கட்டுரை

சண்முகா வித்தியாலய அபாயா விவகாரம் ..! இந்து மதத்தை கேவலப்படுத்தும் இனவாதிகள் 


(மதியன்பன்)


ஒரு பெண் ஆடைகளினால் மறைக்க வேண்டிய பகுதிகளில் தலை முடியும் அடங்கும். இதை இஸ்லாம் மார்க்கம் மாத்திரம் சொல்லவில்லை. கிறிஸ்தவம் மற்றும் இந்து சமயங்களும் போதிக்கின்ற பெண்களின் கண்ணிய உடைக்கலாச்சாரம் இதுதான். 


கிறிஸ்தவ 'கண்ணியாஸ்திரிகள்' அணியும் ஆடை என்பது முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவுக்கு நிகரானது. அதேபோல்தான் இந்து சமயத்தின் பிறப்பிடமான வட இந்தியாவில் இன்றளவும் பெண்கள் தலையை மறைத்து முக்காடு இட்டுத்தான் உடை அணிகின்றனர். இதற்கு இந்திய முன்னாள் ஜனாதிபதி 'பிரதீபா பட்டேல்' ஒரு சிறந்த உதாரணமாகும். 


தற்போது பெண்களில் பெரும்பாண்மையானவர்கள் அணியும் நவீன உடைக் கலாச்சாரங்கள் மதங்கள் கற்றுக் கொடுத்தவை அல்ல மாறாக வயிற்றுப் பிளைப்புக்காக பெண்களை வைத்து கூத்தாடும் சினிமாக்காரரர்கள் ஏற்படுத்தி கொடுத்தது. இவ்வுடைக் கலாச்சாரத்தினால் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான். 


பெண் சுதந்திரம் என்ற பெயரில் இன்று பெண்களின் ஆடைக் குறைப்பினை ஊக்குவிக்கும் பல கயவர்கள் சமுக மட்டத்தில் பல இடங்களில் உலா வருகின்றனர். ஆனால், ஒழுக்கத்தை போதிக்க கூடிய ஒரு பாடசாலை அதுவும் ஒரு பெண் அதிபரைக் கொண்ட பாடசாலை நிர்வாகம் இவ்வளவு கீழ்த்தரமான வன்மத்தைக் கொண்டிருப்பது பாடசாலையில் கற்பிக்கப்படும் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் அதன் உள்விவகாரங்களில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

ஏனைய மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதம் பாலியல் சம்பந்தமான விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை மறுக்க முடியாது. அவர்களின் கோயில் சிற்பங்கள், பண்டிகைகள் உருவாகிய பின்புலங்கள், லிங்கம் போன்ற வழிபாட்டு சின்னங்கள் போன்றவை இவற்றுக்கு சிறந்த உதாரணங்களாகும். ஆனால் அவை பற்றி ஏனைய சமயத்தவர்கள் விமர்சனம் செய்ய முடியாது. காரணம் அதற்குரிய தத்துவங்கள் என்ன..? என்பதை இந்து மதத்தை படித்தவர்கள்தான் அறிவார்கள். 

இஸ்லாமிய மார்க்கமும் 'நீங்கள் ஏனையவர்களின் கடவுள்களைத் திட்டாதீர்கள். அவ்வாறு நீங்கள் திட்டினால் அவர்கள் அல்லாஹ்வை வரம்பு மீறி திட்டுவார்கள்.' என்று ஏனையவர்களின் கடவுள்களை விமர்சிப்பதை தடை செய்கின்றது. 


இந்திய சினிமாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் ஆடைக்கலாச்சாரமானது பெண்களுக்குரிய பாதுகாப்பினையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சினிமா மோகம் பிடித்த இளம் பெண்கள் ஆடைகள் விசயத்தில் மாத்திரமல்ல தங்களை அழகு படுத்திக் கொள்ளும் விசயத்திலும் உடல் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் விரயம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.


