சந்தைக்குள் பொருள் வந்து நிறையும்
சம்பள உயர்வும் கிடைக்கும்;. சந்தோஷம் பொங்கல் படைக்கும்...ம்ஹூம்...
மூன்றாம் தரப்பு சுற்றுப்பேச்சு  முடிய வேண்டுமே யுத்த மூச்சி
கவலை இல்லாமல் பயணம்   காண வேண்டுமே சயனம்
ஒரு கல் விழுந்தாலும் உயிர் துடிக்கும்
இது இதுவரை நமக்குள்ள வழக்கம்
இனி செல் விழுந்தாலும் கவலை இல்லை
நம் கனவுகள் நிஜமாய் ஜெயிக்கும்.. பாப்பூ...பாப்பூ...

ஆளவந்த கட்சி வாழவேண்டும் இங்கே
ஊளையிடும் கூட்டம் ஓடவேண்டும் இங்கே
இது நமக்குத் தெரியுமே. வேசம் கலைத்து விடு.
இனி போர் ஓய்ந்து போகும்.   பகை வேரோடு சாயும்
புது வரலாறு தெரிகிறதே. இது தொடர்ந்து வரனும் இங்கே..

                                        (பொதுத்தேர்தல்)

இனப்பகை எல்லாம் மறந்து   நெஞ்சில் வசந்த மாலை விழுமே
இரவில் உறங்கும் பொழுதும்   அமைதி காற்று வருமே.. ம்ஹும்..                            பேசும் வரையில் யுத்த நிறுத்தம்   நினைக்கும் போது இன்பம் தருதே
சென்றி இல்லாம பயணம்     போக்கு வரத்தும் இனிதே..
ஒரு வெடி கேட்டாலும் உயிர் நடுங்கும்
இது இதுவரை நமக்குள்ள வழக்கம்
இனி இடி விழுந்தாலும் கவலை இல்லை
நம் கனவுகள் நிஜமாய் ஜெயிக்கும்...   பாப்பூ... பாப்பூ...
மாதம் ஒன்று போக மாற்றங்கள் வருதே!
ஆண்டு ஒன்று போனால் ஆனந்தம் வருமே!
இது நன்மை பயக்குமே! கலலை தீர்ந்து விடும்!
இன மோதல்கள் குறையும்   மன காதல்கள் நிறையும்!
புது உறவென்று தெரிகிறதே இது தொடர்ந்து வரணும் இங்கே!
பாப்பூ... பாப்பூ...பாப்பூ...பாப்பூ...
                                        (பொதுத்தேர்தல்)





மெட்டு - செந்தமிழ ; நாட்டு  தமிழச்சியே.. 

கல்லூரி செல்லும் மாணவரே!
கருதில் இதனை கொள்வீரே!
சுபஹு நேரம் விழித்தெழுந்து
இறையை நீங்கள் தொழுவீரே!
உடலைக் கழுவி - உணவை அருந்தி
படிக்க நீங்கள் செல்வீரே!
(கல்லூரி)

படித்துக் கொடுக்கும் ஆசான் சொல்லை
பணிவாய் நீங்கள் கேட்பீரே!
படிக்கும் போது மாணவர் கூட
பண்பாய் நீங்கள் நடப்பீரே!
வீடு வந்து படித்தவற்றை
விரைவாய் நீங்கள் மீட்பீரே!
ஓடியாடி நண்பர் கூட
ஒன்றாய் நீங்கள் மகிழ்வீரே!
(கல்லூரி)

பெற்று வளர்த்த பெற்றோர் தன்னை
பெருமை கொள்ளச் செய்வீரே!
கற்று முடித்து சமுகம் போற்றும்
தலைவன் என்று வருவீரே!
அறிவு என்னும் அழியாச்;;;;;;;;;;;; சொத்து
அதனை நீங்கள் அடைவீரே!        
சொன்னவற்றை கேட்டு வாழ்வில்
சுடராய் நீங்கள் திகழ்வீரே!
      (கல்லூரி)




மெட்டு -  காதல் பிசாசே.. காதல் பிசாசே..

வானில் ஜுவாலே! வானில் ஜுவாலே...!
ஏனோ மழைதான் வரவே இல்லை...!
வானில் ஜுவாலே.. வானில் ஜுவாலே..
வெயிலின் கொடுமை குறைய வில்லை..!
பூமியும் செழிப்பாய் இல்லை..!
புற்பூண்டும் விழிப்பாய் இல்லை!
பார்க்கின்ற இடத்தில் எங்கும் பொழிப்பே இல்லை!
குளங்களில்; நீரும் இல்லை!
மரங்களில் வேரும் இல்லை!
இப்படியே போனால் இங்கே யாரும் இல்லை

 (வானில்)
வானம் பொழிஞ்சா.. பூமி நனைஞ்சா..
ரெண்டும் இணைஞ்சா நீர். நீர். நீர்
தேசம் நனைக்கும் சோகம் கலைக்கும்!
தாகம் குறைக்கும் நீர்  நீர்  நீர்..!
பெய்ய.. மழை பெய்ய..
அட, நீர் கிடைக்கும் இடமெல்லாம் நிலம் பொலிக்கனும்
மெய்யே.. அது மெய்யே..
மண் வாசத்தில் மழை வாசம் எப்போதும் காண்போமடி
அனல் வெப்பம் கூடிப்போச்சி -
மலர் செடியும் வாடி போச்சி -
சொட்டு சொட்டா மழையும் பெஞ்சா பரவாயில்லை

        (வானில்)
கொட்டும் வெயிலால் - முற்றும் பெயிலே...
கொட்டி வரனும் நீர்  நீர்  நீர் ...
பட்ட மரங்கள்... மொட்டு விடனும்
குட்டை குழங்கள் நீர்  நீர்  நீர்...
பெய்ய மழை பெய்ய..
அட, நீர் நிரம்பி நில மெல்லாம் வளம் கொழிக்க காண்போமடி!
மெய்யே  இது மெய்யே..
இங்கு பாய் விரித்த நோயெல்லாம் பறந்தோடக் காண்போமடி!
பெரு மழைதான் பொழிய வேண்டும்!
பேரின்பம் வழிய வேண்டும்!
முத்து முத்தா  மழையும் பெயஞ்ஞா பரவாயில்லை

 (வானில்)






மெட்டு - நதியே  நதியே  காதல்  நதியே நீயும் பெண்தானே..

தீம் தனனா தீம் தனனா தீம் தனனா.. தீம்தனனா
தீம் தனனா தீம் தனனா திரனா
அரசே! அரசே! போரை நிறுத்தி அமைதியைத் தருவாயா
இங்கு அமைதியை தருவாயா...?
ஒன்றா இரண்டா காரணம் நூறு சிலதைச் செல்வேனே!
நான் சிலதைச் செல்வேனே!
(தீம் தனனா..)
எழுந்தால் குண்டு- வீழ்ந்தால் கைது
பார்த்தால் வெடியல்லோ ஓ.. ஓ..
நடந்தால் பாவம் - கடந்தால் கோபம்
சிரித்தால் சிறையல்லோ..
இளங் குமர்களே இவர் படும் துயர்களே
கசங்கிடும் மலர்களே காவாலித் தனமிதுவே...
துயிலோடு உயிர் போகும் துணையின்றி சிசு சாகும்
டும் டும் டும் என்றுகேட்கும்
நடைகள் வரும் தடைகள் வரும் படைகள் வரும் பயமும் வரும்
நில் நில் நில் என்று செல்லும்

புலிகளின் அணிகள் புதரில்! போரிடும் படையணி எதிரில்
மக்கள் செத்து மடிவார் இடையினிலே
வடக்கிலும் கிழக்கிலும் யுத்தம்;; ஆறாய் ஓடுது ரெத்தம்..
என்று முடியும் இந்தப் போர் முறையே
சொந்த மண்ணை இழக்கிறோம் ஓ...ஹோ...
சோகக்  கடலில் மிதக்கிறோம் ஓ..ஹோ..

வண்டு வரும் வழியே - வட்டமிடும் ஹெலியே
வந்தால் பலிதான். மனித உயிர்கள் பலிதான்
ஓ..குண்டு வந்து வெடிக்கும்! குடும்பத்துயிர் துடிக்கும்!
போரதின் குணமே இங்கு துடிக்குது மனமே...
இளங் குமர்களே

                                            (தீம் தனனா..)

அகதி யென்னும் நிலையாகி அடிமையென்னும் இனமாகி
சொந்த மண்ணில் வாழுகின்ற இனமே.
தேடுதலில் கைதாகி தேவையின்றி சிறையாகி
சோகத்திலே வாடடுதிங்கே தினமே.
தமிழினமே.. தமிழினமே..
அடிமையென்னும் விலங்கு உடைய வேண்டும்.
புலி இணைந்தால் போர் முடிந்தால்
அமைதி யென்னும் காற்று எங்கும் வீசும்.             (தீம் தனனா..)





மெட்டு- ஆப்பிள்  பெண்ணெ  நீ யாரோ....

பறக்கும் தட்டே நீ யாரோ...
பயணம் செய்வது அதில் யாரோ...
விண்ணில் தோன்றி விரைவில் மறைவது ஏனோ...
ஈரடி மனிதன்  நீ யாரோ...
இலங்கை மண்தான் உன் ஊரோ...
காலம் காலம் தோன்றி மறைவது ஏனோ...
ஒளியெனும் பிளம்பு ஒன்று...  வானிலே வருகுதடா...
விழியதைக்கண்டு இங்கே...   வியப்பிலே இருக்குதடா...
இங்கே உன் வருகை பார்க்க...  சனங்களோ துடிக்குதடா...
விஞ்ஞானம் கூட இங்கே ...   வியந்துமே படிக்குதடா..
                                    (பறக்கும் தட்டே)
மண்ணில் தோன்றி -மக்களைச் சீண்டி
விண்ணுக்கு விரைவது விளங்கவில்லை
மின்சாரம் கூட உங்கள் வரவால்
துண்டித்துப்போவது துலங்கவில்லை
எங்கள் நாட்டில் - ஏனோ வந்து
இடங்களைப் பார்ப்பதும் புரியவில்லை
உங்கள் கிரகம் - ஏதோ என்று
உலகம் அறிந்திட முடியவில்லை

ஏனோ உங்கள் வரவாலே  எங்கள் நாடே கலங்கிறது!
மர்மம் இன்னும் துலங்காமல்  மக்கள் மனமோ தயங்கிறது...
பலர் கண்கள் முன்னாலே மண்ணைத்தூவி
மறைவதும் ஏன்தானோ...
சின்னவரெல்லாம் வானத்தை பார்த்து...
சினுங்குதல் இங்கே தெரிகின்றது...
விண்மீன்கள் கூட பறக்கும் தட்டாய்...
கண்ணுக்கு காட்சி தருகின்றது...
அமெரிக்கா அனுப்பிய உளவுப்படையா...
என்றொரு ஐயமும் இருக்கின்றது
விரிவாய் இதனை விளக்கிட இங்கே
விஞ்ஞானம் ஏனோ தயங்குகினறது
வானம் உங்கள் ஊரென்றால்...   வந்து போவது சரியென்றால்...
ஏனோ எங்கள் இனம் கண்டு...   எதிரே நிற்க மறுக்கின்றீர்...
பலர் கண்கள் முன்னாலே மண்களைத் தூவி
மறைவதும் சரிதானா...?
           (பறக்கும் தட்டே)





மெட்டு - ராதை  மனதில்  ராதை மனதில்...

ஏழை மனதில் ஏழை மனதில் என்றும் சுகம் சுகமே
எம் உள்ளம் கவலை மறக்க - எந்நாளும் இன்பம் சிறக்க
காத்த நகர மக்கள் பூத்த மலர்களென
கவலை மறந்து சிரித்தோம்...
கோத்த மணிகளென கூடி வந்து இங்கு
கோடி வாழ்த்து உரைத்தோம்...
வாடி வதங்கி நின்ற வறுமை மனங்களெல்லாம்
வாகை சூடி மகிழ்ந்தோம்..
நீடி ஆயுளுடன் நீங்கள் வாழ்கவென
நீட்டி கைகள் இரந்தோம்..

சமூகத் தலைவி வந்துவிட்டீர்;. சுமூக நிலையை தந்து விட்டீர்..
கிழக்கின் இருளைப் போக்கி விட்டு - விளக்கின் ஒளியை ஏற்றி விட்டீர்..
தான் நடக்கிற பாதைகளில் நல்ல பணி செய்ய வந்தீர்..
இங்கே இங்கே பார்.. பார்..
அமைச்சர் பேரியல் அஸ்ரப் வந்தீங்க.. துயரினைத்  துடைக்க..

                                         (ஏழை மனதில்..)

முஸ்லிம் சமூகத்திற்கு உரிமை வாங்கித் தந்த எங்கள் தலைவர்அஸ்ரப்
விட்ட பணி தொடர வீறு கொண்டெழுந்த
வீரத்திலக தலைவி
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு குணங்களுடன்
மெச்ச வாழ்க்கை நடத்தும்
இதய திலகம் எங்கள் உதய சூரியனே
உவகை அடைந்தோம் வரவால்...

கள்ளம் கபடம் நெஞ்சிலில்லை. கருணை உள்ளம் மனது வெள்ளை
துன்பம் துயரம் வாழ்விலில்லை தூய பணிகள் செய்யும் முல்லை..
எம் குறைகளை கேட்டு இங்கு நிறைதனை செய்ய வந்தீர்;
இங்N இங்கே பார்.. பார்..
அமைச்சர் பேரியல் அஸ்ரப் வந்தீங்க துயரினைனத் துடைக்க..

     (ஏழை மனதில்..)






மெட்டு - வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை... 

தண்ணியில்லை தண்ணியில்லை - தாகத்தை சொல்லிடவா!
நாட்டிலுள்ள மக்களது - சோகத்தை சொல்லிடவா!
மழைதான்  இங்கு பெய்யணுமே!
மக்கள் நீரைப் பெற்றுவிட..
நிலந்தான் இங்கு செழிக்கணுமே!
வரட்சி என்றும் நீங்கி விட..
      (தண்ணியில்லை)

வருணன் இங்;கு வரணும் இங்த பூமி செழிக்க..
வெறுமை முற்றுப் பெறணும் இங்கு நதிகள் விழிக்க..
கருகும் பயிர் செழிக்க இங்கு மழையே வரணும்
உருகும் வெப்பம் தணிய இங்கு குளிச்சி பெறணும்
தண்ணியுன் தேவையால் நாட்டுக்குள் தினமும்
மின்சார வெட்டிங்கு வருது!
மின்சார வெட்டுக்கள் தொடர்கதை ஆனதால்
வாழ்கையின் தேவைகள் பழுது!
வரட்சியின் கொடுமை - வற்றிய நிலத்தில்
பெய்திட வேண்டும் இங்கு நல்ல மழை! மழை!
மணல் ஈரம் இல்லை! இல்லை!

(தண்ணியில்லை)

தண்ணீர் இங்கு இல்லை! பல உயிர்கள் மடிதே
சொன்னால் ரெத்தம் உறையும் அது ரொம்பக் கொடிதே!
வானை எதிர் பார்க்கும் பல கைகள் தினமும்
வருமா? இங்கு மழைதான் என ஏங்கும் மனமும்!
எண்ணில்லா சோகத்தால் ஏங்கும் மனங்களில்
புன்னகை பூத்திட வேண்டும்!
புன்னகை பூத்திட போதிய மழையிங்கு
நித்தமும் பெய்திட வேண்டும்!
நீரதன் தேவை நிறையவே இருக்கு
இறைவனின் கருணை இங்கு தினமும் தேவை! தேவை!
அதற்கு எல்லை இல்லை! இல்லை!

(தண்ணியில்லை)






மெட்டு - ஸ்நேகிதனே.. ஸ்நேகிதனே.. ரகசிய சினேகிதனே..


தமிழினமே.. தமிழினமே.. தாயகம் மீட்கணுமே!
சொந்த மண்ணைத்தான் இழந்து விட்டு
சோகத்தில் வாழுறியே...!
எல்லோர் விழியும் விழியும்
கண்ணீர் வடிக்கும் துடிக்கும்
தமிழன் வெற்றி பெற வேண்டும் வேண்டும்...
                                        (தமிழினமே...)

