24 April 2014

மஹிந்த மன்னருக்கு மதியின் மடல்..

மதியன்பன்

சின்னவன் நான்
என்றாலும்
சிந்திக்கத் தெரிந்தவன்
இது புத்திமதியல்ல
வெறும்
விண்ணப்பம் மாத்திரம்தான்..

மன்னா..
நாட்டுக்குத் தலைவன் நீங்கள்
உங்களை மிஞ்சி
ஒருவரும் வாலாட்ட முடியாது
புலிகளையே
பூண்டோடு அளித்தவர் நீங்கள்


தேரர்கள் விடயத்தில்
ஏன்
தயக்கம் காட்டுகிறீர்கள்
ஆட்சி
ஆட்டம் காணும் என்ற அச்சமா..
அல்லது
சிறுபாண்மையினரை
அடக்கி ஒடுக்கும் திட்டமா..?

சட்டத்தையும் நீதியையும்
மல்வத்த பீடம்
சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறதா..
எதற்காக மன்னா
நீதி மன்றமும் பொலிஸாரும்..?

சின்னவன் நான்
இது புத்திமதியல்ல
வெறும்
விண்ணப்பம் மாத்திரம்தான்..

பள்ளிவாயல்களை
திறந்து வைக்கும் நீங்கள்
அதனை
உடைத்தளிப்பவர்களுக்கு
ஊக்கம் கொடுக்கலாமா..?
மன்னா..
பௌத்த சின்னத்தை
பச்சை குத்தினால்
அது தேச துரோகம்..
பன்றியின் உருவத்தில்
அல்லாஹ் என்றெழுதினால்
அது
பாவமில்லையென்று
பௌத்த மதம் சொல்கிறதா..,?

அமைச்சுக்குள்
அத்துமீறிப் நுழைகிறார்கள்
உள்வீட்டு
சமையலறைக்குள்
அவைகள் நுழைவது போல்..
கைது செய்ய முடியாத
காரணமென்னவோ...?

பீனல்கோட் சட்டம்
ஏன்
பின்பற்றப்படுவதில்லை
காவி உடைகளெல்லாம்
காவல் நிலையத்தால்
கைதைகிவிடும் என்பதாலா..?

புரியவில்லை
பொதுபல சேனாவின்
போக்கும் நோக்கும்..
இவர்களின்
இறுதி இலக்குத்தான்
என்னவென்றும் தெரியவில்லை.

மன்னா..
இத்தனை காலமாக
இவர்களை
கண்டிக்காத தண்டிக்காத
கண்டு கொள்ளாத காரணம் என்னவோ..?

சின்னவன் நான்
இது புத்திமதியல்ல
வெறும்
விண்ணப்பம் மாத்திரம்தான்..



























No comments:

Post a Comment