காமசூத்திராவிற்கு அங்கீகாரம் கொடுத்த சினிமாவுக்கும் அந்த சினிமாவே கெதி என்று கிடக்கும் ஒரு சமுகத்திற்கும் பெண்களின் கண்ணியம் பற்றி அலட்டிக் கொள்ளவேண்டிய தேவை இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சீரழிந்த கலாச்சாரத்தை அடுத்தவர்கள் மீது திணிப்பது என்ன வகையில் நியாயம்? 


குறிப்பிட்ட சில காலத்திற்கு முன்புவரை நமது நாட்டில் குட்டைப் பாவாடை அணிவது விபச்சாரிகளின் அடையாளமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அனேகமானவர்கள் சர்வசாதாரணமாக அணிகின்றனர். பகலில் கூந்தலுக்கு மல்லிகைப் பூ வைத்தால் குடும்ப பெண் என்றும் அதே மல்லிகைப் பூவை இரவில் வைத்து சென்றால் அவள் விபச்சாரி என்றும் இன்றளவிலும் தமிழ் நாட்டில் சில இடங்களில் பெண்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். 


இவை அனைத்தையுமே கற்றுக் கொடுத்தது சினிமாவே தவிர மதங்கள் அல்ல. கடந்த சில வருடங்களுக்கு முன் புதுடில்லியில் ஒரு இளம்பெண் ஓடும் பஸ்ஸில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 'இவ்வாறான சம்பவங்களுக்கு பெண்களின் ஆடையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இஸ்லாமிய பெண்கள் உடுத்தும் அபாயாவானது பெண்களுக்கு கண்ணியத்தைக் கொடுக்கின்றது' என்று இந்துக்களின் புனிதத்தலமாக கருதப்படும் மதுரை ஆதீனத்தின் தலைவர் 'அருணகிரிநாதர்' சொல்லியிருந்தார்.

அதேபோல் பாபர் மசூதியை இடிப்பதற்கு காரணமாயிருந்த 'அத்வாணி' கூட அரபுநாட்டு குற்றவியல் சட்டங்கள் இந்தியாவில் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்து மதத்தை படித்தவர்கள் இவ்வாறு இஸ்லாத்தை பற்றி விளங்கியிருக்கும்போது இந்து மதத்தை பாதுகாக்கின்றோம் என்று கிளம்பியிருக்கும் அரைவேக்காட்டு இனவாதிகளும் அதற்கு துணை போகும் பாடசாலை நிர்வாகமும் மிகவும் கண்டிக்கத்தக்கவர்கள்.


சண்முகா வித்தியாலயம் இருக்கும் அதே இடத்தில்தான் கோணேஷ்வரா கோயிலும் இருக்கின்றது. அதற்கு வரும் பார்வையாளர்களில் அபாயா போட்ட பெண்களும் பௌத்த மதத்தைச் சார்ந்த பெண்களும் வருகின்றனர். ஏன் அவர்களையெல்லாம் உங்கள் கலாச்சார? உடை அணிந்து வர சொல்வதில்லை.?; கோவிலுக்குரிய வருமானம் பாதிக்கப்படும். வருமானம் கிடைக்குமானால் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க முடியும் என்பது இந்து மத பாதுகாவலர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இனவாதிகளின் கொள்கையா..?


இன்று அமெரிக்கா, ஐரோப்பிய தேசங்களில் குறிப்பாக பெண்கள் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை நன்கு விளங்கிக்கொண்டும் இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் கண்ணியத்தை நன்கு உணர்ந்து கொண்டும் அதன்பால் விரைந்து வருவதற்கு இஸ்லாமிய பிரச்சாரகர்களைவிட இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள்தான் காரணம். 


ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பாடசாலையிலேயே கவர்ச்சியான ஆடையுடன் வந்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் அவர்கள் பாடம் படிப்பார்களா அல்லது பாலியலின் பக்கம் திசை திருப்பப்படுவார்களா என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அதிபரும் அதனோடு தொடர்பு பட்டவர்களும் சிந்தனையற்றிருப்பது கவலை தரக்கூடிய விடயமாகும்.