குண்டு வந்து வீழுகையில் எழுவாய்!
தன், குடும்பத்தவர் சாவு கண்டு அழுவாய்!
நீயும் விழுவாய்...
நண்டுகளாய் பொந்துகளில் வாழ்வாய்!
நீ, நாதியற்று சோகத்திலே வீழ்வாய்!
துயரில் ஆழ்வாய்!
இந்த நிலை உன்னை தொடர்ந்து வரும் போது
இதயத்திலே குண்டு வெடிக்கும்!
சொந்த மண்ணை மீட்டி - சொத்து சுகம் ஈட்டி
சேர்ந்து வாழ உள்ளம் துடிக்கும்...  
                                        (தமிழினமே...)

செல்லடிக்கும் போதினிலே துடிப்பாய்!
நீ, சென்றிகளில் நின்று கண்ணீர் வடிப்பாய்!
பல்லைக் கடிப்பாய்!
வேலை செய்யப் போகையிலே மறிப்பார்!
உனை வேறொருவர் பட்டியலில் குறிப்பார்!
உரிமை பறிப்பார்!
புலருகின்ற பொழுதில் மலருகின்ற ஈழம்
விரைவினில் வர வேண்டும்!
அலருகின்ற இனத்தின் அவலங்கள் நீங்கி
அமைதியைத் தர வேண்டும்.    
                                        (தமிழினமே...)





மெட்டு - சரக்கு வச்சிருக்கேன். இறக்கி வச்சிருக்கேன்.....

பாசம் வச்சிருக்கேன்- நேசம் வச்சிருக்கேன்
காதல் செல்ல ராசா உனக்கு ரோசா வச்சிருக்கேன்
ரோசா அழகா இருந்தா ரோசாவக் கிள்ளு.
ராசா அழகா இருந்தா ராசாவக் கிள்ளு.
ஈழத்துக்குயிலே - இழுக்குது மயிலே
உண் எண்ணம் வந்து ஓடி வந்தேன் மன்மதப்பயலே..!

                                 (பாசம்)

உள்ளம் ரெண்டும் ஒன்று பட்டா காதல் வந்து சேரும்!
இந்த உடம்பு ரெண்டும் ஒன்று பட்டா காமம் உடனே தீரும்!
காதல் என்னும் அன்பு வளர்ந்தா கவல ஒன்றும் இல்ல!
இந்த காமத்திற்கு கட்டுப்பட்டா அதுவே பெரிய தொல்ல!
ஒயே.. ஒயே.. ஒயே.. ஒயே..

காதலுக்கு ஜாதி மத பேதம் இல்ல
நல்ல காசி பணம் காதலுக்கு தேவ இல்ல
காத்திருந்தா காதலர்க்கு நிமிஷம் வருஷம்!
இந்த காதலரே சேர்ந்துக்கிட்டா வருஷம் நிமிஷம்!
உரையாடவா.. உறவாடவா..
உண்மையான காதலுக்கு உதவி செய்யவா..
 (பாசம்)

ஆடல் பாடல் காதலுக்கு தேவையில்லை
அட ஆசைக் கொரு முத்தம் கொடு அன்பை வெல்ல
ஊடல் வரும் காதலுக்கு உறவைச் சொல்ல
இதை உணர்ந்துக் கிட்டு காதலிச்சா சொர்க்கம் எல்ல
ஏ.. சேர்த்தனைக்கவா.. சேர்ந்திருக்க வா..
நேர்மையான காதலுக்கு சேதி சொல்லவா..
 (பாசம்)

;



மெட்டு - செம்பருத்தி பூவே.. செம்பருத்தி பூவே.. 

அமெரிக்கப் படையே!  அமெரிக்கப் படையே...
அடிவாங்கப் போவது தெரிகிறதே!
புனிதப் போர் செய்யும் ஆப்கானின் படைகள்
புறப்பட்டு வருவது புரிகிறதே!
பல நாடுகள் சேர்வது சரியில்லையே...
ஒரு நாட்டையே அழிப்பது முறையில்லையே...
;பலர் சாகத்தான் போகின்றர்!
அவர் வாழாமல் சாகின்றார்!
    (அமெரிக்கப்;..)
ஆகாய விமானங்கள் வந்து மோதும்!
அந்தரஸ் கிருமிகள் வந்து சேரும்!
வல்லரசு ஆடிப்போகும்! - புஸ்ஸரசு வாடிப்போகும்!
புதுப் புது நோய்கள் வரும்!
தாலிபான் படைகள் எழுந்து வரும்!
தாயகம் காத்திட துணிந்து வரும்!
அமெரிக்க அரசோ அனுப்பிய படைகள்
தோல்வியில் திரும்பி வரும்!
ஜேர்மன் பிரிட்டன் வருகிறது -
அமெரிக்கப் படையுடன் சேர்கிறது.
பலர் சாகத்தான் போகின்றார்;!
அவர் வாழாமல்; சாகின்றார்!
    (அமெரிக்கப்;..)
பல் நாட்டுப் படை வந்து வெல்ல வில்லை..
அல்லாஹ்வின் உதவிக்கு எல்லை இல்லை...
ரஷியாவும் ஆடிப்போச்சு! - ராணுவமும் ஓடிப்போச்சு!
வரலாறு செல்கின்றது!
முல்லாவின் ஆட்சியில் மீட்சி வரும்
மோதிடும் அமெரிக்கா வீழ்து விடும்!
ஆயுதம் தாங்கிய அமெரிக்கக் கப்பல்கள்                    
ஆழ் கடல் மூழ்கி விடும்!
ஆப்கானின் படையோ வென்றிடுமே! -
அமெரிக்கப் படையை கொன்றிடுமே!
பலர் சாகத்தான் போகிறார்
அவர் வாழாமல் சாகின்றார்...
    (அமெரிக்கப்;..)




மெட்டு - பூவும் காற்றும் சேரும் போது...

லேடன் பேரைக் கேட்கும் போது
உலகம் எழுகிறது!
வேடன் கூண்டில் வீழ்ந்த மானாய்
அமெரிக்கா அழுகிறது!
நூற்றிப் பத்து மாடி!
வீழ்ந்து போச்சு ஆடி!
சேர்த்து வைத்த கோடி!
சேதமாச்சு போடி!
இந்த உலகம் வியக்கும்..! ம்.. ம்.. ம்..

      (லேடன் பேரைக்)

கோடி கோடி சொத்துக்கள் சேர்த்தாய்
நொடியில் மடிந்த தென்ன..
மூடி மூடி ரகசியம் காத்தாய்
பெண்டகன் இடிந்த தென்ன.. (கோடி)
றாடர்கள்  என்னாச்சி
உங்க ராணுவம் மண்ணாச்சி...
ஆனந்தக் களிப்பினிலே...
பல நாடுகள் ஆழ்ந்தாச்சி... ஓ... ஓ...

      (லேடன் பேரைக்)

வீட்டோ நேட்டோ கூட்டு வைத்தாய்
பலரை பதற வைத்தாய்...
ஏட்டி போட்டி என்று சொல்லி
அரபை கதர வைத்தாய்...
வல்லரசு ஆடிப் போச்சி..
புஸ்ஸின் உள்ளரசி வாடிப் போச்சி..
இட்ட விதை வினையாச்சி
இப்போ! அமெரிக்கா இரையாச்சி... ஓ... ஓ...

(லேடன் பேரைக்)





மெட்டு - வெண்ணிலவே.... வெண்ணிலவே.... விண்ணைத்தான்டி.. 

கண்மணியே! கண்மணியே!
கண்னைத் திறக்க மாட்டாயா....?
கடைசியாய் காண வேண்டும்....!
இந்தப் போருக்குள்ளே நீயும் மாட்டிக் கொண்டாய்
உன்னை காபப்பாற்றத் தவறி விட்டோம்!

    (கண்மணியே...!)

ஒரு கையில்லை! ஒரு காலில்லை!
நீ முடமாகிப் போனாயே ஷெல் பட்டு!
மனம் அழுகிறதே! மலர் விழுகிறதே!
நான் இயலாது போனேனே புண்பட்டு!
கண்ணே...! கண்ணே...!
தாயோடு தந்தையினை இழந்து துடிக்குது பிள்ளை!
தார்மீக நாட்டினிலே பெருகிப் போச்சுது கொள்ளை!
நாம் போரின் இடையே கைதிகள் ஆனோம்
காப் பாற்ற யார் உள்ளார்.....?

    (கண்மணியே....!)

யுத்தத்தால் அழிகிறது பெறுமதியான உயிரு!
உடமைகளை இழந்ததனால் பற்றி எரியுது வயிறு!
இதை எண்ணியெண்ணி தினம் தினம்; அழுகிறோம்
யார் யாரோ வந்தார்கள் ஆண்டு மான்டு போனார்.
தீர்வொண்றைச் சொல்லாமல் தீயில் வெந்து போனார்.
அட உரிமை கிடைக்க வேண்டும்
நாம் உயிரோடு வாழ்ந்துண்ண....

    (கண்மணியே....!)





மெட்டு - கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச களரு.. 

பச்சதான் ஆளவந்த கட்சி.
நம்ம வீட்டிலுள்ள பானையெல்லாம்
பொங்கப்போகுது மச்சி...
போரு முடியும்தான்... நம்ம பொழுதும் விடியும்தான்...
வேலை கிடைக்கும்தான்.. விலை வாசி குறையும்தான்...
நாட்டை ஆளவந்த ரணிலுக்கிப்போ
கிடைச்ச வாக்கு அதிகம்தான்... செலவும் அதிகம்தான்..

   (பச்சைதான்...)

தென்னிலங்கை மலையகத்தில் - யானைக்கதிக வெற்றிதான்..
எண்ணி எண்ணி பார்க்கும்போது - லட்ச லட்ச வாக்குத்தான்...
தொகுதி வாக்குச் சென்னபோது - தோற்றுப் போனது கதிரைதான்..
நாட்டை ஆண்ட கதிரைக்கிப்போ - நடந்த  கதி என்னதான்..
கோட்டை பறி போனதற்காய் - குமுறும் நீலக் கட்சிதான்...
ஆட்சி செய்யும் யானைக்கிப்போ - ஆணிவேரு மரமும்தான்..
சின்ன சின்ன  கட்சியெல்லாம் - சேர்ந்து பெற்றது வெற்றிதான்..
எண்ணி எண்ணி வாக்கெடுத்து - தோற்றுப்போனதுதான் சுயேட்சைதான்
வடகிழக்கு மக்களுக்கு - வந்ததெல்லாம் தெம்புதான்
ரணிலை நம்பித்தான்...

   (பச்சைதான்...)

நாட்டை இங்கே ஆளவந்த - யானைக்குத்தான் பெரகரா...
ஆண்டு ஆண்டாய் ஆண்டுவந்த - கதிரைக்கிப்போ அரோகரா...
கூட்டுச் சேர்ந்து வாக்கு கேட்ட - கூட்டணிக்குத் திருவிழா...
ஆட்டி வித்து ஆட்சி செய்த - ஜே.வி.பிக்கு பெருவிழா...
துவேசக் கதை சொல்லி வந்த - சிஹல உறும வெறுமைதான்..
வாக்குப் போட்டு வெற்றி பெற்ற - மக்களுக்குப் பெருமைதான்...
வெட்ட வெட்ட தழைத்து வரும் - குழப்பமெல்லாம் தீரத்தான்...
நாட்டிலுள்ள மக்களுக்கு - தேவையிப்போ தீர்வுதான்...
வெற்றி பெற்ற அணிகளுக்கு - பொருப்பு அதிகம்தான்
விருப்பும் அதிகம்தான்.

   (பச்சைதான்...)




மெட்டு - பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்..

தாயும் பெண்ணே தாரமும் பெண்ணே எங்கள் வாழ்விலே
தாய் நாடென்போம் தாய் மொழி என்போம் எங்கள் வாழ்விலே
சேவையில் தாதி ஆவதும் பெண்ணே..
தியாகத்தின் ஜோதி ஆவதும் பெண்ணே
சோகம் தீர்க்கும் ஜீவனும் பெண்ணே
சொர்க்கம் காலடி தாங்கும் பெண்ணே
வாழ்வின் நிழலாய் வருவதும் பெண்ணே எங்கள் வாழ்விலே
                                                                                                 
                                      தாயும் பெண்ணே

வரும் துன்பம் துயரங்கள் களைந்திடுவாள்
பெரும் இன்ப சுகங்களை வழங்கிடுவாள்
அவள் அன்பும் பண்பும் ஆதரவிருக்கும்
பெண்ணை நாங்க மதிக்கனும்
பேறாய் நாங்க நினைக்கனும்
இந்தப் பெண்ணினமே நம் கண்ணினமே
இதை இமையெனக் காத்திடனும்.
மங்கை உள்ளம் மல்லிகை போல கருமை கிடையாது.
இந்தப் பெண்குலத்தின் சொந்த வாழ்க்கையிலும்
பல சோகங்கள் வருவதுண்டு
எதையும் தாங்கும் இதயம் உண்டு பெண்கள் வாழ்க்கையிலே...
                                                                                               
                                       தாயும் பெண்ணே

பெண் பூவில் மென்மை கொண்டவளாம்.
பெரும் தீயில் வண்மை கொண்டவளாம்.
அச்சம் பயிர்ப்பு நாணம் மடமென
நான்கு குணங்கள் நிறைந் திருக்கும்
நல்ல பண்பும் உறைந்திருக்கும்
இந்தப் பெண்ணினமே இங்கு இல்லை யென்றால்
இங்கு ஆணினம் கிடையாது.
ஆண்கள் எல்லாம் பெண்களை மதித்து அன்பு காட்டனுமே
உயர் பதவிகளை பெண்கள் வகிப்பதனை
இங்கு வரலாறு சொல்கிறது
அடுப்பு ஊதிய பெண்கள் எல்லாம் அரசு ஆழ்கிறதே...
                                                                                                 
                                      தாயும் பெண்ணே





மெட்டு – எனைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா..

பலர் பாராட்டும் தமிழேடு றிலக்ஸ் அல்லவா..
இதை வாசித்தால் உளமெங்கும் றிலக்ஸ் அல்லவா.
இதை முத்தென்பதா  எங்கள் சொத்தென்பதா
இந்த உலகெங்கும் புகழ்பாடும் றிலக்ஸ் அல்லவா
எங்கள் உயிரல்லவா..
                                           பலர்பாராட்டும்..

மாதாந்தம் ஒருநாள்  வெளியாகும் ஏடு
காத்திருக்கும் உள்ளம் பார்க்க தினம் ஏங்குமே
வேரோட்டம் போலும் நீரோட்டம் போலும்
ஊரெங்கும் ஓடிச் செய்தி றிலக்ஸ் தாங்குமே.
ஒருமுறை பார்த்துவிட்டால்  மனதிலே இடம் பிடிக்கும்
மறுமுறை பார்த்திடத்தான் மனமதோ அடம்பிடிக்கும்
ஊரின் விடயங்கள் தடயங்கள் இதில் காணலாம்
உள்ளம் றிலக்ஸ் ஆகலாம்
                                              பலர்பாராட்டும்..

காத்தவூர் மண்ணில் பூத்ததோர் ஏடு
யாருக்கும் சார்பாய் செய்தி தரவில்லையே..
வானம்போல் அகலம் இமயம் போல் உயரம்
பார்க்கின்ற மக்கள் இதன் தரம் காணுவார்.
சிறுதொகை கொடுத்து விட்டால் பெரும் பயன் அடைந்திடலாம்
ஒவ்வொரு இல்லத்திற்கும் ஒரு இதழ் வாங்கிடலாம்.
ஊரின் குறையோடு நிறைவெல்லாம் இதில் காணலாம்.
ஒன்றை நாம் வாங்கலர்ம்
உள்ளம் நிறைவாகலாம்
                                            பலர் பாராட்டும்..





