24 March 2013

நினைக்க வலிக்கிறது நெஞ்சு


காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் நடாத்திய கவியரங்கில்  பாடிய கவிதை
தலைவர் - பாவலர் சாந்தி முகைதீன்

 – மதியன்பன்-

நெஞ்சு வலிக்கும் சம்பவங்கள்
இங்கே
தீப்பளம்பாய் எரிமலையாhய்
சுழன்றடிக்கும் கூறாவளியாய்
ஒலித்து ஓய்ந்தது..

புயலுக்குப் பின்
அமைதியாக நான்.


இறந்த காலத்தின்
இடுப்பை
இப்போது கொஞ்சம்
இலேசாகத் தடவிப் பாருங்கள்

அங்கே,
ஒரு துயர ராத்திரியை
தோளில் சுமந்து வந்த
தொன்னூறாம் ஆண்டின்
ஆகஸ்ட் மாதத்தின் மூன்நாம் நாள்.
இப்போது
நினைவுக்கு வருகிறதா..?

சனிக்கிழமையை சந்திப்பதற்காக
வெள்ளிக்கிழமை
தன்
விடியலை
முடித்துக் கொண்ட நேரம்.

காலம்
இரவுப் போர்வையை
தன் கழுத்துவரை
இழுத்துக் கொண்ட போது

வீதிகள் வெறிச்சோடி
மின்விளக்குகள்
தங்கள் விழிகளை
மூடிக் கொண்ட வேளை...

இரவு நேரத்து
இறுதித் தொழுகைக்காக
மக்கள்
இறையி;லம் இரண்டில்
இலயித்த வேளை..
விடுதலை விரும்பிகள்
படு கொலை நடத்தினார்களே..

மீரா பள்ளியினுள்
மிம்பரின் முன்னாலே
இரத்த வெள்ளத்தில்
நம் இரத்த உறவுகள்
குசைனியா தைக்காவுள்
குருதிக் கடலில்
நம்
குடும்பத்துக் கொழுந்துகள்

உடல் சிதைந்து
குடல் குலைந்து
அங்கங்கள் வேறாகி
அழுகுரல் வான் பிழக்க
துடிதுடித்து இறந்தார்களே
நினைவுக்கு வருகறதா..?

இப்போது சொல்லுங்கள்
உங்களுக்கும்
நினைக்க
நெஞ்சு வலிக்கிறதா இல்லையா..?

சந்தியில்
சைக்கிள் குண்டு வெடித்து
சஹீதாகிப் போன
எங்கள்
கஹ்பாவின் முகங்களை
எண்ணிப் பார்க்கையில்
உங்களுக்கும்
நெஞ்சு வலிக்கிறதா இல்லையா..?

ஏறாவூரில்
இரண்டு கிராமங்களை
ஓரிரவில்
இத்தாவுக்குள் வைத்த
அந்த
இரத்த ரதாத்திரியை

ஒருவாரக் குழந்தைகளை
கொடூரமாய்
துண்டம் துண்டமாய்
வெட்டித்தள்ளிய
கோரப் புலிகளின்
அந்த
கொடூரக் காட்சியை

இப்போது சொல்லுங்கள்
உங்களுக்கும்
நினைக்க
நெஞ்சு வலிக்கிறதா இல்லையா..?

குருக்கள் மடத்தில்
குருதிக்கு பதிலாக
கலிமாவைச் சொல்லி
சப்தமேயில்லாமல்
சஹீதாகிப் போனார்களே
இன்னும்
எண்ணிக்கை தெரியாமல்
இனம்காண முடியாமல்
அவர்களை
புலிகளுக்கு
பலிகொடுத்து விட்டு
குர்ஆன் ஓதி
கூடிக் கலைந்தோமே
இப்போது
நினைவுக்கு வருகிறதா..?

வெள்ளை நிற வேனில்
வெடிகுண்டு வைத்து
பிள்ளை குட்டிகளை
பிய்த்தெறிந்த
அந்த
அக்கினித் தனத்தின்
அந்தகார நினைவுகளை
அளிஞ்சிப் பொத்தானையில்
அர்த்த ராத்திரியில்
அறுபது பேர்
அறுபட்டு இறந்தார்களே
ஏதுமறியாத
ஈரக் குழந்தைகள்
இரத்த வெள்ளத்தில் மிதந்தார்களே

காத்தான்குடி கர்பலா
பாலமுனை படுவான்கரை
ஒல்லிக்குளம்
நொச்சிமுனை கீச்சான்பள்ளம்
இப்படி
எத்தனை கிராமங்கள் இன்னும்
இடிபட்டுக் கிடக்கின்றன.
இத்தாவுக்குள் இருக்கினள்றன.

பள்ளிக்குள்
பாவிகளின் அட்டகாசங்கள்
இன்னும்
படம்பிடித்துக்காட்டுக் காட்டுகின்றன.
புனித வேதங்கள்
அங்கே
புதைபட்டு சிதைவுற்று
அழிந்து போய்க் கிடக்கின்றன.

அகதி முகாம்களில்
ஆயிரக் கணக்கானோர்
அடைபட்டுக் கிடக்கிறார்களே
உணவின்றி உடையின்றி
உறங்க இடமின்றி
வாழ்வை
மறந்து கிடக்கிறார்களே

இவை மட்டுமன்றி
ஒரு வேளை உணவிற்கு
ஒப்பாரி வைத்து
ஊருக்குள் பலர்
உட்காந்திருக்கிறார்களே

இப்போது சொல்லுங்கள்
உங்களுக்கும்
நினைக்க
நெஞ்சு வலிக்கிறதா இல்லையா..?
நிச்சயம்
உங்களுக்கும், எனக்கும்
நினைக்;க
நெஞ்சு வலிக்கும்
நம் நெஞ்சுக்குள் ஈமானிய ஈரமிருந்தால்...

No comments:

Post a Comment