இன்றைய இளம் சமுதாயத்தினர் சீரழிந்து சின்னா பின்னமாகிப் போவதற்கு பெண்களின் அரைகுறை கவர்ச்சி ஆடைகள் தான் காரணம் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதல்ல அண்மைக்கால சம்பவங்களே இதற்கு நல்ல உதாரணங்களாகும்.


உடலினை வெளிக்காட்டும் பெண்களின் கவர்ச்சி ஆடையினால் கவரப்பட்டு வக்கிரப் புத்திக்கு உள்ளாக்கட்டவர்களினாலேயே வித்யா, சீமா, சேயா. ஆசிபா போன்ற இளஞ் சிறுமிகள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை இப்போது எல்லோரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.


சண்முகா வித்தியாலயத்தில் நடந்த பிரச்சினை ஆடை விடயத்தில் மட்டும் சம்மந்தப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்ற இனவாதிகளின் செயற்பாடாகவே தெரிகிறது. 


அத்தோடு தமிழ் தலைவர்கள் வாய் பொத்தி மௌனிகளாக இருப்பதும் இப்போது இரா. சம்பந்தன் அவர்கள் முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை கட்டினால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று பொறுப்பற்ற விதத்தில் கருத்துத் தெரிவித்திருப்பதும் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.


சாரி கட்டுவதுதான் தமிழ் கலாசாரமென்றால் அதனை யாரும் மறுக்க முடியாது மறுக்கவும் கூடாது அது அவர்களது சுதந்திரம். ஆனால் பண்டைய காலத்து பெண்கள் கட்டியது போலா இப்போது பெண்கள் சாரி கட்டுகிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதை அடுத்தவர்கள் மீது திணிப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.


எப்படி இந்து மதப் பெண்களுக்கு சாரி கட்டுவதற்கு உரிமை இருக்கிறதோ அவ்வாறே முஸ்லிம் பெண்களுக்கு அவர்களது கலாசாரத்திற்கேற்ப அபாயா அணிவதற்கு உரிடை இருக்கிறது என்பதையும் அந்த அதிபரும் அவரோடு கைகோத்துள்ளவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.



சண்முகா வித்தியாலயம் என்பது இந்துக்களின் கோவில் அல்ல. அது அரசாங்கப் பாடசாலை பாடசாலைக்கு கற்பிக்க வருகின்ற ஆசிரியர்கள் ஒழுக்கமான கௌரவமான ஆடைகளை அணிந்து வரவேண்டும் என்பதே அரசாங்க அறிவுறுத்தலாகும் அதனையே அந்த ஆசிரியைகளும் செய்திருக்கிறார்கள் இதனை பொதுப் புத்தியுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.


பர்தா அணிந்து வந்த ஆசிரியை மாணவர்களுக்கு பர்தா பற்றி பாடம் நடத்தவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் அதிபரும் அதனோடு தொடர்புடையவர்களும் வேறு ஒரு நிரலின் கீழ் செயற்படுகிறார்கள் என்பதும் தெட்டத் தெளிவாகின்றது.

=======================================================================


தண்ணீர்த் தகறாறும் தடுமாறும் தலைமைத்துவமும் - சாதிக்கப் போவது என்ன...?

(மதியன்பன்)

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக எதனைப் பெற்றுக் கொள்ள முனைந்தார்களோ அதனை அரசியல் ரீதியாக பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களில் பெரும்பாலானோர் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

ஆனால், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசில் சரணாகதி அரசியல் செய்து கொண்டிருப்பதால் தமிழ் மக்களிடத்தில் வெகுவாக ஆதரவினை இழந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. 

தமது இலக்குகளை மறந்தவர்களாகவும், குறைந்தபட்சம் தமக்கு வாக்களித்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு காத்திரமான முன்னேற்பாடுகளை செய்யத் தவறியவர்களாகவும் மாறி தமது வாக்கு வங்கிளை எவ்வாறேனும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது குறுக்கு வழிகளை கையாளத் துவங்கியிருக்கின்றனர்.

அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமலையில் பிரபல இந்து மகளிர் கல்லூரியொன்றில் ஏற்பட்ட தனிப்பட்ட ரீதியான பிரச்சினை யொன்றை பாடசாலை நிர்வாகம் மக்கள் மயப்படுத்திய போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இந்நாட்டின் பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்கள் பக்க சார்பாகவும் இனத்துவேசத்தை வளர்க்குமுகமாகவும் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். 

இக்கருத்தானது சரிந்து வரும் தமது வாக்கு வங்கியை தூக்கி நிறுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமான கருத்தாகவே புத்தி ஜீவிகளால் பார்க்கப்பட்டது.

அந்த வரிசையில் இன்று (07.09.2018) அனாமதேய சுவரொட்டிகள் வாயிலாகவும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் ஹர்தால் ஒன்றுக்கு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் புதிதாக பாராளுமன்றம் சென்ற திரு.வியாழேந்திரன் (அமல் ஆசிரியர்) அவர்கள் செயற்பட்டதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. யோகேஸ்வரன் திரு. அரியநேந்திரன் போன்றோர் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களிலும் ஏனைய பொது இடங்களிலும் வளர்ந்து வரும் தமிழ் முஸ்லிம் உறவினை சீர்குலைக்கும் வகையில் துவேசக் கருத்துக்களை வெளிப்படையாக கூறி வரும் நிலையில் தற்போது புதிதாக இணைந்த மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் திரு. வியாழேந்திரன் அவர்களும் இணைந்து கொண்டுள்ளார் என்பதனையே இது காட்டுகின்றது.

ஒரு குறிப்பிட்ட தனிநபரின் தொழில் விவகாரம் ஒன்றினை மக்கள் மயப்படுத்தி அதை ஒரு சமூகப் பிரச்சினையாக சித்தரித்து தங்களை தமிழ் மக்களின் பாது காவாலர்கள் என காட்டிக்கொள்வதற்கான ஒரு யுக்தியே நடந்து முடிந்த இந்த ஹர்தாலுக்கான அழைப்பாகும். இதனை நன்கு உணர்ந்து கொண்ட தமிழ் மக்களில் பெரும் பாலானோர் இந்த ஹர்தாலை உதாசீனப்படுத்தியிருந்தனர்.

தனிநபர் பிரச்சினை யொன்றை கையாள்வதற்கு இந்நாட்டில் காவல்துறை, சட்டத்துறை போன்ற பல்வேறு வழிமூலங்கள் இருக்கின்றன. மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாக கட்டமைப்புக்கள் பெரும் பாலும் தமிழ் அதிகாரிகளிடமே இருக்கின்றன. குறித்த தண்ணீர் ஆலையும் முழுக்கக முழுக்க தமிழ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே இருக்கிறது. 

எனவே, இப்பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கோ அல்லது சட்ட ரீதியாக தீர்ப்பதற்கோ வழிவகைகள் தாராளமாக இருக்கும் போது ஹர்தால் எனும் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன என்பதையும் நாம் புரிந்தாக வேண்டும்.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் அடாவடித்தனங்களும் பரவலாக இடம்பெறறுவரும் நிலையில் இனவாதத்தையும் இனமுறுகலையும் தோற்றுவிக்கும் இவ்வாறான செயற்பாடுகள் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

அண்மையில் புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் இன்பராசா அவர்களின் முஸ்லிம்களிடம் ஆயதம் இருக்கிறது அவையனைத்தும் களையப்பட வேண்டும் என்ற கருத்தும் இந்த அரசியல் பின்னணியிலேயே இடம் பெற்றுள்ளதா எனவும் சந்தேகிக்படவேண்யுள்ளது.

அரசியலையும் தங்களின் பதவிகளையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒற்றுமையாக வாழும் சமூகத்தை பிரித்தாள நினைக்கும் இவ்வாறான அரசியல் வாதிகளை மக்கள் ஓரங்கட்டவேண்டும்

இவ்வாறானவர்களின் சுயரூபங்களை சிவில் சமூகம் நன்றாகப் புரிந்து கொண்டால் மாத்திரமே எதிர்காலத்தில் இனங்களுக்கிடையிலான நிரந்தர சமாதானத்தையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுக்க முடியும்.