மெட்டு - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது

பள்ளிகள் இரண்டுக்குள்ளே படுகொலைகள்
பாஸிஸக் குழுவொன்று நடத்தியதே
வல்லவன் இறைவனைத்தான் வணங்குகையில்
வரலாற்றுக் கதைதெயான்று முடிந்ததுவே
தொழுதவர் சுஜூதுக்குச் சென்றார் அப்போது
வந்தவர் வேட்டுக்கள் தீர்த்தார் தப்பாது
மனமே  ஓ மனமே தாங்காது
மனதில் அந்த வடுவும் நீங்காது.
                                   பள்ளிகள்...

பத்துவயதுப் பாலகனும் பள்ளிவாயல் படுகொலையில்
சிக்கி அப்போ உயிரை நீத்தார் சிதறிப் போச்சி சின்னமேனி
நற்றிமூன்று நம்மவர்கள் பள்ளி உள்ளே சஹீதானார்
காற்றில் வந்த அந்தச் செய்தி கல்லைக்கூட கரைத்தாச்சி
உயிர்போகும் வேளைதானே கலிமாவைச் சொன்னார்கள்
பயிர்போல வளைந்து அப்போ படுக்கையில் மாண்டார்கள்
கோளைக் கூட்டம் சுட்டதனால் கோரக் கொலைகள் நிறைந்தாச்சி
வாழை போல நினைவலைகள் வருடாவருடம் வளர்ந்தாச்சி
இந்தப் படுகொலைதான் பல வடுக்களைத்தான்
நம் மனதில் நிறைத்தாச்சி
தோழா என் தோழா கேளாயோ
வாளாய் பெருவாளாய் நீ மாறாயோ..
                                   பள்ளிகள்...

இரத்த வெள்ளம் பள்ளியிலே ஆறாய்ப் பெருகி ஓடியது
காயப்பட்டோர் துடித்த காட்சி நெஞ்சில் நெருப்பை மூட்டியது.
ஏ கே மற்றும் எல் எம் ஜி கொண்டு வந்து தாக்கினரே
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று காட்டினரே.
பாங்கோசை கேட்டோரெல்லாம் வெடியோசை கேட்டார்கள்
ஆங்காங்கு நின்றோரெல்லாம் அலையாக வந்தார்கள்
பள்ளிக்குள்ளே படு கொலைகள் பாதி இரவில் முடிந்தாச்சி
வெள்ளரிக்காப் பிஞ்செல்லாம் வேட்டுப்பட்டு வெடிச்சாச்சி
இந்தப் படுகொலைதான் பல வடுக்களைத்தான்
நம் மனதில் விதைத்தாச்சி
தோழா என் தோழா கேளாயோ
வாளாய் பெருவாளாய் நீ மாறாயோ..
                                   பள்ளிகள்...





காலையிலே எழுந்திடுவோம்
கடன்களையும் முடித்திடுவோம்
கூடையினைத் தூக்கிடுவோமே - கொழுந்து
கூடையினைத் தூக்கிடுவோமே.

ஒருவர் பின்னர் ஒருவராக
ஒன்றாகச் சென்றிடுவோம்
மலைக்கு வந்து பிரிந்திடுவோமே - தேயிலை
கொழுந்து பறிக்கச் சென்றிடுவோமே.

பென்னம் பெரிய மலையிலேறி
சின்னஞ்சிறிய கொழுந்துகளை
கிள்ளிக் கிள்ளி பறித்திடுவோமே - அதனை
கூடைக்குள்ளே சேர்திடுவோமே

கொழுந்து பறிக்கும் வேளையிலே
கொடிய நாகம் ஏதும் வந்தால்
தடியெடுத்து அடித்திடுவோமே - நாங்க
தப்பிக்கத்தான் ஒளிந்திடுவோமே.

பறித்த கொழுந்து அத்தனையும்
பக்குவமாய் சேர்த்தெடுத்து
உரிய இடம் சேர்த்திடுவேமே - அதற்கு
ஊதியத்தைப் பெற்றிடுவோமே.

கொழுந்தையெல்லாம் மெசினுக்குள்ளே
கொட்டிடுவோம் மெசின் அரைத்து
தூளாகத் தந்திடுமாமே - தேயிலை
தூளாகத் தந்திடுமாமே

தூளை எடுத்து வீடு வந்து
துயரம் போக்க தேனீர் வைத்து
எல்லோரும் குடித்திடுவோமே - அந்த
ஏகோனைப் புகழ்ந்திடுவோமே...





கடந்த 26-12-2004 அன்று இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் நினைவாக எழுதிய இப்பாடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் ஓலிபரப்பானது.


பொறுமைத் தாயே கடலம்மா...
பொங்கி வந்தது ஏனம்மா...
எங்கள் தேசம் அழிந்து போச்சி பாரம்மா..
இனி எங்க வாழ்வு என்னவாகும் கூறம்மா..
.                                  பொறுமைத்

முப்பது அடி எழுந்து வந்தாய் ஊருக்குள்
நாங்க முழுமையாக மூழ்கி விட்டோம் நீருக்குள்.
சப்பித்துப்பிய சக்கைபோல ஆனதே
பலர் சரித்திரமும் தண்ணீரோடு போனதே...
                                   பொறுமைத்

கண்ணை மூடி திறப்பதற்குள் சீறினாய்
ஒரு காவியத்தை உலகப் படத்தில் கீறினாய்.
உடலும், உயிரும் உடமைகளும் அழிந்ததே..
எங்க உணர்வுகளோ செந்நீராகி வழிந்ததே..
                                   பொறுமைத்

அழுகுரலும் அவலங்களும் ஓயல்ல..
அன்று அழுதவிழி இன்னும் இங்கே காயல்ல..
அழிந்த நாட்டை கட்டி யெழுப்பப் போகிறோம்.
அதுவரைக்கும் உணர்விழந்து தவிக்கிறோம்

 பொறுமைத்






பின்னோக்கிப் போனாயே பெருங்கடலே - விழி
பிதுங்காமல் வேடிக்கை பார்த்தோமே
முன்னோக்கிப் பாய்ந்தாயே மான் போலே - நாம்
மூழ்கிவிட்டோம் தண்ணீரில் மீன்போல

இல்லமெல்லாம் இல்லையென்று ஆச்சே - எங்க
இடுப்புத் துணி தண்ணீரோடு போச்சே.
பல்பேரும் விட்டாரே மூச்சை - நெஞ்சு
பதறிடுமே சொன்னால் அப்பேச்சை

நிலமெல்லாம் பாளமென வெடிக்க - அன்று
நிலை கெட்டு எல்லோரும் துடிக்க
கடல்நீரை எல்லோரும் குடிக்க - இந்தக்
காவியத்தை எப்படி நான் படிக்க

எல்லோரும் தறி கெட்டு ஓட - சிலர்
ஸ்கூலில்; பள்ளிகளில் கூட
அகதி எனும் பட்டம் வந்து சூட - இந்த
அவலங்களை எப்படி நான்; பாட

செழிப்பான கடலோரம் சிதைய - எங்க
செல்வங்கள் கடலோடு புதைய
வேதனையை பாடுகிறோம் கதையாhய் - கேட்டால்
வெந்திடுமே உங்களது இதயம்.

கூடார வாழ்க்கையிலே வந்து - குடி
நீர்கூட இல்லாமல் வெந்து
அடிபட்டு திரும்பி வரும் பந்து - போல
ஆனதனால் அழுகின்றோம் நொந்து

நிவாரணத்தைத் தேடித் தேடி அலைந்தோம் - நாங்க
நிம்மதியே கெட்டுப் போய் குலைந்தோம்
எறிபட்ட தேன்கூடாய்க் கலைந்தோம் - நாங்க
எப்படியோ எங்கெங்கோ தொலைந்தோம்.

ஊரிலுள்ள தலைவர்களே போங்க - பல
உதவிகளைப் பெற்றுவந்து தாங்க
ஓலமிடும் அவலங்கள்; நீங்க - உதவி
செய்திடுக எம் வாழ்வு ஓங்க

செல்வந்தர் எமைக் கண்டு உருக - பல
சிறப்பான உதவிகளும் பெருக
அல்லாஹ்வே உனதருளைத் தருக - இனி
என்னாளும் இன்பங்கள் வருக.




மெட்டு - என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா 

சின்ன மொட்டுக்கள் அசைந்தாடும் அரங்கல்லவா
இதைக் காணாத உளமெங்கும் சிரங்கல்லவா
பழ ரசமென்பதா இல்லை சுவை என்பதா
இந்தச் சிட்டுக்கள் வளைந்தோடும் நதியென்பதா
பின்னே மதி என்பதா..?
சின்ன மொட்டுக்கள் அசைந்தாடும் அரங்கல்லவா
இதைக் காணாத உளமெங்கும் சிரங்கல்லவா

மானாக நாங்கள் பாய்கின்ற வேளை
நோய் இருக்கும் உள்ளம் எல்லாம் சுகம் காணுமே..
தேனாக இனிக்கும்  வேம்பாக கசக்கும்
நாங்கள் செய்யும் குறும்பு எல்லாம் கரும்பாகுமே

ஒருநாள் உங்களிடம் சினுங்கல் செய்திடுவோம்
மறுநாள் எழும்புகையில் மலராய் சிரித்திடுவோம்
ஓடிப் பிடித்தோட விளையாடி நாம் வாழ்கிறோம்
கொஞ்சம் சுமையாகிறோம்
சின்ன மொட்டுக்கள் அசைந்தாடும் அரங்கல்லவா
இதைக் காணாத உளமெங்கும் சிரங்கல்லவா

கடலோரம் சென்றால் காற்றோடு கதைப்போம்..
கிள்ளிச் செல்லும் நண்டுவந்து பயம் காட்டுமே
வீட்டுக்கு வந்தால் தூக்கத்தில் கிடப்போம்;;
பெற்றோர் வந்து எங்கள் மீது  தாலாட்டுமே..

பள்ளிக்கு நாம் வந்தால் பாடங்கள் படித்திடுவோம்
பக்கத்தில்  இருப்பவரை அழவும் வைத்திடுவோம்
டீச்சர் சொல்லுக்கு அடங்கித்தான் நாம் வாழ்கிறோம்
அதில் சுகம் காண்கிறோம்

சின்ன மொட்டுக்கள் அசைந்தாடும் அரங்கல்லவா
இதைக் காணாத உளமெங்கும் சிரங்கல்லவா
பழ ரசமென்பதா இல்லை சுவை என்பதா
இந்தச் சிட்டுக்கள் வளைந்தோடும் நதியென்பதா
பின்னே மதி என்பதா..?
சின்ன மொட்டுக்கள் அசைந்தாடும் அரங்கல்லவா
இதைக் காணாத உளமெங்கும் சிரங்கல்லவா

பாடல் வரிகள் - மதியன்பன்




புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலைக்காக எழுதிக் கொடுத்த கல்லூரிக் கீதம்.

தொல்லுலகை ஆழுகின்ற தூயவனே அல்லாஹ்வே
துன்பங்களைப் போக்கிடுவாயே. - எங்கள்
துயரங்களை நீக்கிடுவாயே!
எல்லையில்லா கல்விதனை எங்களுக்கு வழங்கிடுவாய்
ஏற்றமுடன் வாழ வைப்பாயே - நல்ல
எண்ணங்களால் ஆழ வைப்பாயே!

பாலர் கல்வி பயிலுமிந்த பாடசாலை ஹிஸ்புல்லாஹ்வின்
பணிசிறக்க அருள் புரிவாயே - பாலர்
பிணி அகல அருள் சொரிவாயே!
சீலமுடன் அறிவு தரும் சிறந்தகுரு மார்களது
சிந்தைகளில் அருள் புரிவாயே - வாழ்வு
சீர்பெறவே அருள் சொரிவாயே !

கல்விக்குதவும் நல்லவர்கள் கருணையுள்ள பெரியவர்கள்
கஷ்டங்களைப் போக்கிடுவாயே  - அவர்கள்
கவலைகளை நீக்கிடுவாயே!
அல்லலுறும் மாந்தர்களின் அவலம் தரும் நிலைகளினை
அல்லாஹ்நீ போக்கி வைப்பாயே - உந்தன்
அருளினையே சேர்த்து வைப்பாயே....!




மெட்டு - பூசு மஞ்சல் பூசு மஞ்சல் பூசிடத் தான் இன்பம்

சோகம் ஒன்று - வந்து எம்மை - சூழ்ந்தது நினைவுண்டா
ஆண்டு  ஆறு - போன பின்பு - அழியாத வடு வுண்டு
கடல் அன்று உள் வந்தது - பலர் உடல் அன்று இரையானது
நீரோடு தீ வந்தது - இந்த நிலமிங்கு பிளவுண்டது
வந்தது -  சுனாமி வந்தது - நொந்தது நம் உள்ளம் வெந்தது

சோகம் ஒன்று....

பல்லாண்டு சேர்த்தெடுத்த -  சொத்தோடு சுகமெல்லாம்
ஓர் நொடியில் ஒதுங்கியது! கதை கோடியே
நோகுதே.. நம் உள்ளம் வேகுதே..
ஆடைகள் ஏதுமில்லை - அம்மனமாய் நம்மவர்கள்
தொங்கோட்டம் ஓடியதும் துயர் சொல்லுதே
சொல்லுதோ  தினம் வந்து கொல்லுதே

பிஞ்சோடு பெரியவர்கள் பேரலையில் சிக்குண்டார்
எஞ்சியோர் தீப்புழுவாய் இடமின்றி தவித்தலைந்தார்
இந்த நிலைமைகளை இங்கு சொல்வதென்றால்
வரும் மஹ்ஸறைப்போல் ஒரு காட்சியைக் கண்டோமே
கண்டோமே..பேரதிர்ச்சி கொண்டோமே...
ஓ.. நின்றோமே..நிலைகுலைந்து நின்றோமே..
சோகம் ஒன்று....

விளையாடச் சென்ற பிள்ளை வீட்டிற்குத் திரும்பவில்லை
அலையோடு போன கதை அழச் சொல்லுதே...
இல்லையே.. பெற்றோரும் இல்லையே
பெருங்கடலின் சீற்றத்தால் பெருமுறுதிக் கட்டிடங்கள்
கரும்பாகக் கசங்கியது தடமில்லையே..
இல்லையே.. இடமொன்றும் இல்லையே..

உலகத்தை ஒரு கனத்தில் - உலுக்கிவிட்ட சுனாமி அலை
பல உயிரை மறு கனத்தில்- பலி கொடுத்த நமது நிலை
இந்த நிலைமைகளை இங்கு சொல்வதென்றால்
வரும் மஹ்ஸறைப்போல் ஒரு காட்சியைக் கண்டோமே
கண்டோமே..பேரதிர்ச்சி கொண்டோமே...
ஓ.. நின்றோமே..நிலைகுலைந்து நின்றோமே..
சோகம் ஒன்று....

