வட்டத்தின் ஏற்பாட்டில் இன்று
(24.07.2016) கொழும்பில்
இடம்பெற்ற மலேசிய சாந்த
கலா அவர்களின் 'கரைசேராத
படகு' என்ற கவிதை நூல்
வெளியீட்டு விழாவில்அடியேன் பாடிய வாழ்த்துக் கவிதை
மதியன்பன்
கொழும்பு வீதியில்
குரும்பை ஒன்று குடித்தது போல்
குற்றால அருவியில்
குளித்து விட்டு வந்தது போல்
குழுமை
என் இதயத்துள் குடியிருக்கிறது.
இது
இலக்கிய நிகழ்வென்பதால்
இளமை இனிமை
இவை இரண்டும்
என் இதயத்தை
இலேசாக கிள்ளிவிட்டுச் செல்கிறது.
கரை சேராத படகொன்றை
கன்னியா குமரிக்
கடல் வழியாக
கட்டியிழுத்து வந்திருக்கின்றார் கலா
இப்போது
தாமரைத் தடாகத்தில் தரித்து நிற்கிறது
கலா, கவிதை, கரைசேராத படகு
எதைப் பற்றி நான் பாட
முக்கனியில்தான்
முழுச்சுவை இருக்கிறது
ஆனதினால்;
கலாவேடு படகில்
கவிதைப் பயணம் செய்வோம்.
நான்
மலேசியாவில் பார்த்த நிலா
இலக்கிய உள்ளங்களின்
இதய நிலா , இளைய நிலா
கலையுலகில்
உலாவரும் நிலா இந்தக் கலா
இது
நல்லதொரு
கருத்துள்ள நிலா
கொஞ்சம் வெயில்பட்டு
கறுத்துள்ள நிலா..
இந்த
நிலாவுக்குள்தான்
ஒரு பூகம்பம் புதைந்து கிடக்கிறது
இதனை
கரைசேராப் படகில் காணக் கிடைக்கிறது
வாசித்துப் பாருங்கள்
கலாவின்; கவிதைகளை...
அவை
நயாகராவில் நனைவதுபோல்;
இனிய
நந்தவனத்தில் நடப்பது போல்
நமக்குள்
நளினம் நர்த்தனமாடும்.
காந்தம் போல் கவர்ந்திழுக்கும்
கருத்துள்ள கவிதைகளை
சாந்தக் கலா
சாதாரண தமிழில் தந்திருக்கிறாள்
விதைகளை
விருட்சமாக்கும் வித்தைகளை
கலா கற்றிருக்கிறாள்
அதனால்தான்
பலர் மனதை தொட்டிருக்கிறாள்
கலாவின் கவிதைக்குள்
ஒரு காவியம்
கண்மூடிக் கிடக்கிறது
ஓவியம் ஒன்று
அங்கே உயிர் பெற்று நடக்கிறது
கலாவின் கவிதைகள்
காயப்பட்ட மனசுகளுக்கு
கட்டுப் போடக்கூடியவை
மனதை
தொட்டுப் போகக் கூடியவை
கலா
இந்த நூலுக்கு புதியவள்
ஆனால்
முகநூலுக்குப் பழையவள்
தன் கவிதைகளால்
ஏண்ணற்ற உள்ளங்களை
தன் இதய அறைக்குள்
இருப்பாட்டிக் வைத்திருக்கிறாள்
கலாவின்
பாக்களைப் படிக்கின்ற போது
உடல் மீது
பூக்கள் வந்து விழுவது போல்
ஒரு
புத்துணர்ச்சி புறப்பட்டு வருகிறது
ஓசோன் படலத்தில்
ஓட்டையென்று
ஓப்பாரி வைக்கவில்லை கலா
இந்த
சமூகத்தின் அவலக்களுக்; கெதிராக
ஆவேசம் கொண்டிருக்கிறாள்.
நிலாவெளிக் கடற்பரப்பில்
நீந்தி விளையாடும்
சின்னக் குழந்தைகளாய்
கலாவின் கவிதைகளில்
வசனங்கள்
வளைந்து விளையாடுகின்றன.
கலா
மீன்பாடும் தேனாட்டின்
மீனவக் கிராமத்தில் பிறந்தவள்.
இப்போது
வானத்து மீன்களுக்கு
பாடம் நடாத்திக் கொண்டிருக்கிறாள்.
கலாவின் கவிதைகள்
புதிய விடியலுக்கான
பூபாள ராகம்
அழுகின்ற குழந்தைக்கு
அமுதூட்டும் அம்மாவின் தாகம்
தாகம் தணிந்து விடும்
படகும்
கரை சேர்ந்து விடும்
நாம் துடுப்பாக இருந்தால்..
கடைசியாக..
கரை சேராப் படகென்னும்
கவிதை நூல்
கரை சேர உதவியிருக்கும்
மலேசிய மண்ணின் மாணிக்கம்
என்
மதிப்புக்குரிய அம்மா
கன்னியா குமரிக்கும்
அவரோடு கைகோர்த்திருக்கும்
என்
இதயத்துத் தாரகை
கிழக்கின் ஒளி ஹிதாயா றிஸ்விக்கும்
நன்றிகூறியவனாய்..
விடைபெறுகிறேன்
- மதியன்பன்
24.07.2016