=============================================================================================


தந்திரமாகக் களையப்படும் முஸ்லிம்களின் வெட்க உணர்வு...
(மதியன்பன்)


இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை, நம்பிக்கைக் கோட்பாடுகளை அசைக்க முடியாமல் திணறுகின்ற மேலைத் தேய சக்திகள் மற்றும் அதன் அடிவருடிகள் தற்போது உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் கலாசாரத்தின் மீது கைவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, இஸ்லாம் ஊக்குவித்த 'வெட்க உணர்வு' இன்று பல்வேறு வடிவங்களில் முஸ்லிம்களிடமிருந்து களையப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சினிமா, சின்னத்திரை, சீரியல், பாடல் போட்டி நிகழ்ச்சி யென பல்வேறு மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீர்கேடு இன்று முஸ்லீம்களையும் உள்ளீர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டு அதில் அவர்கள் சில வெற்றிகளையும் கண்டு கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்றாகத்தான் மேற்படி மஹாராஜா நிறுவனத்திற்குச் சொந்தமான சக்தி ரீவி நடாத்தும் பஞ்ச தந்திர நிகழ்ச்சியையும் பார்க்க வேண்டியிருக்கிறது. 

காரணம், அந்ந நிகழ்ச்சியைப் பொறுத்த வரை அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கலைத்துறையினையும் ஊக்குவிப்பதற்காக நடிப்பினையும் ஒரு அங்கமாக உள்வாங்கியிருக்கிறது. இதன் மூலம் மாணவிகளின் நடிப்புத் திறமை வெளிக்காட்டப்பட்டாலும் இஸ்லாமிய வரையறைக்குள் வாழுகின்ற மாணவிகளின் வெட்க உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. 

அண்மைக்காலம் வரை பஞ்ச தந்திரம் நிகழ்ச்சி என்பது பெரிதான பேசு பொருளாக இல்லாமல் இருந்தாலும் இறுதிப் போட்டிக்கு ஒரு முஸ்லிம் பாடசாலை தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அதனை வைத்து தனது வியாபார நோக்கத்தோடு இஸ்லாத்தை விட்டும் முஸ்லிம்களை தூரமாக்கும் கருவியாகவும் அதனைப் பயன்படுத்துகின்றார்களோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. அதற்கு நமது புத்தி ஜீவிகளும் பெற்றோர்களும் உடந்தையாக இருப்பதுதான் இங்கு ஊன்றி கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இனி விடயத்திற்கு வருவோம்.

கடந்த 04.10.2018 அன்று காத்தான்குடி பிரதான வீதியை மறித்து வீதி ஓரங்களில் மீரா பாலிகா மஹாவித்தியாலய மாணவிகள் ஆசிரியைகள்; பெற்றோர்கள் நின்று கொண்டிருக்க மேற்படி பஞ்ச தந்திர நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். 

இந்ந நிகழ்வில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் முகங்களை திறந்து கொண்டு நின்றமையும் மாணவிகள் வெயிலில் நிற்க முடியாமல் மயங்கி விழுந்தமை பற்றியுமே சமூக வலைத்தளங்களில் கருத்துப் பரிமாறல்கள் நடந்து கொண்டிருக்கிறதே தவிர எவ்வளவு பெரிய சூழ்ச்சிக்குள் நமது முஸ்லிம் சமூகம் மாட்டிக் கொண்டுள்ளது என்பதை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

சக்தி டீவியைப் பொறுத்த வரையில் பல்வேறுபட்ட போட்டி நிகழ்ச்சிகளை அவர்கள் காலங்காலமாக நடாத்தி வருகிறார்கள் ஓவ்வொரு போட்டியிலும் ஏதோ ஒரு அணி அல்லது ஒரு குழு வெற்றிபெறத்தான் செய்கிறது.

அந்த வகையில் காத்தான்குடியின் பிரபல பெண்கள் பாடசாலையான மீராபாலிகா வித்தியாலயம் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருந்தாலும் இன்னும் போட்டி முற்றுப் பெறவில்லை.