பாடல் வரிகள் - மதியன்பன்
பாடியவர் - செல்வன் சாதுலி
26.12.2010




HIBULLA SONGS

புலி உறுமுது புலி உறுமுது.. எனும் மெட்டு படை வருகுது படை வருகுது தடைகள் தாண்டி படை வருகுது ஓளி தெரியுது ஒளி தெரியுது ஹிஸ்புல்லாஹ்வின் வருகை பார்த்து அருள் வருகுது அருள் வருகுது இறைவன் புறத்து அருள் வருகுது பயம் தெளியுது ஜெயம் தெரியுது ஹிஸ்புல்லாஹ்வின் வருகை பார்த்து ஈரினமும் அணைத்தெடுக்க ஏதிhத்;;தவரும் இணைத்தெடுக்க துணிந்து வாறான் இளந்தலைவன் துணிச்சல் மிக்க பெருந்தலைவன் நிற்காம வந்துசேரு வந்துசேரு வந்துசேரு வந்துசேரு வாறான் பாரு மண்ணின் மைந்தன் படை வருகுது... ஒற்றுமைதான் இவனுக்கு ஒரு கண்ணு - இவன் சேவைக்குள் அபிவிருத்தி மறு கண்ணு இவனோடு பழகுவது இலகுடா - இவன் இருப்பதுவே ஊருக்கு அழகுடா எதிராளி எனறாலும் அணைச்சிடுவனான் - வரும் எந்த இன மனிதரையும் இணைச்சிடுவான் இவனில்லாக் காலங்கள் இருளாகும் இவனாலே புது வாழ்வு உருவாகும் போடு வோட்டைப் போடு.... போடு வோட்டைப் போடு டங்கரு.... டங்கரு.... டங்கரு.... டங்கரு.... டங்கரு.... படை வருகுது... உறங்காத விழிகளுக்கு முதலாளி - இவன் ஊருக்கு உழைப்பதனால் தொழிலாளி அரசியலில் புதுமைதனைப் புகுத்தியவன் - இவன் அநியாய ஆட்சியினை கொழுத்தியவன் எந்தவொரு சவால்தனையும் எதிர்த்திடுவான் - இவன் எக்காலும் தோல்வியின்றி ஜெயித்திடுவான் வெற்றிலையும் மூணும் நம் தெரிவாகும் ஹிஸ்புல்லாஹ் நம்மினத்தின் விடிவாகும். போடு வோட்டைப் போடு.... போடு வோட்டைப் போடு டங்கரு.... டங்கரு.... டங்கரு.... டங்கரு.... டங்கரு.... படை வருகுது... பாடல் வரிகள் - மதியன்பன்- 10.03.2010


மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் எனும் மெட்டு தனிவழி தனிவழி என்று நின்றவன் தனித்துவ அரசியல் நமக்குத் தந்நவன் உடல் பொருள் ஆவி யெல்லாம் தியாகம் செய்தவன் செய்தவன் ஆண்டாண்டு காலம் மக்களுக்குழைத்த தலைவனுங்க... எம்மை வீழாம வாழ வைத்த தலைவனுங்க.. நம்ம வாழ்வுக்கு ஒளி கொடுத்த இளந் தலைவன் ஹிஸ்புல்லாங்க இவன் சேவைகள் தொடருமைய்யா நம்ம தேவைகள் வெல்லும் வரைக்கும் பலர் வந்து வந்து நின்ற போதும் சிலர் இல்லை இல்லை என்ற போதும் வாரி வழங்கிய கைகள் இது நிற்காது ஒரு போதும். ஆண்டாண்டு காலம்..... அரசியல் அரங்கினிலே இவனுக்கின்னும் அதிகாரம் குறையவில்லை பொறுப்புள்ள அமைச்சுக்களில் இவனிருந்த காலங்கள் மறக்கவில்லை இவன் கண்ணீரின் ஒவ்வொரு சொட்டும் சமூகம் சமூகம் ஆகும் சமுகம் சமுகம் என்றே தினமும் பொழுதும் விடியுமே ஓ.....ஓ..... மனமே...மனமே....தேர்தல் முடியும் மட்டு;ம் ஓயாதிரு... வெற்றி... வெற்றி... இதைக் காணும் மட்டும் கலங்காதிரு... ஜாதி மத பேதமில்லை இவனின் சேவைகள் நீதி நேர்மை என்று சொல்லும் இவனின்; பார்வைகள்; உடல் பொருள் ஆவி யெல்லாம் தியாகம் செய்தவன் செய்தவன் ஆண்டாண்டு காலம்.... உயிர் போலதான் தேர்தல்... அட உணர்வெங்கிலும் ஆர்வம் இதில் இணைந்தாகுவோம் நாமும் மகனே வா...மகனே வா... சொந்தப் புத்தியில் நில்லு... நம் தலைவன் ஹிஸ்புல்லாஹ் வெல்வான் இது மொத்த மக்களின் தீர்ப்பு... மகனே வா...மகனே வா.... ஊருக்காக உழைத்த தலைவன் வெற்றி அடைவான் நம் எண்ணம் போல வேலை செய்து இன்பம் வளர்ப்பான் அணிகளில் பல குழு ஏது....இனி நமக்குள்ள எதிரிகள் கிடையாது விலகிடும் அணிகளும் சேரும்... நம் வெற்றியும் அவர்களைச் சாரும் மகனே வா...மகனே வா... இவனுக்கு ஓய்வென்பது ஏது.. அது ஏது சேவைக்கொரு வரையறை கிடையாது...கிடையாது....கிடையாது.. ஆண்டாண்டு காலம்... பாடல் வரிகள் - மதியன்பன் 10.03.2010


வள்ளல் இமாம் பூசரியின் வாழ்ந்த கதை சொல்லவா.. எனும் மெட்டு எங்க மகன் ஹிஸ்புல்லாஹ் வாழ்ந்த கதை சொல்லவா.. மக்கள் மனம் நேசித்த நல்ல மனம் அல்லவா.. அந்தக் கதை கேட்டால்... எந்த நெஞ்சும் மகிழும் வெற்றி வாகை சூடிக்கிட்ட வேந்தனைத்தான் புகழும் எங்க மகன் நல்லதொரு ஆலிமின் குடும்பத்துப் பிள்ளைதான் முல்லையிவன் வளர்ந்திட்டான் முழுமதி ஆகித்தான் படிக்கின்ற காலத்திலே பொதுப்பணி என்றுதான் இந்த மகன் சேவை செய்த காலங்களும் கொள்ளைதான் இந்த மகன் வளர்ந்தான்... சொந்த மண்ணை நினைத்தான் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் தன்னை வளர்த்தான் ஆகையினால் அரசியலில் தன்னைத்தானே வளர்த்தான் அன்றுமுதல் நெஞ்சில்... அன்றுமுதல் நெஞ்சில் ஆசைதனை வளர்த்தான் வந்த வந்த தேர்தலிலே போட்டியிட்டு ஜெயிச்சான் எப்படியும் சேவை செய்ய வேண்டும் என்று துடித்தான் எங்க மகன் மட்டு மண்ணின் மைந்தனுக்கு மகத்தான வெற்றிதான் பிட்டு தேங்காய் பூவைப்போல ஒற்றுமைக்கு நட்புதான் விட்ட தொட்ட சேவையெல்லாம் செய்து தர வந்திட்டான் வீணர்களின் கொட்டமதை அடக்கியிவன் ஜெயிச்சிட்டான் தேர்தலிலே ஜெயிச்ச்சான்.... தேர்தலிலே ஜெயிச்ச்சான் மூவினத்தை இணைச்சான் மொத்த மக்கள் வாழ்வதற்கு வழிதனை வகுத்தான் ஆகையினால் ஊரு ஊராய் சென்று குறை அறிந்தான் இன்று வரை நெஞ்சில் இன்று வரை நெஞ்சில் வஞ்சம் ஒன்றும் இல்லை வந்த வந்த மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தான் எப்படியும் சேவை செய்ய வேண்டும் என்று துடித்தான் எங்க மகன் பாடல் வரிகள் - மதியன்பன் 25.04.2010

மேரே மங்கி கங்கா எனும் மெட்டு மல்லிகை முல்லை ரோசா இந்த மண்ணில் வாடா ராசாசா நீ.. கிழக்கு மண்ணில் கிடைத்த முத்தே எங்கள் சொத்தே நீ.. மல்லிகை முல்லை... கிழக்குமா சபையில் விளக்கென ஒளிரும் சுகாதார அமைச்சரே ஹிஸ்புல்லாஹ் எங்களின் வாழ்க்கை ஏற்றம் கண்டிட ஏணியாய் நின்றாய் சுக்ர் அல்லாஹ் ஆளுமைமிக்க அரசியல் தலைவா உங்களின் அணி வந்தோம் கிழக்கு மண்ணில் கிடைத்த முத்தே எங்கள் சொத்தே நீ.. மல்லிகை முல்லை... இருளடைந் திருந்த எங்களு}ர் தன்னை ஒளிபெறச் செய்தாய் ஹிஸ்புல்லாஹ் பலகோடி செலவில் ஊரெங்கும் சேவை நிறைவுகள் கண்டோம் சுக்ர் அல்லாஹ் ஈரினம் ஒன்றாய் இணைந்திங்கு வாழ பாலம் அமைத்தவனே கிழக்கு மண்ணில் கிடைத்த முத்தே எங்கள் சொத்தே நீ.. மல்லிகை முல்லை... வருகின்ற தேர்தல் பெரும் பலப் பரீட்சை களம் பல கண்டவன் ஹிஸ்புல்லாஹ் உமதணி நின்று ஜெயம் பெற உழைப்போம் இறைவன் உதவனும் சுக்ர் அல்லாஹ் வெற்றியின் சின்னம் வெற்றிலைச் சின்னம் இலக்கம் மூன்றேதான் கிழக்கு மண்ணில் கிடைத்த முத்தே வெற்றி உனக்கேதான்.... மல்லிகை முல்லை... பாடல் வரிகள் - மதியன்பன் 11.03.2010

தாயே உந்தன் முகம் பார்க்கின்றேன் எனும் மெட்டு எங்கள் உயிராய் உமைப் பார்க்கின்றோம் திங்கள் ஒளியாய் சுடர் காண்கின்றோம் வா...ஹிஸ்புல்லாஹ்...உம்மை அழைக்கி;றோம் தா.. இடமும் தா..... உந்தன் மனசிலே... ஆலிம் தந்த முத்து எம் சொத்து அல்லவா... ஆழும் அரசின் அமைச்சில் நீ அங்கமல்லவா.. இணங்கள் இணைந்த சேவை இங்கு தொடர வேண்டுமே.. இடையில் நின்ற வேலை இங்கு மீண்டும் வளருமே.. ஹிஸ்புல்லாஹ் மனதிலே விதைத்த விதைகளும் கிழக்குமண் பெற்றிட்ட விருத்திப் பணிகளும் கோடி ஆண்டின் பின்பும் இங்கு கதைகள் சொல்லுமே... எங்கள் உயிராய்... இந்த மண்ணில் தானே உன் சேவை தொடர்ந்தது உந்தன் உழைப்பில் தானே பல செழிப்பும் கிடைத்தது கொள்கையோடு கடமை உன் உடமை ஆனது நீ விழித்த இரவில் நம் சமூகம் விழித்தது. வெற்றிதான் வெற்றிலை உறுதியானது எங்களின் வாக்குகள் மலைகள் போன்றது உங்கள் வாக்கு வங்கி இன்னும் குறைய வில்லையே... எங்கள் உயிராய்.. இருபதாண்டு சேவை உன் திறமை சொல்லுமே.. இருளடைந்த ஊரில் இன்று ஒளியின் வெள்ளமே.. விட்டுச் சென்ற பணிகள் இங்கு தொடர வேண்டுமே.. பிரிந்த மக்கள் சேர்ந்து உமை வெல்ல வைப்போமே.. பாலையின் ஊற்றென உம்மைப் பார்க்கிறோம் காலையின் கதிரவன் ஒளியைக் காண்கிறோம் வெற்றி வாகை சூட உமைத் தோளில் சுமக்கிறோம். எங்கள் உயிராய்... பாடல் வரிகள் - மதியன்பன் - 12.03.2010

அஹ்லன் வஸஹ்லன் ஸலபிய்யா... எனும் மெட்டு இதயம் வாழும் இளந் தலைவா.. எங்கள் சமூகத்தின் பெரும் தலைவா... உங்கள் அணிதான் நாம் தலைவா... உயர்ந்தவன் நீதான் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மண்ணின் சொத்தே நீ.. கவலைகள் வேண்டாம் வெல்வாய் நீ... அஹ்லன் வஸஹ்லன்... முப்பது ஆண்டுகள் உன் வரவு மூவின மக்களும் உன் உறவு சிப்பியாய் ஊரைச் செதுக்கியவன் சேவைக்குள் தன்னை ஒதுக்கியவன் கிழக்கு மண்ணின் சொத்தே நீ.. கவலைகள் வேண்டாம் வெல்வாய் நீ... அஹ்லன் வஸஹ்லன்...... பட்டங்கள் பதவிகள் பல உண்டு பதவிகள் வியந்தன உனைக் கண்டு திட்டங்கள் தீட்டுவய் ஒரு முறைதான் திறந்திட வருவாய் மறுமுறைதான் கிழக்கு மண்ணின் சொத்தே நீ.. கவலைகள் வேண்டாம் வெல்வாய் நீ... அஹ்லன் வஸஹ்லன்...... வெற்றியின் சின்னம் வெற்றிலைதான் வென்றிடும் இலக்கமும் மூன்றேதான் நாற்றிசை எங்கினும் உன் பெயர்தான் நாற்பது ஆயிரம் வாக்குகள் தான் கிழக்கு மண்ணின் சொத்தே நீ.. கவலைகள் வேண்டாம் வெல்வாய் நீ... அஹ்லன் வஸஹ்லன்...... தோல்விகள் கண்டோம் துவளவில்லை துணிந்துநீ வந்தாய் கவலையில்லை கேள்விகள் கேட்டிடத் தேவையில்லை கிழக்கின் விளக்கே தோல்வி யில்லை கிழக்கு மண்ணின் சொத்தே நீ.. கவலைகள் வேண்டாம் வெல்வாய் நீ... அஹ்லன் வஸஹ்லன்...... பாடல் வரிகள் - மதியன்பன் - 12.03.2010


மேரே சப்னப்பு ராணிகபு ஐகிது... எனும் மெட்டு இளஞ்சிங்கமென மண்ணின் மைந்தன் வருகிறான் பல தடைகளைத் தாண்டியிங்கு வருகிறான் எங்க உரிமைகள் வென்றிடத்தான் வருகிறான் வருகிறான்.... ஹிஸ்புல்லா வருகிறான் பாலையின் ஊற்றாய் - பகலவன் கீற்றாய் வேதனை தீர்த்தான் - வெற்றியின் தலைவன் இந்த சமூகத்தின் விடிவுக்காய் ஒளியும் காட்டினான் இளஞ்சிங்கமென... தேவைகள் கேட்டான் - சேவைகள் செய்தான் நாளைய உலகின் நாயகன் ஆனான் நம்ம வாக்குகள் ஒன்றுஒன்றாய் சேரும் இவனுக்கு... இளஞ்சிங்கமென... மூவினம் ஒன்றாய் - சேர்ந்திங்கு வாழ பாலமாய் நின்றான் - பாதையும் அமைத்தான் இவன் சேவயிங்கு மீண்டும் தேவையே.. இளஞ்சிங்கமென... வெற்றியின் சின்னம் - வெற்றிலைச் சின்னம் இலக்கம் மூன்று – எங்களின் தேர்வு இந்நத் தேர்தலில் இவனுக்கு வெற்றி வந்து சேருமே.. இளஞ்சிங்கமென... பாடல் வரிகள் - மதியன்பன் - 13.03.2010 ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா எனும் மெட்டு காலைமுதல் மாலைவரை வேலை செய்யும் தலைவராய் யாராலும் ஆக முடியுமா..? சொல்லு யாராலும் ஆகமுடியுமா... ஆயிரம் தலைவரிங்கே வந்து நின்று சென்றாலும் ஹிஸ்புல்லாஹ் போல் ஆகுமா....? இரவும் பகலும் உழைத்ததிங்கே யாருடா..? சமுகம் விழித்துக்கொள்ள பாடுபட்டவன் பாருடா... காலைமுதல் விட்டகுறை அத்தனையும் மீண்டும் இங்கே முடிச்சுவைப்பான் புத்தம்புது வேலைகளை திட்டம்போட்டு தொடங்கி வைப்பான் கட்டம் கட்டமாய்க் கடந்து கஸ்டங்களைத் தீர்த்து வைப்பான் நித்தம் நித்தம் நாமுயர நித்திரையை நிறுத்தி வைப்பான் பிஞ்சுகளை அணைச்செடுப்பான் கொஞ்சிக் கொஞ்சி மகிழ வைப்பான் நெஞ்சமதில் இடம் பிடிப்பான் நிலவு போல ஒளி கொடுப்பான் ஊரு செழிக்க கோடிக் கணக்கில் பணத்தையெல்லாம் கொட்டிக்குவிப்பான் ஏழை எழியோர் தேவையறிந்து தான தர்மம் செய்து மகிழ்வான் இரவும் பகலும் உழைத்ததிங்கே யாருடா..? சமுகம் விழித்துக்கொள்ள பாடுபட்டவன் பாருடா... காலைமுதல் மூவினத்து மக்களையும் ஒற்றுமையாய் வாழவைப்பான் முன்பிருந்த தேவைகளை கேட்டுக் கேட்டு தீர்த்து வைப்பான் தோல்வி என்று வந்தாலும் துவண்டிடாமல் ஏற்றிடுவான் தோல்வி கண்ட பின்னாலும் சமுகத்திற்காய் உழைத்திடுவான் சத்தியத்தைத் தான் எடுப்பான் சமத்துவத்தை வளர்த்தெடுப்பான் ஊருமக்கள் நலன்கள் என்றால் ஒதுங்;காது கலந்து கொள்வான் யாரு மனதும் நோகாதிருக்க நல்லமுறையில் பேசிமுடிப்பான் நம்ம தலைவன் வெற்றியடைய வல்ல இறைவன் ஆசி கொடுப்பான் இரவும் பகலும் உழைத்த திங்கே யாருடா..? சமுகம் விழித்துக்கொள்ள பாடுபட்டவன் பாருடா... காலைமுதல் பாடல் வரிகள் - மதியன்பன் - 13.03.2010


