1998 ஆம் ஆண்டு இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியின் கவியரங்கில் பாடிய கவிதை.
தலைமை- கவிஞர் எஸ்.எச்.எம்.நிஹ்;மத்.
–மதியன்பன்-
ஈமானிய ராஜ்யத்தின்
இஸ்லாமிய இளைஞனே
இன்னும் என்ன உறக்கம்
எழுந்து வா..
உலக வலயத்துள்
அப்பாவிகளின் ஒப்பாரிகள்
இன்னும்
அடங்கிப் போகவில்லை.
ஆயுத மோதலைக் காதலிக்கும்
அராஜக உள்ளங்கள்
அத்துமீறி ஆட்சி செய்யும்
அறிவு கெட்ட ஜீவன்கள்.
அனாச்சாரங்களுக்கு
அனுமதி வழங்கும்
அறிவு கெட்ட இதயங்கள்
இப்படி
அகில உலகமே
அழிவை நோக்கிப் போகையில்
இஸ்லாமிய இளைஞனே
இன்னும் என்ன உறக்கம்
எழுந்து வா..
குர்ஆனின் ஆட்சியினை
குழி தோண்டிப்
புதைக்க நினைக்கும்
குப்ரிய ஏஜண்டுகள்
வல்லரசு என்னும் பெயரில்
நல்லரசு நடத்த மறுக்கும்
நன்றி கெட்ட
நரிக் குறவர்கள்
கோடாரிக் காம்புகளாய்
குலத்துக்கே குழிவெட்டும்
கொள்கையற்ற வாதிகள்.
இவர்களின் மத்தியில்
இன்னல்படும்
இஸ்லாமிய இதயங்கள்.
ஈமானிய ராஜ்யத்தின்
இஸ்லாமிய இளைஞனே
இன்னும் என்ன உறக்கம்
எழுந்து வா..
முஸ்லிம் சமூகம் இன்று
முக்காட்டுக்குள்
முடங்கிக் கிடக்கிறது.
கர்பலாக் களத்து
காவிய நாயகன்
இமாம் குஸைன் ரலியின்
இலட்சிய வேட்கையினை
இளைஞனே எண்ணிப்பார்.
இரும்பு இதயங்களும்
இளகிப் போகும்
நம் இனத்தவர்களின்
இறப்புகளையும் எண்ணிப்பார்.
விடுதலைக்காய்
காத்தான்குடியில்
பள்ளிவாயல்களில் நடந்த
அந்தப்
படுகொலைகளையும் எண்ணிப்பார்.
அர்த்த ராத்திரியில்
ஏறாவூரில்
அறுபட்டுப் போய்;
இரத்த வெள்ளத்தில்;
இறந்து கிடந்த
இரத்த உறவுகளையும் எண்ணிப் பார்.
ஈரக் குழந்தைகளையும் எண்ணிப்பார்.
பரம்பரையாய் ஆண்டுவந்த
பள்ளி வாயல்கள் இன்று
பாவிகளின்
கழிவறைகளாய்
காட்சி தருவதைப்பார்.
குடியும்,கூத்தும்,கும்மாளமும்
அங்கே
கூடாரம் அமைத்து
குடும்பம் நடத்துவதைப் பார்.
புனித மறை அர்குர்ஆன்
இன்று
புல்லுருவிகளின் கைகளினால்;;;;;
பொசுங்கிப் போனதை எண்ணிப்பார்.
நம் மனசுகள்
நசுங்கிப் போனதை
உன் கண்ணில் பார்..
ஆப்காணிஸ்தான், அல்ஜீரியா
காஸ்மீர்
இங்கெல்லாம்
குப்ரியத்தை
சவக்குழியில்
போட்டுப் புதை.
ஈமானிய ராஜ்யத்தின்
இஸ்லாமிய இளைஞனே
இன்னும் என்ன உறக்கம்
எழுந்து வா..
சீதனக் கொடுமையினால்
சீரழிந்த குமருகள்
சிந்துகின்ற கண்ணீரைப் பார்.
உழைத்துழைத்து ஓடாகி
உருக்குலைந்த ஏழைகள்
உலர்த்துகின்ற
வியர்வையின்
விளைச்சலைப்பார்.
ஒரு வேளை உணவுக்கும்
உடல் மறைக்கும் ஆடைக்கும்
தெருவோரம்
நம்
தேசத்துத் தாய்மார்கள்
தேம்பியளும்
காட்சியினைப் பார்.
மும்மாரி பொழிந்து வந்த
மூன்றாம் உலக நாடுகளில்
இப்போது
குண்டுமாரி பொழிகின்ற
கோரக் காட்சியினைப் பார்.
கலையும் கலாச்சாரமும்
காலூன்றி வந்த
நம் தேசமெல்லாம்
இன்று
கொலையும் விபச்சாரமும்
குடும்பம் நடத்துவதைப் பார்.
குதூகலித்து வாழ்வதைப்பார்..
பலஸ்தீன மண்ணுக்காய்
பந்தாடிய வீரர்கள்
யஹ்;யா அய்யாஸ், முஹம்மது சரீப்
இவர்களின்
ஆற்றலைக் கொஞ்சம்
சோற்றோடு சாப்பிடு.
முஹம்மது குத்ப், யூசூப் அல் கர்ழாவி
ஹஸனுல் பண்ணா
இவர்களின்
இலக்கினை நோக்கி
உன்
இலட்சியப் பயணம் தொடர்.
ஈமானிய இளைஞனே
எத்தனையோ கிராமங்கள்
இன்னும்
இத்தாவுக்குள் இருக்கின்றன.
சொத்து சுகம்
சொந்தம் இழந்து
அலை மோதும
நம்
அடுத்தவர்களையும் எண்ணிப்பார்.
நம்மை;
கெடுத்தவர்களையம் எண்ணிப்பார்.
கொலை கொள்ளை கற்பழிப்பு
ஆட்கடத்தல்
இப்படி
தொடர்ந்து வரும் துன்பங்களால்
நம்மினம்
அடைந்து வரும் இன்னல்களை
அதிகமதிகம் எண்ணிப்பார்.
நமக்கு
மையத்துக்கள் மலிந்து விட்டதால்
தினந்தோறும்
ஆறு நேரத் தொழுகை
அவசியமாகி விட்டதையும்
அவசியம் எண்ணிப் பார்.
ஈமானிய ராஜ்யத்தின்
இஸ்லாமிய இளைஞனே
இன்னும் என்ன உறக்கம்
எழுந்து வா..
அகதி முகாம்கள்
நமக் கென்ன
அதிதி முகாம்களா..
அங்கெல்லாம் நம்மவர்கள்
அடிப்படை வசதியின்றி
அழிந்து போவதைப் பார்.
ஈமானிய இளைஞனே
யுத்தமேகம் சூழ்ந்திருக்கும்
ரத்தபூமியை
இந்த புத்தர் பூமியை
சுத்த பூமியாhய் மாற்றிட
சூறாவழியெனச் சுழன்று வா..
சுவர்க்கத்து வாசலைத் திறந்து தா
நாளை
நமக் கென்று
பொழுதொன்று புலரும்
அந்தப் பொழுதில்
குர்ஆனின் ஆட்சி மலரும்.
ஆகவே-
ஈமானிய ராஜ்யத்தின்
இஸ்லாமிய இளைஞனே
இன்னும் என்ன உறக்கம் எழுந்து வா?
No comments:
Post a Comment