24 March 2013

என் பேனா

சாய்ந்த மருது தடாகம் கலை இலக்கிய மன்றம் நடாத்திய கவியரங்கில் பாடிய கவிதை
நாள்;; 14 - 11- 1999

– மதியன்பன்-

உலக மெல்லாம் சமாதானம் ஓங்க வேண்டும். எங்கள்
ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்
கலகமில்லா புத்துலகம் காண வேண்டும் - அதில்
கைகோர்த்து பல்லினமும் வாழ வேண்டும்.

உள்ளதை
உள்ளபடி சொல்லுவது
இந்த
ஒலிபெருக்கி ஒன்றுதான்
அதனால்
அதனையும் விழித்து...


முஸ்லிம்கள் இன்று
இஸ்லாத்தை
இரண்டாம் தாரமாய்
இனம் கண்டு வைத்துள்ளார்கள்.

ஹதீதுகளைச் சொன்னால்
சிலருக்கு
கணக்குப் பாடம்போல்
கசப்பாக இருக்கிறது.
குர்ஆனைச் சிலர்
இன்று
மரண வீடுகளுக்காகவே
மனப் பாடம
செய்து வைத்துள்ளார்கள்.

குர்ஆனை
குளிர்பாணமாக்கி
குளிப்பதற்கும் , குடிப்பதற்கும்
சட்டம் வகுத்துள்ளார்கள்

நோன்பு வந்தால்தான்
சிலரிடத்தில்
தொப்பியும், தஸ்பீஹூம்
தூசி தட்டப்படும்
இவை மாற
எங்கள் பேனாக்கள்
எழுத வேண்டும்

ஆயுதக் கலாச்சாரம்
நம்மை
அழித்துக் கொண்டிருக்கிறது
நாமின்னும்
வெள்ளைப் பிடவைக்கும்
பேரீத்தம் பழத்திற்கும்
விலை பேசிக் கொண்டிருக்கிறோம்.

பள்ளிகளுக்குள் பாருங்கள்
கஞ்சிப் பானைகளும்,
சோத்துப் பெட்டிகளும்
நம்மை
நலம் விசாரிக்கின்றன.
உலக சவால்களுக்கு
இவை
உதவும் கரங்களா என்ன..?

நாமின்னும்
கம்புக்கு மண்கூட்டி
கடலுக்கு சோறூட்டி
கடமை செய்து கொண்டிருக்கிறோம்.
இவை மாற
எங்கள் பேனாக்கள்
எழுத வேண்டும.

குழந்தைகளைக் கொஞ்ஞம்
குசலம் விசாரியுங்கள்
நடிகர்களின் நாமத்தை
நமக்கு
மனப்பாடம் சொல்லித்தரும்.

நபிகள் நாயகத்தை
மொழிய முடியாத மழழைகூட
;இன்று
வணக்கம் தாயகத்தை
வாய் நறையச் சொல்கிறது
நம்மவர் சக்தியெல்லாம்
சக்தியின்
காதலர் நேரத்தோடு
கடந்து போகிறது.

திறந்பாருங்கள் வானொலியை
குடும்ப விருப்பமாய்
நமது
குமருகளின் நாமங்கள்
பாத்திமா, பர்சானா.
பஸ்மியா என்றெல்லாம்
பட்டியல் விரிகிறது.
கட்டில் சமாச்சாரமெல்லாம்
காற்றோடு கலக்கிறது.

தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கு
நமக்கு
நேரசூசி தேவையில்லை
பள்ளிச் சிறார்கள்
அதற்கு
பாடம் சொல்லித் தருவார்கள்.

தொலைக் காட்சி நிகழ்ச்சியெல்லாம்
இன்று
தொல்லை தரும் காட்சியாட்சி.
சுவர்ணவாஹினி
நம் இளசுகளுக்கு
சுவர்க்க வாஹினியாய்
சுகம் கொடுக்கிறது.

திருமறையும், நபியுரையும்
நமக்கு
வழிகாட்டுமென
வள்ளல் நபி சொல்ல
இன்று
கிரிகெட்டும்;,ரீவியும்
வழி காட்டிக் கொண்டிருக்கிறது.
இவை மாற
எங்கள் பேனாக்கள்
எழுத வேண்டும.

தினமுரசின்;;;;;;
நடுப்பக்கத்திலும்
நடுப்பக்கம் பார்க்கின்றவர் நாம்.
இவை
இளசுகளுக்கு மட்டுமல்ல
கிழடுகளுக்கும்
கிளுகிளுப் பூட்டுகிறது.

ஜனனி மித்திரன்
ரோஜா இதழ்கள்தான்
நம் இளசுகளுக்கு
இதயத்துடிப்பாக இருக்கிறது.
சக்தியில்லை யென்றால்
நம்மவர்க்கு
எதிலும் சக்தியில்லை.

அதனால்தான்
நன்றி கெட்ட மனிதனை
ஆண்டவன்
சென்றியில் வைத்து சோதிக்கிறான்.
இவன்
மனிதனா.. இல்லையா..
அடையான அட்டையை
காட்ட வைக்கிறான்
மனிதம் இங்கே
மாண்டு போச்சி
இவை மீண்டு வர
நமது பேனாக்கள்
எழுதவேண்டும.

இலையுதிர் காலம் இப்போ
கொலையுதிர் காலமாய்
மாறிப் போச்சி
கலை கலாச்சாரமெல்லாம்
கொலை விபச்சாரமாய்
மாறிப் போச்சி

No comments:

Post a Comment