சக்கரை நிலவே...என் நிலவே எனும் மெட்டு திங்களின் ஒளியே... எம் விழியே... காணும் போதே கனக்கிறதே.. தோல்விகள் இல்லை... இனி இல்லை நீ... முல்லையே... தினம் சேவை செய்யத்தான் உன்னை இறை அனுப்பி வைத்pட்டான் இங்கே.. உன் வாழ்க்கை தன்னை மெழுகாய் உருக்கி ஒளி தந்தாய் சமுகத்தின் கண்ணே... இரவுகள் விழித்தன கண்கள் கவலைகள் போக்கின கைகள் தடங்கதைத் தேடின கால்கள் உன் பிஞ்சு நெஞ்சு தாங்குமா..? திங்களின் ஒளியே... ஏப்ரல் மாதம் எட்டில் நீ ஜெயிப்பாய் என்றேன் உனக்கும் கூட அமைச்சுப் பதவி கிடைக்கும் என்றேன். விட்ட குறைகள் எல்லாம் நீ முடிப்பாய் என்றேன் அதற்கும் கூட பணத்தை கொட்டிக் குவிப்பாய் என்றேன். எதிர்காலச் சேவைகள் எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தாய் ஓயாத அலைகள் போல உள் வந்து வியாபித்தாய்.... வெற்றி பெறுவது நீ...தலைவா இனி வாக்கு வீழுமே... பொறு தலைவா பிரிந்து சென்றவர்... இனி வருவார் உனைப் புரிந்து கொண்டவர்... நிழல் தருவார் உன் வாழ்க்கை தன்னை மெழுகாய் உருக்கி ஒளி தந்தாய் சமுகத்தின் கண்ணே... இரவுகள்... சேவை செய்த மகனே நீ அலைகள் போலே... வாக்கு வந்து வீழும் இங்கு மலைகள் போலே.. ஊரின் எல்லை எங்கும் உந்தன் நாமம் சொல்லும் உறவில் கலந்தாய் நீயும் நம் பயணம் வெல்லும் உன்போல யாரும் இல்லை உறவாக நேசித்தாய் கண்போல எம்மைக்காத்து கருவோடு சுவாசித்தாய் வெற்றியென்பது உனக்கல்ல்லவா உனை வெல்லவைப்தெம் பொறுப்பல்லவா நித்;தம் உழைப்பது நீயல்லவா அதில் வெற்றி காண்பது நாம் அல்லவா..? உன் வாழ்க்கை தன்னை மெழுகாய் உருக்கி ஒளி தந்தாய் சமுகத்தின் கண்ணே... இரவுகள்... பாடல் வரிகள் - மதியன்பன் - 15.03.2010

மேற்கே விதைத்த சூரியனை... எனும் மெட்டு கிழக்கின் விளக்கே ஹிஸ்புல்லாவே! உன்னை வெல்ல வைக்கவே துணிந்து விட்டோம்! எதிரிகள் கையில் வீழ்ந்திருக்கும் எங்க கட்சியை மீட்கவே இறங்கிவிட்டோம்! துயர் நீங்கவே... எங்கள் துனை நீங்களே.. இங்கு ஹிஸ்புல்லாஹ் வென்றாகனும்! விஷ்வ ரூபம் கொண்டு எம்மை அழிக்க வரும் சில ஓணான்கள் வீழ்ந்தாகனும்! வாக்கு தன்னை வாக்கு தன்னை - போர் வாளாய் எடுத்து மாற்றுக் கட்சி நண்பருக்கு - புதுப் பாடம் புகட்டு! ரோஷமில்லை இங்கு சில மாடு! தோற்றுப்போகும் பாரு! சில பொழுது போனால் ஓடி விடும் காடு! ஒன்று சேர்ந்து ஒன்று சேர்ந்து வாங்க எங்கள் மகன் வெல்ல.. கூட்டணிகள் முன்னே ... தோல்வி நமக்கல்ல.. ஓ சமூகம் விளித்து எழுந்த பின்னாலே தோல்வி என்பது நமக்கிங்கு இல்லை வாக்குகள் நேர்த்தியாய் வந்து வீழட்டும்... தூங்கிடும் சமூகம் இங்கு விழிக்கட்டும்! ஹிஸ்புல்லாஹ் வந்து நம் சமூகத்தை ஆளட்டும்! (கிழக்கின்) ஒன்று ஒன்றாய் வாக்குகளை சேர்ப்போம்! ஒற்றுமையைக் காப்போம்! தேர்தல் வரும் முன்பே எதிரி இனம் காண்போம்! லட்சத்துக்கு கட்டுப்பட்ட கூட்டம்! - தோற்க வேண்டும் இங்கே! உண்மை வெல்லும் போது ஊழல் வெளியாகும்! உரிமை இழந்தவர் உறங்குதல் முறையா? உண்மையும். நேர்மையும் தூங்குதல் சரியா? இளையவர் முதியவர்; ஒன்றாய் சேருவோம்! எதிரியின் கொட்டத்தை முற்றாய் அடக்குவோம்! ஹிஸ்புல்லாஹ் வந்து எங்கள் சமூகத்தை ஆளட்டும்! (கிழக்கின்) பாடல் வரிகள் - மதியன்பன் -

பூசு மஞ்சள்... பூசு மஞ்சள்... எனும் மெட்டு போடு வோட்டு போடு வோட்டு புள்ளடி நீ போட்டு சின்னம் வெத்திலை இலக்கம் மூன்று வெற்றியை நீ ஈட்டு வாக்குகள் வீழ்ந்தாகணும் - நம் உரிமைகள் வென்றாகணும் ஏக்கங்கள் குறைந்தாகணும் - நம் எண்ணங்கள் நிறைவேறணும்; வெல்லனும் ஹிஸ்புல்லா வெல்லனும்.. ஓ.. ஆகனும் அமைச்சராய் ஆகனும் (போடு வோட்டு) தியாகங்கள் பல செய்து வளர்த்தெடுத்த நம் கட்சி சீரழிந்து போகிறதே உளம் நோகுதே நோகுதே எம் உள்ளம் நோகுதே.. துன்பங்கள் நீங்கிடணும் - துயரங்கள் நீங்கிடணும்! எம் தலைவன் ஹிஸ்புல்லாஹ் வென்றாகனும்! வெல்லனும் ஹிஸ்புல்லாஹ் வெல்லணும் கண் போன்ற வாக்குகளை ஒவ்வொன்றாய் சேர்த்திடணும்! புண்பட்ட சமூகத்திற்கு நல் வழியைக் காட்டிடணும்! எங்க உரிமைகளே இங்கு ஜெயிக்கணுமாம்! நாங்க வோட்டைப் போட்டு வந்து வெற்றியைக் காணுவோம்! வெல்லனும் ஹிஸ்புல்லாஹ் வெல்லனும்..ஓ. ஆகனும் அமைச்சராய் ஆகனும் (போடு வோட்டு) ஊருக்குள் பல பணிகள் உறங்காது செய்தாரே! பேரணிகள் சேர்கிறதே எமை காக்கவே! காக்கவே.. சமூகம் காக்கவே. யார்யாரோ சொல்கின்ற பொய்வாக்கு உறுதிகளால் சில அணிகள் சேர்கிறதே.. எமை தாக்கவே தாக்கவே எம்மை தாக்கவே பொய்சொல்லும் தலைவர்களை வாக்காலே விரட்டிடனும் ஒன்றாக சேர்ந்திங்கு பாடத்தை புகட்டிடணும எங்க உரிமைகளே இங்கு ஜெயிக்கணுமே நாங்க வோட்டைப் போட்டு வந்து வெற்றியைக் காணுவோம்! வெல்லனும் ஹிஸ்புல்லாஹ் வெல்லணும்..ஓ.. ஆகனும் அமைச்சராய் ஆகனும். (போடு வோட்டு) பாடல் வரிகள் - மதியன்பன் - 26.03.2010


ஒரு பெய்யாவது சொல் கண்ணே... எனும் மெட்டு ஒரு தேர்தல் வருகுது இங்கே - நாம், வாக்குகள் போடனும் நின்றே, அந்த வாக்கில் ஜெயம் காண்போம்... மக்கள் மனங்களில் சுத்தம் அட வாக்குகள் வீழுமே நித்தம் நாம் வெல்லுவோம் ஜன வெள்ளம் தினம் ஏங்குதே பல உள்ளம் உண்மையும் நேர்மையும் எங்கள் பக்கம்தான் தலைவன் ஹிஸ்புல்லாஹ் பக்கம்தான் சேர்ந்தால் வெற்றியின் பக்கம்தான் ஊருக்கும் நாட்டுக்கும் சேவைகள் செய்யத்தான் தேவை இளைய சிங்கம்தான் இங்கு ஹிஸ்புல்லாஹ் தங்கம்தான.; (ஒரு தேர்தல்..) பொய்களை திரட்டி ஆ.. ஆ.. எதிரணி சூழ்ச்சிகள் செய்கிறதே! எதிரணி சூழ்ச்சிகள் செய்கிறதே! கிழக்கின் ஒளி விளக்கு ஹிஸ்புல்லாஹ் வெல்வாரே.. கண்ணீர் கண்ணீர் சிந்தி கட்சி மரம் வளர்த்து சமூகத்தை சேர்த்துக் கொண்டு ஒற்றுமை செய்தாரே.. ஓ.. எதிரியின் கையில் பட்டு வேரோடு சாய்ந்து போகும் எங்கள் சின்னம் சின்னம் மரத்தின் வேர் விட்டாரே.. ஆனால்..தோழா.. நம் வெத்திலைச் சின்னம் தந்தாரே.. இங்கு..தோழா.. அவர் இலக்கம் மூன்றை தந்தாரே (ஒரு தேர்தல்..) விழிகளை திறந்து ஆ.. ஆ.. வேதனை தீர்த்துமே தந்தாரே.. முகவரிகள் சொன்னதும் இவர்தானே! ஓ.. ஊழல் லஞ்சம் போக்கி ஊரின் மானம் காத்து தேவைகள் கேட்டு வந்து இங்கு சேவைகள் செய்தாரே...ஓ.. ஏழையின் துயரம் கேட்டு பாலையின் ஊற்றாய் வந்து நின்று கேட்டு கேட்டு உதவிக் கை கொடுத்தாரே.. கேளாய்.. தோழா.. நம் வெத்திலைச் சின்னம் சின்னம் தந்தாரே இங்கு.. கேளாய்.. அவர் வெற்றி பெற்று வருவாரே... (ஒரு தேர்தல்..)


உன்னையறிந்ததால்..நீ.. உன்னையறிந்தால்... எனும் மெட்டு வெற்றியடைவாய் நீ வெற்றியடைவாய் அமைச்சராய் அரங்கேறுவாய் எதிர்த்தோர்கள் குதித்தோட பல வோட்டாலே நீ வெல்லுவாய்.. (வெற்றியடைவாய்) தேவை கண்டறிந்து சேவை செய்வதற்கு உன் போல் யாரும் இல்லையே தன்னை தானும் அழித்துக்கொண்டு சேவைகள் செய்வதனே உனக்கு தோல்வி இல்லையே.... ம்..ஹ்..ம்..ஹ்.. (வெற்றியடைவாய்) ஊரவர் தேவைகளை நீ முடித்தாய் உனக்கு வாக்குகள் விழவேண்டும் ஒரு ஊழல் இல்லாத தலைவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்.. ம்..ஹ்..ம்..ஹ்.. (வெற்றியடைவாய்) ஏழைகள் வாழ்வில் உய்ர்ச்சி தந்து மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தந்தாய்.. இங்கு ஒற்றுமை என்ற உரங்கள் தந்து இன ஐக்கியம் அமைத்துத்தந்தாய்.. ம்..ஹ்..ம்..ஹ்.. (வெற்றியடைவாய்) இரந்து வருபவர்க்கு இருப்பதில் ஈர்ந்து அவர் இதயத்தில் இடம் பிடித்தாய் - பல வாக்கு வீழ்ந்து இந்த தேர்தலில் வெற்றிபெற அல்லாஹ்வின் அருள் எடுத்தாய்... ம்..ஹ்..ம்..ஹ்.. (வெற்றியடைவாய்) பாடல் வரிகள் - மதியன்பன் -

என் உயிரே... என் உயிரே... எனும் மெட்டு ஹிஸ்புல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் உன் புகழ் பாடுவேன் வெல்ல உடன் பிறப்பை நான் அழைத்தேன் உன்சேவை சொல்ல எம் வாக்கு இணைகின்றதே..! உன் வெற்றி தெரிகின்றதே..! அன்பாளனே பண்பாளனே உன் குணம் போதுமே வெல்ல ஆசையுடன் பேசிவரும் உன் மனது வெள்ளை எம் வாக்கு இணைகின்றதே..! உன் வெற்றி தெரிகின்றதே..! (ஹிஸ்புல்லாஹ்) சேவை செய்த மகனே ஒதுங்காதே! தேவையின்னும் உண்டு மறவாதே! தேர்தல் வந்ததென்று கலங்காதே! தேடி வரும் வாக்கு உனைத்தானே! பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில் இதயங்கள் தாங்காது மன்னவனே மன்னவனே உன் பணி தொடரனும் இங்கு வாக்களிப்போம் வெற்றி வரும் நீதானே எம்.பீ! எம் வாக்கு இணைகினன்றதே! உன் வெற்றி தெரிகின்றதே! (ஹிஸ்புல்லாஹ்) ஏழைகளின் கண்ணிர் துடைத்தாயே! இரவு பகல் இன்றி உழைத்தாயே! கட்சியதன் கொள்கை வளர்த்தாயே! கவலையுடன் சமூகை நினைத்தாயே! சேவைகள் செய்கையில் பிரதேசம் வேறென மாறுகள் காட்டவில்லை.. எம் மகனே நல் மகனே உன் பணி தொடரனும் இங்கு வாக்களிப்போம் வெற்றி வரும் நீதானே எம்.பி எம் வாக்கு இணைகின்றதே! உன் வெற்றி தெரிகின்றதே! (ஹிஸ்புல்லாஹ்) பாடல் வரிகள் - மதியன்பன் -

கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல.. எனும் மெட்டு ஹிஸ்புல்லாக்கு மக்கள் வெள்ளம் அலைபோலே! வாக்கு வீழும் தேர்தலிலே மலைபோல! வெற்றி வரும் எங்களுக்கு உயிர் போல! சேர்ந்து நின்று வாக்களித்து காட்டுகின்றோம்.. வெற்றி ஈட்டுகிறோம்.. (ஹிஸ்புல்லாக்கு) திரன்டு வருகின்ற மக்கள் வெள்ளத்தை திருப்பிட முடியாதே! யானை ஒரு புறம் மரமும் மறுபுறம் சதிகள்; செய்கிறதே! யார் பெரிதென்ற கோஷங்கள் வேண்டாம் சிந்தித்துப் பாருங்களேன்.. ஊரார்க்கிங்கு சேவைகள் செய்த எம் மகன் ஜெயிக்கனுமே.. ஒற்றுமைதான் வெல்ல வைக்கும்! வேற்றுமைதான் கொல்ல வைக்கும்! நாங்க வோட்டு போட்டு எங்க உயிர் காப்போம்... (ஹிஸ்புல்லாக்கு) அவரவர் வோட்டு அவரவர் உரிமை மறந்திடக் கூடாதே! ஒரு தனிப்பட்ட பகையைக் காரணம் காட்டி பிரிவதும் கூடாதே! ஒருவருக் கொருவர் புரிந்துணர்வோடு வாக்கினைப் போடுங்களேன்... ஒவ்வொரு வாக்கும் சமூகத்தை காக்கும் கேடயம் ஆக்குங்களேன்.. மக்கள் வெள்ளம் ஒன்றாய் வந்தால் அற்பர் கூட்டம் தோற்றுப் போகும் காலம் எல்லாம் எங்கள் வாழ்வில் பூப்பூக்கும்... (ஹிஸ்புல்லாக்கு) பாடல் வரிகள் - மதியன்பன் -