இது வரை பல சுற்றுக்களைத் தாண்டி வந்த அந்த மாணவிகளின் திறமையைப் பாராட்டி கௌரவிப்பதில் அக்கறை காட்டும் பாடசாலை நிர்வாகம் அந்த கௌரவிப்பும் வெற்றி கொண்டாட்டமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இஸ்லாமிய வரம்பையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். 

அந்த வகையில் இந்த விடயத்தில் மீரா பாலிகா வித்தியாலய நிர்வாகம் நடந்து கொண்டது சரியா என்பதையும் நாம் ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

இறுதிச்சுற்று ஒன்று மீதமிருக்கும் நிலையில் இவ்வாறானதொரு ஊர்வலத்தின் அவசியம் ஏன் ஏற்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களினால் (சக்திடீவி) இவ்வாறான ஊர்வலத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா..?

இவ்வாறான ஊர்வலத்தின் போது பேண்ட் வாத்தியம் மற்றும்; ஆண்கள் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் மாணவிகளை வீதியில் நிறுத்தி காட்சிப் பொருட்களாக காட்டுவதற்கு அதற்கு அனுமதி வழங்கியது யார்..?

பெண்கள் கலந்து கொள்ளும் நமது திருமண நிகழ்வில் கூட புகைப் படத்தை தடை செய்யும் நாங்கள் எந்த வொரு கட்டுப் பாடுகளும் இல்லாமல் ஊர்வலத்தில் சென்ற மற்றும் வீதியில் அணிவகுத்து நின்ற மாணவிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு வழிசெய்து கொடுத்த பாடசாலை நிர்வாகத்தின் செயல் சரியானதா..?

05 ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இதே பாடசாலையில் வயதுக்கு வந்த பெண் பிள்ளகைளை சினிமா பாடலுக்கு ஆடவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்ட பாடசாலை நிர்வாகத்தினர் இந்த விடயத்திலும் பொறுப்பில்லாமல் நடந்து இதனை செய்து முடித்திருப்பதன் பின் புலம் என்ன..

இது விடயத்தில் உலமாக்கள் புத்தி ஜீவிகள் அரசியல் வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது...?

இவ்வாறாக பல கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம்.

எது எவ்வாறிருப்பினும் தேவையாக இருந்தால் பாடசாலை நிர்வாகம் பெண் பிள்ளைகளின் கலாச்சார ஒழுக்க விழுமியங்கள் கருதி பாடசாலை மண்டபத்திலோ அல்லது பாடசாலை மைதானத்திலோ ஏனைய நிகழ்வுகள் போல் நடாத்தி பரிசில்கள் வழங்கி அவர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தியிருக்கலாம்.

இதனை விடுத்து வயதுக்கு வந்த மாணவிகளை வீதியோரங்களில் நிறுத்தி அடுத்தவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக்கியதை எந்தவொரு ஈமானுள்ள இஸ்லாமியனாலும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

இஸ்லாமிய நகரம், நாங்கள்தான் முன்மாதிரி என்று மார் தட்டிக் கொள்ளும் நாம் இது போன்ற விடயங்களில் வேறு சிலரிடமிருந்து சில முன்மாதிரியினை கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

01 கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இதே சக்தி டீவி நடாத்திய பாடசாலை மட்டங்களுக்கிடையிலான விவாதப் போட்டி யொன்றில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியன் ஆனபோது அந்தப் பாடசாலை நிர்வாகம் எப்படி அந்த வெற்றியை கொண்டாடியது என்பது நமக்கு ஒரு பாடமாகும்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாடசாலைக்குள் வைத்தே பரிசுப் பொருட்கள் வழங்கி மிக அமைதியாகவும் இஸ்லாத்திற்கு பொருத்தமான முறையிலும் அதனையவர்கள் கொண்டாடினார்கள்.

