காத்தான்குடி இஸ்லாமிய கலாசார மத்திய நிலையம் நடத்திய போதை ஒழிப்பு தின கவியரங்கில் பாடிய கவிதை
– மதியன்பன் -
தலைமை - பாவலர் சாந்தி மொஹிதீன்
வருடம் - 2006
அஸ்ஸலாமு அலைக்கும்
குடிக்காதே...! என்று சொல்ல
ஒரு கூட்டம்
கூடியிருக்கிறது இங்கே,
நான் சொல்கிறேன்.
குடி
குடித்து விட்டுத்தானே
எழுதுகிறது பேனா மையை ...
குடித்துவிட்டுத்தானே
மழை பொழிகிறது மேகம் நீரை...
குடித்து விட்டுத்தானே
உயிர் வாழ்கிறது நுளம்பு குருதியை...
இப்படி,
எல்லாமே குடித்திருக்க...
நீ மட்டுமேன் குடிக்கக் கூடாது,
குடி,
அன்பெனும் மதுவைக் குடி -
அறிவெனும் சாராயம் குடி.
ஆண்மீகம் எனும் ஞானம் குடி.
இப்படி -
அழகான குடிகள்
அணிவகுத்திருக்க
எதற்காகத் தேர்ந்தெடுத்தாய்
இந்த
இழிவு தரும் குடியை....
தோழா!
கொஞ்கம் கொடு காதை
இப்போது சொல்லப் போகிறேன்
போதை தரும் தீதை!
இதவெல்ல உன்னுடைய பாதை!
ஒரு புட்டி போதும்
உன் ஆறறிவை ஐந்தறிவாக்க...
வெற்று போத்தல்கள் கூட
உருப்படியாகத் தோன்றும்
நீ தான்
உடைந்து சிதிலங்களாகி
உருக்குலைந்து போவாய்...
போதை தொட்டிக்குள்
புகுந்து பார்!
ஒரு பைத்திய காரனைப்போல்
நீ மாறிப் போவாய்...
இல்லை, நாறிப் போவாய்...
அன்னப் பறவை
பாலையும் நீரையும்
பகுத்தறிகின்றது,
குடி காரனோ...
சாராயத்தைக் கூட
தண்ணியென்று,
தப்பாகச் சொல்கிறான்
குடித்துப் பார்!
ஒரு ஆலமரமாய்,
நிமிர்ந்து நின்ற நீ
சிறிய நாணலைப்போல்
கூனிக் குறிகிப் போவாய்;.
சிவந்த உதடுகளில்
நிரந்தரமாய் படியும்
போதையின் கறுப்பு முத்தம்
ஆச்சர்யக் குறியாய்
எல்லோரையும் அசத்திய நீ...
ஒரு கேள்விக் குறியாகி
கேலிச் சித்திர மாவாய்....
குடித்துப்பார்!
உனது விழிகளின்
வெண்ணிறத்தில்
இரத்தச் சிவப்பு இடம் பெயரும்!
உன்னைத் தாங்கும் சக்தி
உன் -
கால்களுக்கு இராது!
தள்ளாடி நடப்பாய்...
ஒரு, காகித ஓடம் போல...
காதலில் தோல்வி என்று
தாடி ஏந்துகிறாய்...
தப்பில்லை
சாடி ஏந்துவதைத் தான்
சரியில்லை என்கிறேன்.
இந்த போதையால்
எத்தனை பேதைகளின் வாழ்வு
வாதை கண்டிருக்கிறது!
கோதையின் கழுத்தில்
தாலியைக் கட்டி விட்டு
நமமில் எத்தனை பேர்
இன்றும்
போதையுடன்
குடும்பம் நடாத்துகிறார்கள்!
அழகான புன்னகையை
உற்பத்தி செய்யும் உன் உதடுகள்
கோணல் மாணலாகி
கோரமாகும்,
ஆற்றொழுக்காய்ப் பேசும் நீ!
ஒரு -
திக்குவாய்க் காரணைப் போல்
வார்த்தைகளைக் கொலை செய்து
உளறிக்கொட்டு வாய்!
தூசன வார்த்தைகள்,
போதை தேசத்தின்
தேசிய மொழிகளாகும்
சாராயம்
அந்தத் தேசத்தின்
தேசிய பானமாகும்,
போதை -
வெட்கத்தை விரட்டியடிக்கும்
நீ...
நிர்வான ஆடை தரிப்பாய்
விளையாட்டாய் பழகிய
போதைப்பழக்கம்
வாழ்வின் எல்லை வரை
உன்னோடும், உன் உயிரோடும்,
விளையாடிக்கொண்டிருக்கும்
தோழனே...!
போதை, நீ போகக்கூடாத பாதை
கெஞ்சம் கொடு காதை
நான் சொல்லப்போகிறேன்
போதையின் தீதை!
கஞ்சாவை அபினை
உன் உதடு-
காதலித்தல் தவறு!
நெஞ்சாற நீ
உன் உடம்பில்
நஞ்சினை ஏற்றிக் கொள்கிறாய்.!
படிப்படியாய் தூளை நீ
பாவித்து வருகிறாய்!
ஒருநாள்
பொடிப்பொடியாய்
பொசுங்கிப்போவாய்!
பீடி சிகரட்டை
பிரியமாய் ஊதுகிறாய்!
ஒருநாள்
நாடி தளர்ந்து நீ
நலிந்து போவாய்!
லேகியம்
எனும் சாத்தான்
உனை விட்டு
லேசிலே போக மாட்டான்!
வேகியே உன் உடம்பு
வெந்து போகும்!
சாராயம்!
தாராளமாய் உன்னை
தவணைமுறையில் கொன்றுவிடும்!
ஆராய வேண்டாம்
அது உனக்கு தீது தோழா!
மழை பெய்தால்கூட
நீ,
மதுக்கடை பக்கம் ஒதுங்கல்
பிழையெனச் சொல்வேன்
போதை
நீ செல்லக் கூடாத பாதை
தொிந்து கொள்
அதன் தீதை