கண்ணில் வரும் காட்சி எல்லாம்.. எனும் மெட்டு பல்லினத்து மாந்தரெல்லாம் பக்தியுடன் மதிப்பார் பாசமுள்ள இளந் தலைவன் ஹிஸ்புல்லாவை துதிப்பார் பல்லாண்டு பணிகள் செய்த பண்பாளன் ஹிஸ்புல்லாங்க.. நில்லாம ஓடி உழைச்சான் நம்மோரின் வறுமை ஒழிச்சான்.. (பல்லினத்து) தேர்தல் வந்திருக்கு வந்திருக்கு ஓ... வோட்டுப் போடு நம்ம மைந்தனுக்கு ஓ... அட நம்ம சின்னம் மரச் சின்னம் ஓ... இங்கு நமக்கினி வெற்றி வெற்றி.. ஓ... (பல்லினத்து) வெள்ளை உள மகன் நீ விழித்த பின்னால்தான் சமூகமோ விழிச்சிருக்கு எழுந்துவந்து... ம்.. ஹ்.. ம்.. ஹ்.. கரங்கள் கொடு ம்.. ஹ்.. ம்.. ஹ்.. இணைந்து இங்கு நடந்திடு நடந்திடு ஒற்றுமைக்கு விருந்தொன்று கொடு கொடு ஓ.. எளியோரின் வாழ்வில் ஏணியாய் நின்றாய் வாழ்வுக்கு வெளிச்சமடா உன்பணி இங்கு இல்லாமல் போனால் இருள் வந்து சூழுமடா.. தேர்தல் வந்திருக்கு ஓ... வோட்டுப் போடு நம்ம மைந்தனுக்கு ஓ... அட நம்ம சின்னம் மரச் சின்னம் ஓ.. இங்கு நமக்கினி வெற்றி வெற்றி... (பல்லாண்டு) யார் வந்து கேட்டும் போகையிலே அவர் மனசு நிறைஞ்சிருக்கும் இரவு பகல் ம்ஹ்.. விழிச்சிருந்து ம்ஹ்.. சேவை செய்யும் நல்ல குணம் இங்கு தொடரும் தொடரும்.. ஓ.. மாற்றுமத மக்கள் உன் பணிவு கண்டு உயிராய் மதித்திருக்கார்... உயிராய் மதித்திருக்கார்... தேர்தல் வந்திருக்கு ஓ... வோட்டுப் போடு நம்ம மைந்தனுக்கு ஓ... அட நம்ம சின்னம் மரச் சின்னம் ஓ.. இங்கு நமக்கினி வெற்றி வெற்றி... (பல்லாண்டு)

முதல்வனே! எனை கண் பாராய்... எனும் மெட்டு கிழக்கிலே இளஞ் சூரியனாய் வந்தாரே ஹிஸ்புல்லா ஒளி வெள்ளமே ஓ... யாரும் செய்யா - சேவை செய்தாரே ஹிஸ்பு;லலா வாழ்வில் குறை இல்லையே.. கிழக்கு மண்ணை காத்த தலைவா! கண்ணில் உறக்கம் காண வில்லையே முதல்வா.... முதல்வா.... முதல்வா... (கிழக்கிலே) ஓ.. ஆ.. மக்கள் குறை அறிந்து மனது இரங்கி சேவை செய்தாய் எந்த நாளும் வேலை வாய்ப்புக் கொடுத்து வேதனைகள் குறைத்து வாழச் செய்தாய் நேரம் ஒதுக்கி.. இரவில் விழித்து உழைத்தாயே... உழைத்து ஓடாய் இழைத்தாயே... அன்பால் எம்மை அணைத்தாயே... அடுத்தவர் தம்மை இணைத்தாயே... மைந்தனே மைந்தனே இதோ வெற்றி உனக்கே... முதல்வா... முதல்வா... முதல்வா... (கிழக்கிலே) ஓ.. ஆ.. பள்ளிக் கூடம் அமைத்தாய் பாதை அமைத்தாய் பாசத் தலைவா உண்மை உரைத்தாய்... ஓ... ஆஞ்சலகம் திறந்தாய் செயலகம் திறந்தாய் நேசத் தலைவா தூக்கம் துறந்தாய். ஏறாவூரு மக்களுக்காய் ஏந்தல் நீயும் பணி புரிந்தாய் கற்குடா தெகுதி குறை தீர்த்திட காவியத் தலைவா நீ விரைந்தாய்.. மைந்தனே மைந்தனே இதோ வெற்றி உனக்கே... முதல்வா... முதல்வா... முதல்வா... (கிழக்கிலே) பாடல் வரிகள் - மதியன்பன் - நாடோடி பாட்டு பாட.... எனும் மெட்டு ஓடோடி வேட்டு போட வெற்றிகள் வெற்றிகள் சேரும்! ஊரெல்லாம் மாலை சேர்ந்து ஹிஸ்புல்லாஹ் கழுத்தினில் வீழும்! வாக்குகள் கேட்டு வருவதுதானே தேர்தல்! உரிமைகள் கேட்டு அளிப்பதுதானே தேர்தல்! பிரிந்தவர் எல்லாம் சேர்வதுதானே தேர்தல்! வென்றபின் உரிமை மீட்டிடத்தானே தேர்தல்! தேர்தலை நான் பாடவா.. ஊரிலே முகம் தேடவா.. (ஓடோடி) பொய்யை இங்கு கூறி வாக்கு கேட்கும் போது விழிப்பாக வேண்டுமே... உண்மை இங்கு கூறி வாக்கு கேட்கும் போது புரிந்தாக வேண்டுமே..! கண் போன்ற வாக்கொன்றை எம் சின்னம் வெற்றிலை கண்டு போட்டாக வேண்டும் ஒன்று! என்று வாழும் தேர்தல் தானே தேர்தல்... உண்மைக்கும் நேர்மைக்கும் புள்ளடி இடுவதே தேர்தல்! ஹே.. நீதிக்கும் நேர்மைக்கும் புள்ளடி இடுவதே தேர்தல்! தேர்தலை நான் பாடவா... ஊரிலே முகம் தேடவா... (ஓடோடி) யானை மரம் என்ன.. கட்சி கொள்கை என்ன? எல்லாமே பொய்மையே! லட்சம் பணம் வாங்கி லட்சியத்தை இழந்தார் இது தானே உண்மையே! நாடாளும் மன்றத்துள்ளே... நமைப் பேச ஆள் வேண்டும் உயிர் போன்ற தேர்தலில் அளிக்கின்ற வாக்குத் தானே வெல்லும்! ஆளுக்கு ஒவ்வொரு வாக்கினை போட்டால் போதும்! சண்டைகள் பிடிக்கின்ற சில்லறை கூட்டங்கள் ஓடும்! தேர்தலை நான் பாடவா.. ஊரிலே முகம் தேடவா.. (ஓடோடி)


பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்... எனும் மெட்டு இழந்தோம்..இழந்தோம்..இழந்தோம்.. - பதவியை துறந்தோம்..துறந்தோம்..துறந்தோம் வருடங்கள் ஆறும் தவணை முறையில் கொல்லுமே! ஊருக்குள்ள குழப்பங்கள் வெடிக்கும் உறக்மில்லை கண்கள் விழிக்கும் உதவியின்றி மனங்கள் துடிக்கும் அடடா... அடடா... (இழந்தோம்..) ஓடி ஓடி வாக்குகள் போட்டடீர்! உங்களை நாங்கள் மறக்கவுமில்லை.. கூடிக் கூடி பிராத்தனை செய்தீர்! உங்களை நாங்கள் வெறுக்கவுமில்லை.. எதிர்த்தவரும் இணைந்திங்கு வருவார்! கனவா நனவா தோன்றவுமில்லை.. பள்ளம் மேடு பாதையில் உண்டு அதனால் நாங்கள் ஒதுங்கவுமில்லை. வெற்றி என்னும் களிப்பினிலே வேறு ஊரார் ஆடுகின்றார்! வேறு ஊறார் காலை நக்க நம்மை எதிர்த்தோர் ஓடுகின்ரார்! மனதில் இதனை ரணமா..! - அட மக்கள் மனதில் கனமா...அடடா... அடடா... (இழந்தோம்..) மண்ணின் மைந்தன் ஹிஸ்புல்லாஹ்வை மக்கள் இங்கு ஒதுக்கவுமில்லை.. ஊருக்காக சேவை செய்ய நமது மைந்தன் ஒதுங்கவுமில்லை.. இடிந்து போன உரிமை காக்க இளைஞர் அணிகள் ஒதுங்கவுமில்லை தளர்ந்து போன எம்.பி. பதவி தக்க வைக்க தயங்கவுமில்லை எங்க வோட்டை அமைச்சரைத் தவிர - வேறு எவர்க்கும் போடுவதில்லை என்று சொல்லும் உங்களை யெண்ணி ஏங்கும் இதயம் தூங்கவுமில்லை மனதில் இத்தனை ரணமா..! - அட மக்கள் மனதில் கனமா...அடடா... அடடா... (இழந்தோம்..)


மறக்க முடியவில்லை.. மறக்க முடியவில்லை. .. எனும் மெட்டு மறக்க முடியவில்லை.. மறக்க முடியவில்லை.. மறக்க முடியவில்லை..மறக்க முடியவில்லை.. ஆ... ஆ... எம.பி ஹிஸ்புல்லாஹ் செய்த சேவைகள் மறக்க முடியவில்லை. சேவை செய்த எம்.பியை எம்மால் வெறுக்க முடியவில்லை. மட்டு மைந்தன் ஹிஸ்புல்லாஹ்வை ஒதுக்க முடியவில்லை - அவர் மக்கள் கண்ணீர் துடைத்த நாட்கள் மறக்க முடியவில்லை. மறக்க முடியவில்லை.. மறக்க முடியவில்லை.. (மறக்க முடிய..) பழகித்தான் பார்கிறேன் குறைகள் தெரியவில்லை. நெருங்கித்தான் போகின்றேன் வெறுத்து ஒதுக்;கவில்லை. லஞ்சம் வாங்கவில்லை. ஊழல் செய்ய வில்லை. கடிந்து பேசவில்லை குறைகள் சொன்னதில்லை. வெறுத்து ஒதுக்க வில்லை. மறுத்து அனுப்பவில்லை ஆ..ஆ.. பள்ளிவாசல் படு கொலை தன்னை மறக்க முடியவில்லை. பயப்படாமல் இங்கு வந்தார் மறக்க முடியவில்லை. ஏறாவூரில் நடந்த கொலைகள் மறக்க முடியவில்லை. இங்கு வந்து எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டதில்லை. மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை ஆ... ஆ... (மறக்க முடிய) பலகோடி ரூபா செலவில் பாடசாலைக் கடடிடம் தந்து தளபாடக் குறைகள் தீர்த்தார் மறக்க முடியவில்லை. இருளாக காட்சி தந்த எத்தனையோ வீதிகள் தன்னை ஒளிகாண வழிகள் செய்தார் மறக்க முடியவில்லை. மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை. இந்த மனதை தள்ளி வைத்து இருக்க முடியவில்லை. மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை. (மறக்க முடிய) பாடல் வரிகள் - மதியன்பன் -

வெண்ணிலவே...வெண்ணிலவே...விண்ணை தாண்டி... எனும் மெட்டு இளந் தலைவா! இளந் தலைவா! எங்கள் இனத்தின் பெருந் தலைவா! உமை வாழ்த்திப் பாடுகின்றோம்; இந்த சமுதாயத்தில் யாரும் ஆற்றாப் பணி இங்கு சிறப்பாக ஆற்றி வைத்தாய்... (இளந்தலைவா..) ஒரு விடிவல்ல! ஒரு முடிவல்ல! பல ஆண்டாக அழுதது எம் சமூகம் அதைப் பார்க்காது துயர் தீர்க்காது முதல் ஆட்சியில் இருந்தனர் பல தலைவர் தோழா... கேளாய்... சமுதாயம் ஒளிகான வழியைக் காட்டிய தலைவா! சந்தோஷம் கலந்தாட அள்ளி அணைத்தோம் வருக! வெகு ஜன தொடர்பு அமைச்சராய் வந்தீர் வாழ்த்தோதி வரவேற்றோம்.. (இளந்தலைவா..) ஊரெல்லாம் அபிவிருத்தி பணிகள் செய்தவர் நீங்கள்! இரு சமூக உறவுக்கு பாலம் அமைத்தவர் நீங்கள்! இதை யெண்ணி யெண்ணி உங்களை வாழ்த்தினோம்.. ஏழைகளின் வாழ்க்கையிலே ஒளியை ஏற்றிய செம்மல். வாழையடி வாழையென வழியை காட்டிய வள்ளல் நாம் விடிவைக் காண வேண்டும்! நம் விழி போன்ற ஓளி நீங்கள்! (இளந்தலைவா..) பாடல் வரிகள் - மதியன்பன் - சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்;.. எனும் மெட்டு கள்ளம் இல்லாத அரசியல் தந்தேன்! கபடம் இல்லாத சேவைகள் தந்தேன்! உள்ளத்தில் என்றென்றும் பாசம் தந்தேன்! உயிரை கொடுத்தும் அமைதியைத் தந்தேன்! பிள்ளைகள் விளையாட பூங்கா தந்தேன்! பேருந்து நிலையம் பெற்றுத் தந்தேன்! கல்விக் கிங்கே கட்டடம் தந்தேன்! கலாச்சார மண்டபம் கட்டித் தந்தேன்! வடிகால் அமைத்து வீதிகள் தந்தேன்! வறுமை போக்கிடும் நிவாரணம் தந்தேன்! பறந்து பறந்து சேவைகள் தந்தேன்! பாசாங் கில்லாத பாசம் தந்தேன்! புண்ணிய பூமியைத் பெற்றுத் தந்தேன்! பூர்வீக சொத்தாய் ஆக்கித்; தந்தேன்! இருளைப் போக்கிடும் மின்னொளி தந்தேன்! இளந்த உரிமையை வாங்கித் தந்தேன்! வைத்திய சாலையும் கட்டித் தந்தேன்! வைத்தியர் குறையும் நீக்கித் தந்தேன்! அனாதைகள் இல்லம் கட்டித் தந்தேன்! அங்க யீனர்க்கு நிலையமும் தந்தேன்! வயேதிபர் வாழ்ந்திட விடுதியும் தந்தேன்! வறுமை போக்கிட சமுர்த்தியும் தந்தேன்! மீன் பிடி இயந்திரம் பெற்று தந்தேன்! மீனவர் தங்கிடும் மண்டபம் தந்தேன்! இனங்களுக் கிடையில் ஒற்றுமை தந்தேன்! இலக்கியம் வாழ்ந்திட நூல்களும் தந்தேன் தேசிய பாட சாலை தந்தேன்! தேடி தேடி உதவிகள் தந்தேன்! ஆய்வுக் கூடம் ஆக்கித்தந்தேன்! ஆசான் குறையை நீக்கித் தந்தேன்! சேவைகள் செய்திடும் செயலகம் தந்தேன்! சிதைந்த உறவை சேர்த்துத் தந்தேன்! தபாலகம் பலதும் கட்டித் தந்தேன்! தனித்து நாம் வாழும் தைரியம் தந்தேன்! வந்தவர்க்கிங்கே வாழ்விடம் தந்தேன்! வாணிப துறைக்கும் உதவிகள் தந்தேன்! கடற்கரை ஓரம் வீதிகள் தந்தேன்! கர்பலா கிராமம் திருத்தித் தந்தேன்! தொலைபேசி குறையும் தீர்த்துத் தந்தேன்! தூரப்பயண பஸ்களும் தந்தேன்! பள்ளிகள் கட்டிட பணமும் தந்தேன்! படித்தவர்க் கிங்கே வேலையும் தந்தேன்! பாலர் பாட சாலைகள் தந்தேன்! நூலகம் அமைத்து நூற்கள் தந்தேன்! நூதன சாலையும் கட்டித் தந்தேன்! வீதிகள் பலதை விசாலமாய் தந்தேன்! வீடுகள் கட்டிட காணிகள் தந்தேன்! தலைநகர் போல் ஒரு ஊரைத் தந்தேன்! தாஜ் மகால் போல கட்டிடம் தந்தேன்! சின்ன சின்ன வீதிகள் தந்தேன்! சின்னவர் விளையாட மைதானம் தந்தேன்! ஆயுர் வேத மருந்தகம் தந்தேன்! ஆற்றங் கரைக்கும் வீதிகள் தந்தேன்! பிரதேச சபையை பெற்று தந்தேன்! நகர சபையாய் மாற்றித் தந்தேன்! இத்தனை தந்தும் நிறைய வில்லை! இன்னும் உண்டு முடியவில்லை! உறக்கம் உறக்கம் வேண்டாம் என்றேன்! உங்கள் வாக்கை எனக்குக் கேட்டேன்...! பாடல் வரிகள் - மதியன்பன் - பார்த்து பார்த்து கண்கள் பூத்திருக்கு.. எனும் மெட்டு இலங்கை மக்கள் இதயம் நிறைந்தவனே- நீ வருவாயென... இனங்களிடையே ஐக்கியம் தந்தவனே - நீ வருவாயென ஹிஸ்புல்லாவே நீ வருவாயே சமூகம் காக்கவே... கிழக்கு நிலவே நீ வருவாயே இருளைப் போக்கவே... வெண் புறாவே நீ வருவாயே அமைதி காக்கவே.. வெற்றி மாலை நீ பெறுவாயே வாகை சூடியே. (இலங்கை) இரவினில் பகலினில் சமூகமே விழித்திட என்றுமே உழைத்தவனே! கட்டிடம் பலதுடன் மின்சாரம் செயலகம் நூலகம் தந்தவனே! கள்ளம் இல்லாத உள்ளம் கொண்டவன் உன்னை நேசிக்கிறோம்! ஏழைகள் வாழ்வில் ஓளியைத் தந்தவன் உன்னால் பூரிக்கிறோம்! வரும் தேர்தலில் உன்கொரு வாக்கினை அளித்து வெற்றியைக் காணுவோம்! நீ வருவாயென.. நீ வருவாயென... (இலங்கை) சத்தியம் வென்றிட- அசத்தியம் அழிந்திட அரசியல் செய்தவனே! சமூகமே உயர்ந்திட - தழிழ் மொழி வாழ்ந்திட என்றுமே உழைத்தவனே! அன்பால் எமை ஆளும் இளம் தலைவனே தோல்வி உனக்கேதடா! உன்பால் சரியுது மக்கள் வெள்ளமே வெற்றி பெறுவாயடா! உனை எதிர்பார்த்து தினம் வழி பார்த்து நாம் களத்தில் நிற்கிறோம்! நீ வருவாயென.. நீ வருவாயென... (இலங்கை) பாடல் வரிகள் - மதியன்பன் -


