16 April 2013

நாளைய தலைப்புச் செய்தி...

-மதியன்பன்


சீதேவிகளா வாங்க..
சீக்கிரம் வந்து பாலத்தத் திறங்க..
இல்லாட்டி
பலகாரப் பானையாவது திறங்க..
ஆனா
முஸ்லிம் பெண்களுடைய
பர்தாவ திறக்க ஆசப்படாதீங்க..


தலைவர்களே..!
நீங்களும் வருவீங்கதானே..
கூடவே இருந்து கும்பிடு போடுங்க..
கூட்டிக் கொடுங்க சனத்த..
முடிந்தா
மூக்கு முட்ட புரியாணி கொடுத்து அனுப்புங்க..

உலமாக்களே...
உங்களுக்கு இடமில்லையாம்
உங்கிட ஆசி தேவையுமில்லையாம்.
இருந்தாலும் போங்க..
ஓரமா நிண்டு துஆ ஓதிட்டு வாங்க..

ராத்தாமாரே..
உங்களுக்குத் தேவ புதினம்தானே..
நம்ம ஊருப்பாலம் றோட்டுக்கு கீழே
இந்தப்பாலம் தண்ணிக்கு மேலேயாம்
போய் பாத்திட்டு வாங்க..

இளைஞர் குழாமே..
வழமைபோல் நீங்களும் போங்க
வான் பிழக்க
தக்பீர் முழக்கம் செய்யுங்க..
திரும்பி வாருங்க.. திருப்தியுடன் தூங்குங்க..
நமக்கென்ன கவல...

நாளைய தலைப்புச் செய்தி
இப்படியும் வரலாம்..
பௌத்த மதத்தை ஏற்காதவர்கள்
இங்கு வாழ முடியாது என்று...

- மதியன்பன் -

No comments:

Post a Comment