காத்தான்குடிக்கு வருகை தந்து கொடிய விசப்பாம்புகளுடன் கூண்டுக்குள் விளையாடிய கிண்ணஸ் சாதனை வீரர் பரீட் நசீர் அவர்களின் சாதனையை வியந்து எழுதிய கவிதை. 06-07-1996.
– மதியன்பன்-
பரீட் நசீர்,
விசப் பாம்புகள்
உன்னை
வீரும்பி வரக் காரணமென்ன?
நிஜப் பாம்புகளையெல்லாம்
நீ
நேசித்துக் கொள்வதாலா..?
பிடித்துவந்த பாம்பெல்லாம்
உன்னை
கடித்துவிடும் என்று
நாம்
கனாக்கண்டோம்.
நடந்தது என்ன.?
வந்த பாம்பெல்லாம்
உன்னிடம்
வணக்கம் சொல்லி
இணக்கமாகிவிட்டதே..
பரீட் நசீர்
நீ
வித்தியாசமானவன்தான்
கழுத்துக்கு
மாலை வேண்டுமென்று
பலர் காத்திருக்க
நீ மட்டும்
கழுத்துக்கு
பாம்பு வேண்டு மென்று
பாத்திருக்கிறாய்.
விசப் பாம்புகளெல்லாம்
உன்னைக் கண்டு
சவப்பாம்புகளாய்
சரிந்து போகிறதே
இதன் சரித்திரம் என்னவோ..?
பாம்பும் கீரியும்
பரம விரோதிகள்
ஆனாலுன்
கண்ணாடிக் கூண்டுக்குள்
இவையிரண்டும்
காதன் காதலியாய்
கட்டிப்புரள்கிறதே...
இதன் காரணத்தைச் சொல்ல மாட்டாயா..?
பாடலுக்கு ஆடும் போதெல்லாம்
பாம்புகள் உன்னை
கூடலுக்கு அழைக்கிறதே
உன்னைக் கொஞ்சுவது
அவற்றுக்கு குதூகலம் போலும்.
மலைப்பாம்பு
உனக்கென்ன மனைவியா..?
உன் உடல்பரப்பை
அது
படுக்கையாய் பாவிக்கிறதே..?
பாம்புகளுக்கு
பாடம்; சொல்லிக் கொடுத்தவனே
பரீட் நசீர்
படை நடுங்கும்;
பாம்புகளையெல்லாம்
துடை நடுங்கவைத்த
உன்
துணிச்சலைப் பாராட்டுகின்றோம்.
கண்ணாடிக் கூண்டுக்குள்
நீ
கருநாகங்களைக்
கட்டியணைக்கும்போது
நாம்
கண்கலங்கிப் போகின்றோம்.
உன்
உலக சாதனையை முறியடிக்க
இனியொருவர் பிறந்து வர வேண்டும்
No comments:
Post a Comment