செந்தமிழ் நாட்டு தமிழச்சியே... எனும் மெட்டு தன்னிகரில்லா தளபதியே.. தலைவா ஹிஸ்புல்லாஹ் வருவாயே.. முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காய் முழுமையாக உழைத்தாயே.. எங்கள் உரிமை பெற்றுத்தரவே இரவு பகலாய் விழித்தாயே.. (தன்னிகரில்லா) மரத்தின் அணியில் வளர்ந்தவர் நாங்கள் மானம் காக்க வாக்களிப்போம். ஹிஸ்புல்லாவின் வெற்றியை நாங்கள் வாக்களித்து உறுதி செய்வோம். இந்த மண்ணில் - இருந்து யானை ஓடும் வரைக்கும் விரட்டிடுவோம். சொந்த மண்ணை ஆழும் பொறுப்பை முஸ்லிம் சமூகம் ஏற்றிடுவோம். (தன்னிகரில்லா) கிழக்கு மண்ணின் விடிவெள்ளி நீங்கள் விளக்காய் வந்து இருள் துடைத்தீர். நூற்றுக் கணக்கில் சேவைகள் செய்து ஊரின் தேவைகள் முடித்து வைத்தீர். எங்கள் வாக்கை மரத்திற் களித்து காங்கிரஸை வெல்ல வைப்போம். தெரிவு வாக்கை மூன்றுக் களித்து ஹிஸ்புல்லாவை வெல்ல வைப்போம். (தன்னிகரில்லா) பாடல் வரிகள் - மதியன்பன் - ஸ்னேகிதனே...ஸ்னேகிதனே... எனும் மெட்டு பாலை வனத்திலொரு சோலை மலர்ந்து வந்து நிழலைக் கொடுத்தது போல் இங்கு நிழலைக் கொடுத்தது போல் காலை உதித்து வரும் சூரியனைப் போல் இருளைத் தடுத்தவனே.. ஓ.. இருளைத் தடுத்தவனே.. மக்கள் மனதில் கலந்து உறவு கொண்ட கிழக்கின் இளஞ் சுடரே! ஓ... கிழக்கின் இளஞ் சுடரே! ஹிஸ்புல்லாவே.. ஹிஸ்புல்லாவே.. கிழக்கொளி ஹிஸ்புல்லாவே.. உன்னை நம்பித்தான் நாமிருக்கோம் உதவிடு ஹிஸ்புல்லாவே.. எல்லோர் மனமும் மனமும் உன் பெயர் உரைக்கும் உரைக்கும் மீண்டும் வெற்றி பெற வேண்டும் வேண்டும்.. (ஹிஸ்புல்லாவே..) ஏழைகளின் தேவைகளை அறிந்தாய்.. அவர் காலடிக்குச் சென்று பணி புரிந்தாய்.. தூக்கம் துறந்தாய்.. ஆளுங் கட்சி அமைச்சினிலே இருந்தாய்.. நம் தேவைக் கென அள்ளிப் பணம் ஈந்தாய்.. குறைகள் தீர்த்தாய்.. மல்லிகை முல்லை மலர்களைப் போல- மெல்லிய மனம் கொண்டாய்... ஈரினத்தாரின் இனப்பகை நீக்கி ஓரினம் காணச் செய்தாய்... (ஹிஸ்புல்லாவே..) கண்ணை இமை காப்பது போல் காத்தாய்.. நீ கலங்கரை விளக்கெனவே பூத்தாய்.. இதயம் சேர்த்தாய்.. மட்டு மக்கள் விடிவுக்காக உழைத்தாய் .. தன் மானத்தோடு வாழவென அழைத்தாய். சேவை செய்து இழைத்தாய். அன்பு மகன் உன்னை ஆசையோடு அழைத்து உள்ளங்களில் வைத்துக் கொள்வோம் தேர்தல் வரும் போது வாக்கினை அளித்து வெற்றி பெறச் செய்திடுவோம்.. (ஹிஸ்புல்லாவே..)



தின்னாதே.. என்னை தின்னாதே... எனும் மெட்டு ஒதுங்காதே! தலைவா ஒதுங்காதே..! முஸ்லிம் சமூகம் தோற்றுப் போகும் ஒதுங்காதே! நாம் அனாதைகளாய் ஆகிப் போவோம் ஒதுங்காதே! கண்ணி வெடிகள் வைத்து உன்னை கொல்ல வருவோர் மனசு மாறி வருவாரே.... ஒதுங்காதே தலைவா ஒதுங்காதே! சீ..சீ..சீ தயங்காதே! தலைவா தயங்காதே! வெல்லுவதை விடவும் உன்னைக் கொல்லுவதே எதிரணிக்கு இன்பம் அல்லவா! நான் சொல்லவா.. (ஒதுங்காதே) இன பேதம் இல்லாமல் பணியாற்றி வந்தாயே! எதிரணிகள்; தேர்தலிலே வென்று விட்டாரே! ஒரு பாவம் அறியாத உனை கொல்ல நினைப்பவர்கள் இறையோனின் தண்டனைக்கு முகம் கொடுப்பாரே! பயணத்திலே நோன்பு வைப்பாய் - விடிய விடிய தொழுதழுவாய் ஏழைக்கெல்லாம் பணம் கொடுப்பாய் எதிரிகளையும் அணைத் தெடுப்பாய் உண்மை நேர்மை வாய்மை கொண்டு - உயிரின் மேலாய் சமூகம் காத்து உறவை இங்கே சீர்படுத்தித் தந்தவனே ஒதுங்காதே! தலைவா ஒதுங்காதே..! (ஒதுங்காதே) ஊருமக்கள் எல்லோரும் ஒன்றாகி நின்றோமே இறையோனின் ஏற்பாடு தோற்று விட்டோமே... வருங்காலம் நமதாட்சி தயங்காது பணி செய்வோம் கலங்காது இரு மனமே என்று உரைத்தாயே... விட்ட குறை தொட்டெடுப்பாய் - வீணர்களின் கொட்ட மழிப்பாய் பட்ட மரம் படரவைப்பாய் - பாராளு மன்றமிருப்பாய் கள்ளம் கபடம் கயமை இன்றி கருணை நெஞ்சில் எம்மை வைத்து பாதுகாப்பை பலப்படுத்தி தந்தவனே ஒதுங்காதே! தலைவா ஒதுங்காதே..! (ஒதுங்காதே)

பல்லாங் குழியின் வட்டம் பார்த்தேன்... எனும் மெட்டு முஸ்லிம் இனத்தின் முழுமதி பார்த்தேன் எங்கள் நாயகன் மூவின மக்கள் இதயத்துள் வாழும் காவிய நாயகன் ஏழைகள் சிரிப்பில் இவன் முகம் பார்த்தேன் நாளைய சமூகத்தின் ஒளி முகம் பார்த்தேன் விளக்காய் விழிக்கும் இவன் விழி பார்த்தேன் வேதனை தீர்த்திடும் இவன் மொழி கேட்டேன் உதவிகள் செய்திடும் இவன் கரம் பார்த்தேன் இதயத்து நாயகன்.. (முஸ்லிம்) இவன் பொறுமையோடுதான் காத்திருந்தான் இறை தீர்ப்பு வரும் வரை பார்த்திருந்தான் அட பொதுஜன ஐக்கிய முன்னனி அணியில் ஒன்று சேர்ந்து போட்டியிட்டான்- வெற்றி வந்து சேர்ந்திடும் இந்தத் தேர்தலிலே பல முகம் தெரிதே இதை விளக்கிட முடியாது எமது மைந்தன் மீண்டும் வரணும் வெத்திலை ஜெயிக்கனுமே ஒன்று சேரனுமே இங்கு ஜனங்களெல்லாம் இனி பிரிவது கூடாது ஒன்று சேர்ந்திடில் வெற்றி நமக்கே வென்று காட்டணுமே.. (முஸ்லிம்) பல அணிகள் சேர்ந்துதான் வருpறதே.. எமை பிரித்;து வைக்கத்தான் போகிறதே.. அட தேசிய பட்டியல் எம்.பி.கள் என்று பலரைக் களத்தில் இறக்கி வைத்து ஊரில் பகையை மூட்டுது எங்க ஊருக்குள்ளே பல பிரச்சினைகள் இதைத் தீர்த்திட ஆளில்லை நமது மைந்தன் ஹிஸ்புல்லாஹ் வரணும் குழப்பம் தீர்ந்திடுமே எங்க தலைவனது சின்னம் வெத்திலைதான் இதை மறந்திடக் கூடாது ஒன்று சேர்ந்து நாம் வாக்கினை அளிப்போம் வெற்றி நிச்சயமே... (முஸ்லிம


ஆயற் பாடி மாளிகையில் தாய் மடியில்... எனும் மெட்டு பூத்த புகழ் பெருக் கெடுத்து பூமியெங்கும் ஒடுகின்ற காத்த நகர் ஈன்ற மகன் ஹிஸ்புல்லாஹ் - இந்த தேர்தலிலே வெற்றி பெற்று பிரதி யமைச்சராகி விட்டார் ஆர்வமுடன் அணைத்தெடுப்போம் சுக்ர் அல்லாஹ். (பூத்த புகழ்) தபால் தந்தி தொலைத் தொடர்பு பிரதி யமைச்ச ராகிவிட்ட தளபதியே! நமது மகன் ஹிஸ்புல்லாஹ் - இவர் வெற்றி பெற வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லி இறைவனுக்கும் நன்றி சொன்னோம் சுக்ர்; அல்லாஹ்.. (பூத்தபுகழ்) நடந்து முடிந்த தேர்தலிலே நமை எதிர்த்து நின்றவரும் நமது அணி சேர்ந்துவிட்டார் ஹிஸ்புல்லாஹ் - இங்;கு நடந்தவற்றை நாம் மறப்போம் நல்லவற்றை நாம் நினைப்போம் ஒற்றுமையே வெற்றி தரும் சுக்ர் அல்லாஹ்;.. (பூத்தபுகழ்) உண்;மை, நேர்மை என்றுழைத்தார் உதவிகளும் செய்திளைத்தார் மண்ணின் மைந்தன் இளந்தலைவன் ஹிஸ்புல்லாஹ் - இவர் நாட்டுக்கொரு ஒளி விளக்கு - நம்மவர்க்கு விடி விளக்கு நாமிணைந்து சேர்த்தெடுப்போம் சுக்ர் அல்லாஹ்.. (பூத்தபுகழ்) ஏழை மக்கள் இதயத்திலே ஏற்றி வைத்த ஒளி விளக்காம் வாழை இனம் போல மகன் ஹிஸ்புல்லாஹ் - எங்க தேவை யெல்லாம் கேட்டறிவான் - தேடி வந்து உதவிடுவான் வாகை சூடி வாழ்த்துகிறோம் சுக்ர் அல்லாஹ்.. (பூத்தபுகழ்)

தஞ்சா ஊரு மண்னை எடுத்து... எனும் மெட்டு அஞ்சா சிங்கம் வீரம் எடுத்து அன்பால் எம்மை அரவணைத்து உரிமைக்காக குரல் கொடுக்கும் தலைவா! எங்க விடிவுக்காக விழித்திருக்கும் தலைவா!
(அஞ்சா சிங்கம் எத்தனையோ தலைவரை நாம் கண்டோம்க அவர் அத்தனையும் ஹிஸ்புல்லாஹ் போல் இல்லீங்க இங்கு இல்லீங்க வந்தானே வந்தானே கண்ணோட மணியே - அல்லாஹ் தந்தானே தந்தானே தன்னோட அருள 

(அஞ்சா சிங்கம்)
பள்ளிக் கூடம் கட்டப் பணம் தந்தாரு ஏழை வீடு கட்ட மானியமும் தந்தாரு வீதியெங்கும் விளக்குப் போட்டுத் தந்தாரு நாங்க வீடிருக்க பாதுகாப்பும் தந்தாரு சமுர்த்தி வேலை வாய்ப்பு தொழில் கொடுத்தது இவருங்க தழிழர் முஸ்லிம் மக்களுக்கு உறவுப்பாலம் இவருங்க கல்வி கலா சாரமெல்லாம் இவரின் விருத்தி தானுங்க காத்திருந்து தொண்டு செய்வது இவரின் நோக்கம் பாருங்க தொண்டு செய்யும் தலைவனுக்கு வாக்களிப்போம் வாருங்க தேர்தலிலே வெற்றி வரும் அமைச்சருக்கு தானுங்க வந்தானே வந்தானே கண்ணோட மணியே -அல்லாஹ் தந்தானே தந்தானே தன்னோட அருளே! (அஞ்சா சிங்கம்) உண்மை நேர்மை வாய்மை இவன் பண்பாடு இங்கு லஞ்சம் ஊழல் கள்ளம் கபடம் முரண்பாடு அன்பு பண்பு பாசம் இவன் கண்னோடு நம்மை அரவணைக்கும் பண்பு கொண்டோன் தன்னோடு தேனொழுகப் பேசுவதில் நிகரு இல்லை இவருக்கு தேடி வரும் மக்களுக்கு அள்ளி வழங்கும் குணமுண்டு வாக்குறுதி கொடுத்து விட்டால் மாற்றமில்லை இவருக்கு வார்த்தையில பொய்யுமில்ல புரட்டுமில்ல மகனுக்கு இரவெல்லாம் விழித்திருந்து கடமை செய்வார் ஊருக்கு தன்னுயிரை தான் கொடுத்து விடிவு தந்தார் பாருக்கு வந்தானே வந்தானே கண்ணோட மணியே- அல்லாஹ் தந்தானே தந்தானே தன்னோட அருளே.. (அஞ்சா சிங்கம்) பாடல் வரிகள் - மதியன்பன் -


வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை... எனும் மெட்டு வெற்றி வரும் வெற்றி வரும் வேதனை தீர்ந்திடுமே! எங்க மகன் ஹிஸ்புல்லாக்கு வாக்குகள் வீழ்ந்திடுமே! வெத்திலதான் நம் சின்னமிங்கே - நேரே ஒரு புள்ளடிதான்! இலக்கம் மூன்று கீழே உண்டு! அதற்கும் ஒரு புள்ளடிதான்! வெற்றி வரும்) தேர்தல் ஒன்று வருதே எங்க வாக்கினைக் கேட்டு! போடு ஒரு வோட்டு நம்ம பலத்தினைக்; காட்டு! தேவை ஒரு சிங்கம் எங்க உரிமை காக்க! வருதே இந்தச் சிங்கம் நம்ம துயரை போக்க! ஹிஸ்புல்லாஹ் போலொரு சேவையின் செம்மலை வாழ்க்கையில் காப்போம் அரிது! மூவின மக்களும் நம் மகன் அணியினில் தினம் தினம் வருகுது பாரு துயரத்தில் வாழும் மக்களை காக்க துடுப்பென வருதே ஒரு இளைய தலை முறை! இனி தோல்வி இல்லை இல்லை! வெற்றி வரும்) சேவை பல செய்தார் எங்கள் தேவையை கேட்டு! வாக்கு வந்து வீழும் இவர் நேர்மையைப் பார்த்து! ஓடாய் இங்கே உழைத்தார் இந்த உத்தம புருசன் வேளை இங்கு வருதே உங்க நன்றியை காட்டு! ஊருக்குள் எழுகின்ற குழப்பங்கள் தீர்ந்திட! ஹிஸ்புல்லாஹ் வென்றிட வேண்டும்! கூட்டணி சேர்ந்திங்கு குழப்பிட வந்துள்ள கும்பல்கள் தோற்றிட வேண்டும். இனங்களுக்கிடையில் உறவுகள் வளர வென்றிட வேண்டும் எங்க தலைவர் ஹிஸ்புல்லாஹ்! ஒன்று சேர்ந்தோம் ஷுகுறல்லாஹ்.... (வெற்றி வரும்) பாடல் வரிகள் - மதியன்பன் - ஊருசனம் தூங்கிருச்சி... எனும் மெட்டு தேர்தல் இங்கு வந்திருச்சி ஊரு சனமும் விழிச்சிருக்சி நாளையிங்கு எம். பி என்று ஹிஸ்புல்லாவை குறிச்சிருச்சி
(தேர்தல்); ஆளும் கட்சியில்லை அமைச்சர் பதவியில்லை சேவை செய்து வந்தானே ஊரு பேதமில்லை மாற்று மதமுமில்லை சேவை செய்து தந்தானே.. மக்கள் மனதை வென்றானே.. ஜந்து வருசச் சேவை செய்த மகன் வெல்ல வாக்கு வீழுமே.. எம் பி நீங்கள் தானே.. நம்பி நாங்கள் தானே.. சத்தியமா இந்த மகன் வெல்ல வாக்கு அளித்திடுவோம் கண்ணிரெண்டும் தூங்கல்லியே.. வெற்றி காணத் துடிக்கிறதே..
(தேர்தல்) வின்சன் ஸ்கூலுக்கு இலட்சம் ஜப்பதினை வேலை செய்யக் கொடுத்தாயே.. மஞசந் தொடுவாயுள்ள தொழில் நுட்பக் கல்லூரியை தரம் உயர்த்த உழைத்தாயே... உரம் கொடுத்து வளர்த்தாயே.. தமிழ் மக்கள் இங்கு நன்றி கூற உள்ளார். வாக்கு வீழுமே.. எம் பி நீங்கள் தானே.. நம்பி நாங்கள் தானே.. வெள்ளை மனம் கொண்ட மகன் வெல்ல வாக்கு அளித்திடுவோம் கண்ணிரெண்டும் தூங்கல்லியே.. வெற்றி காணத் துடிக்கிறதே.. (தேர்தல்) பாடல் வரிகள் - மதியன்பன் - என் மனவானில் சிறகு விரிக்கும்..... எனும் மெட்டு கண்ணிமை போல சமூகம் காக்கும் காவியத் தலை மகனே.. உங்கள் வெற்றியைக் காண ஒவ்வொரு இதயமும் துடியாய் துடிக்கிறது சில சில விசமிகள் உங்கள் வெற்றியை தடுத்திட வருகின்றார். அவர்மூக்கினை உடைத்து வாக்கினைப் போட்டு வெற்றியைக் காட்டிடுவோம். வெற்றிலை சின்னம் இலக்கம் மூன்று வேறொன்றும் நமக்கில்லை ஒற்றுமையாக வாக்கினை அழித்தால் தோல்வியும் நமக்கில்லை பல வாக்கு வீழுமே.. வெற்றி சூழுமே இதயம் மகிழுமே நீ பாரு..
(கண்ணிமை...) உரிமையும் பெற்றுத் தந்தான். உதவியும் செய்து தந்தான் எங்களில் இதை யாரும் அறிவோமே... கட்டிடம் கட்டித் தந்தான் கல்விக்கு உயிரைத் தந்தான் விளக்கிட இதை இங்கு முடியாதே... கள்ளமோ கபடம் இல்லை கயமையோ இவனில் இல்லை எதர்க்கும் இவன் அஞ்சிட வில்லை இங்கே.. தாயைப்போல் அன்பைத் தந்தான் தூயபணி செய்து தந்தான் எவர் நெஞ்சும் ஏற்றுக் கொள்ளும் வரலாறும் கூறும்...

(கண்ணிமை...) கற்குடாத் தொகுதி மக்கள் கலங்கிடத்தேவை இல்லை உங்களின் தலைவன் இவன் தானே.. ஏறாவூர் வாழும் மக்கள் ஏங்கிடத் தேவை இல்லை என்றுமே இவன் சேவை செய்வானே... பிரதேச வாதம் இல்லை. பிற்போக்குத் தனமும் இல்லை எவர்கேட்டும் இவன் சேவை செய்வான் இங்கே.. மேகம்;போல தாகம் தீர்ப்பான் வாகை சூடி சமூகம் காப்பான் எவர் மனமும் ஏற்றுக் கொள்ளும் இவன் தானே தலைவன்.. (கண்ணிமை...) பாடல் வரிகள் - மதியன்பன் -


பூவே முதல்பூவே ஒரு பனித்துளி உனக்காக.... எனும் மெட்டு வெற்றி பெரு வெற்றி மகன் ஹிஸ்புல்லாஹ் உனக்காக ஆழும் அரசாளும் அதில் அமைச்சும் உனக்காக வாக்கு பலவாக்கு நாங்க போடுவோம் உனக்காக உயிரைக் கொடுத்தாலும் உமைக் காப்போம் எமக்காக மக்களின் மனம் சொல்லும் மகன் ஹிஸ்புல்லாஹ் எமக்;காக.. வெற்றி பெரு வெற்றி இனத்தீர்வில் ஒரு வழியை காட்டிவைத்தான் எமக்காக இரு இனத்தின் பகை நீக்கி வாழவைத்தான் எமக்காக இலக்கம் இங்கு முன்று சின்னம் வெற்றிலை நமக்காக வாக்கை நாங்க போட்டு எம்பி ஆக்கணும் நமக்காக சேவைகள் பல செய்திட இவன் உழைப்பான் நமக்காக வெற்றி பெரு வெற்றி ஆழுங் கட்சி அமைச்சிருந்து சேவை செய்தான் நமக்காக மூழுகின்ற பிரச்சனைக்கு முடிவு தந்தான் நமக்காக கட்சி நம்கட்சி அதைப் பெறுவான் நமக்காக உரிமை அதைப் பெற்று இங்கு தருவான் நமக்காக வருகின்ற பொதுத் தேர்தலில உங்கள் வாக்குகள் நமக்காக வெற்றி பெரு வெற்றி அமீரலியும் மர்சூக்கும் பஸீரும் கூடத் தோப்பாங்க அவங்க அணி ஜலாலுத்தீன் முடிவு கண்டு சிரிப்பாங்க தோல்வி படு தோல்வி இதை விழங்க மறுக்காங்க கேள்வி பல கேட்டு பலர் மனசைக் கெடுக்காங்க வருகின்ற பொதுத் தேர்தலில் இதை நிஜமாப் புரிவாங்க வெற்றி பெரு வெற்றி பாடல் வரிகள் - மதியன்பன் - அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே.. எனும் இசையில். உம்மாவும் வாங்க வாப்பாவும் வாங்க எங்கமகன் ஹிஸ்புல்லாக்கு வாக்குகளைத் தாங்க உம்மாவும் வாங்க ஆண்டுபல அரசியலில் நிலைத்து நின்றீங்க அனுபவத்தால் சேவைபல செய்து தந்தீங்க ஆ...ஆ....ஆ......ஆ...ஆ,. உங்களைப்போல் சேவை செய்ய யாரும் இல்லையே ஓயாமல் உழைத்தவரே தோல்வி இல்லையே.. வெல்வாய்.. வெல்வாய்...வெல்வாய்..வெல்வாய்.. நானாவும் வாங்க...நோனாவும் வாங்க நமது மகன் ஹிஸ்புல்லாக்கு வாக்குகளைத் தாங்க நானாவும் வாங்க தமிழர் முஸ்லிம் என்று பேதம் காட்ட வில்லையே.. தாயைப்போல அரவணைக்கத் தவறவில்லையே.. ஆ...ஆ....ஆ......ஆ...ஆ,. காத்தான்குடி ஏறாஊரு ஓட்டமாவடி மட்டுமல்ல. மட்டுமண்ணில் உங்கள் சேவையே.. சேவை..சேவை..சேவை...சேவை.. மச்சானும் வாங்க.. மச்சியும் வாங்க மண்ணின் மைந்தன் ஹிஸ்புல்லாக்கு வாக்குகளைத் தாங்க. மச்சானும் வாங்க... இனங்களிடையில் நல்லுறவை வளர்த்து வந்தீர்கள் இணையில்லா அபிவிருத்தி செய்து தந்தீர்கள் ஆ...ஆ....ஆ......ஆ...ஆ.. மனங்களிடையே குடியிருக்கும்; மஹிந்த தோழனே மாறாமல் வாக்களித்து வெல்ல வைப்போமே.. வெல்வாய்..வெல்வாய்...வெல்வாய்...வெல்வாய்.. சாச்சாவும் வாங்க.. சாச்சியும் வாங்க.. சாதனையைக் காட்டிடுவோம் வாக்குகளைத் தாங்க சாச்சாவும் வாங்க.. வேலை வாய்ப்பு கட்டிடங்கள் என்று தந்தீர்கள் சோலைபோல ஊரை இங்கு மாற்றித் தந்தீர்கள் ஆ...ஆ....ஆ......ஆ...ஆ,. தங்க மகன் ஹிஸ்புல்லாஹ்வே நீங்க வெல்லனும் உங்க வெற்றி சமூகத்திற்கு உண்மை சொல்லனும் சொல்லும்...சொல்லும்..சொல்லும்..சொல்லும் மாமாவும் வாங்க...மாமியும் வாங்க.. மண்ணின் மைந்தன் ஹிஸ்புல்லாஹ்வை வெல்லவைப்போம் வாங்க மாமாவும் வாங்க.. பாடல் வரிகள் - மதியன்பன். 05.04.2010 டாடி மம்மி வீட்டில் இல்லை... எனும் இசையில் ஜாதி பேதம் பார்க்கவில்லை தடை ஏதும் போடவில்லை சேவைகள் செய்தான் பிள்ளை ஹிஸ்புல்லாஹ் சூது வாது ஒன்றும் இல்லை சூழ்ச்சி ஏதும் செய்ய வில்லை ஜெயிச்சாண்டா எங்க பிள்ளை ஹிஸ்புல்லாஹ் ஊரெங்கும் பாரு... இனி இவனோட பேரு... அறியாம நின்றா... அது வெட்கக் கேடு வற்றாத ஆறு... இது நிற்காம ஓடும் எல்லைகள் தாண்டும்...நீ தாண்டா கேளு... ஜாதி பேதம்... பல ஊரு சென்றுதான் இவன் சுற்றிப் பார்த்தானே தன் மக்கள் வாழும் நிலையைக் கண்டு கண்ணீர் வி;ட்டானே பல மக்கள் சேர்ந்துதான் பெரும் வாக்குப் போட்டாரே ஆளும் அரசில் அமைச்சராகி வென்று வந்தானே.. அதிகாரம் காட்டவில்லை.. அநியாயம் செய்ய வில்லை இருக்குது இருக்குது இவனுக்கின்னும் மக்களின் செல்வாக்கு... ஜாதி பேதம்... பல இந்து முஸ்லீமை இவன் சேர்த்துக் கொண்டானே.. தன் எண்ணம் போல ஐக்கியம் வளர உறவைத் தந்தானே வரும் ஆறு வருடங்கள் இவன் அமைச்சில் இருப்பானே.. நம் கஸ்டம் கவலை எல்லாம் நீங்க உதவிகள் செய்வானே... யாரோடும் நோகவில்லை... ஊர் விட்டும் போகவில்லை இரவும் பகலும் எங்களுக்காக தூக்கம் துறந்தானே... ஜாதி போதம்... பாடல் வரிகள் :- மதியன்பன் 24.04.2010 வாடா மாப்பிள வாழப்பழத் தோப்புல.. எனும் இசையில் மூணு வெத்தில ஜெயிச்ச நாங்க உச்சில ஆடிப்பாடி பாடி மகிழலாமா... ஆழும் அரசில அமைச்சுப் பதவி கிடைச்சுது உன்ன நாங்க மறக்கலாமா.. சத்தியந்தான் பலேபலே ஜெயஜச்சிருக்கு பலேபலே நாங்க இனி பலே பலே ஒதுங்கக் கூடாது இனங்கள் பல பலேபலே இணைஞ்சிருக்கு பலேபலே நாங்க இனி பலேபலே பிரியக் கூடாது எப்டி எப்டி... அப்டி அப்டி...
மூணு வெத்தில... கூட்டம் பல கூட்டினோம் கொள்கை தனை ஊட்டினோம் கூடிக் கூடி மக்கள் நீங்க வோட்டுப் போட்டீங்க.. திட்டம் பல தீட்டினாங்க.. தேடித் தேடி திட்டினாங்க ஆட்டம் போட்ட அணிக ளெல்லாம் அடங்கிப் போனாங்க கண்ணோடும் பலேபலே கல்போடும் பலேபலே கலந்தாடும் பலேபலே ஹிஸ்புல்லாஹ்வே.. ஏப்டி எப்டி... அப்டி அப்டி... மூணு வெத்தில.. சத்தியத்தைச் சொன்னோம்க.. சமத்துவத்தை வளர்த்தோங்க புத்தம் புதிய உலகத்திற்கு வித்துப் போட்டோம்க நித்திரையைத் துறந்தோம்க நிம்மதியை இழந்தோங்க வெற்றி வாகை சூடிக்கிட்டு வீடு வந்தோங்க.. உயிரோடும் பலேபலே உணர்வோடும் பலேபலே உறவாடும் பலேபலே ஹிஸ்புல்லாஹ்வே.. ஏப்டி எப்டி... அப்டி அப்டி... மூணு வெத்தில.. பாடல் வரிகள் :- மதியன்பன் 24.04.2010



No comments:

Post a Comment