ஏன் அந்த மாணவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று விழா எடுக்கவில்லை என்று அங்கு கற்பிக்கும் ஒரு சிரேஸ்ட ஆசிரியரிடம் வினவிய போது அந்தக்குழுவில் மூன்று பெண் பிள்ளைகள் இருந்ததால் நமது கலாச்சாரம் கருதி அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்வதை எமது பாடசாலை நிர்வாகம் தவிர்த்துக் கொண்டது என அந்த ஆசிரியர் பொறுப்புடன் பதிலளித்தார்.

02 . தனது கலாசார உடையான அபாயாவுக்கு தடைவந்தபோது அதனை துணிவுடன் எதிர் கொண்ட திருகோணமலை சன்முகா வித்தியாலயத்தின் நான்கு ஆசிரியைகளின் துணிவும் இஸ்லாமியப் பற்றும் நமக்கு மற்றுமொரு முன்னுதாரணமாகும்.

இந்த இடத்தில் சக்தி டீவியின் அண்மைக்கால ஓரவஞ்சனையான செயற்பாடுகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக 

கண்டி திகனையில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் பற்றி எதனையுமே அவர்கள் கண்டு கொள்ளாமை.

பல்வேறு இடங்களிலும் முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்கள் தாக்கப்பட்டு தீக்கரையாக்கப்பட்ட போதும் குறிப்பிடத்தக்க அளவு முன்னுரிமை கொடுத்து அச்செய்திகள் ஒளிபரப்புச் செய்யப்படாமை. 

03. முஸ்லிம் அரசியலை கொச்சைப்படுத்தும் விதத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளை அழைத்து செய்யப்படும் நேர்காணல் நிகழ்ச்சிகளில் அவர்களையே மோதவிட்டு அதில் குளிர் காய்ந்தமை.

04. நாட்டில் நடக்கின்ற ஊழல்களை செய்தியறிக்கையில் இடையில் ஒலிபரப்புச் செய்யும் போது முஸ்லிம்கள் என்றால் அதற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து தலைப்புச் செய்தியாக வெளியிடுகிறமை.

இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.


இந்த விடயத்தில் நாம் சக்தி ஊடகத்தை மாத்திரம் குறை கூறாமல் நமது தலைகளிலே நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட செயலுக்காகவும் வருந்த வேண்டியுள்ளது. நமக்கு கிடைக்கின்ற வெற்றிகளும் பாராட்டுக்களும் இஸ்லாததையும், நமது கலாசாரத்தையும் விட்டுக் கொடுத்துத்தான் பெற வேண்டுமாக இருந்தால் அவ்வாறான வெற்றிகளும் பாராட்டுக்களும் நமக்கோ அல்லது நமது மாணவ மணிகளுக்கோ எந்தக் காலத்திலும் தேவையில்லாத ஒன்றாகும்.

நமது ஊரின் இரு கண்களாகத் திகழும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் உலமா சபை மற்றும் தஃவா அமைப்புக்கள் இவ்வாறான விடயங்களில் கூடிய கவனம் எடுத்து கண்காணிக்கவும் இஸ்லாமிய வரையறை;குள் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஆலோசனை வழங்கவும் முன்வரவேண்டும். 

இறுதியாக,

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் திட்டமிட்டு கேவலப்படுத்த நினைக்கும் அந்நிய சக்திகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்று பல்வேறு மட்டத்திலும் யோசிக்க வேண்டிய தருணத்தில் 100 வீதம் முஸ்லிம்கள் என்று பெருமை கொள்ளும் நமதூரில் இவ்வாறான கலாச்சார சீரழிவுச் செயல்களுக்கு அனுமதி கொடுப்பது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும். இதில் பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் செயற்படுவது தற்போதைய காலத்தின் தேவையாகும்.

போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்கு அதிக பிரயத்தனம் எடுத்துக் கொள்ளும் நாம் கலாச்சார சீர்கேடும் மிகப் பெரிய போதை என்பதை மறந்து விடக்கூடாது.

நமது பிள்ளைகளிடத்தில் வெட்க உணர்வை வளர்ப்போம். எந்தத் தந்திரங்களுக்கும் அகப்பட்டுக் கொள்ளாமல் எதிர் கால சந்ததிகளை வளர்ப்போம். அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்வோம்.





No comments:

Post a Comment