நாய் கிண்டிய
மடுவுக்குள்
நட்டிவைத்த மரங்களாய்
நமது தலைவர்கள்...
அடுப்பங்கரைப் பூனையாய்
அவர்கள்
அசந்து தூங்குகிறார்கள்...
பூனையும் - நாயும்
படுத்துறங்கும் இடமாய்
பரிணமித்துப் போனது
நமது தேசிய கட்து கட்சி..
எதையுமே
கண்டு கொள்ளாத
குறுட்டு வெளவால்களாய்
அவர்களும் - நாங்களும்..
அப்போதும் இப்போதும்...
தண்ணீரில்
தலை துவட்டிய எருமைகளாய்
இன்னும் அவர்களோடு
இணைந்;திருக்கிறோம்
எதையுமே கண்டு கொள்ளாமல்..
சிங்கத்தின் கூட்டுக்குள்
சிக்கிய மானினமாய்..
தினமும்
சிதைக்கப்படுகிறது நம் சமூகம் !
பொறிக்குள் அகப்பட்ட
எலிகளாய்
குரல்வளை நசுங்குகையில்
ஆட்சி நிலைப்பதற்கு
ஆசி வழங்குகிறது நமது தலைமை..
பற்றியெரியும்
பள்ளிவாயல்களை
அறிக்கைகள் மாத்திரம்
அணைத்துவிடாது..
இருந்தபோதும்
வாலாட்டும் நாய்களுக்கு
தாலாட்டும்
ஒரு வக்கற்ற சமூகமாக
மாறிப்போனோம் நாம்...
(இக்கவிதை யாரையும் தாக்குவதற்கல்ல..)
இது யாரையும் தாக்குவதற்கில்லை என்பது உண்மை.....
ReplyDeleteஇதைப் படித்தும் அவன் தாக்கம் பெறவில்லையென்றால்??????
அவன் அழிந்து போக நான் சாபமிடுகிறேன்.........